Skip to main content

தாமரை தமிழகத்தில் கண்டிப்பாக மலரும்.... அதனால்தான் திமுகவினரும் தற்போது வேல் எடுத்துள்ளனர் - நடிகர் ராதாரவி பேச்சு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

gh

 

சென்னையில் கராத்தே தியாகராஜன் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். வழக்கமான முறையில் பேசிய அவர், திமுகவை கடுமையாக சாடினார். அவர் பேசியது வருமாறு, "நீண்டநாட்களாக பாஜகவில் சேருமாறு அண்ணன் பொன்னார் அவர்கள் தொடர்ந்து என்னை அழைத்து வந்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் நானே பாஜகவில் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பேசுவதற்கு முன்பு இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் திமுக நண்பர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் அங்கே நின்றுகொண்டிருக்கும் அந்த நபர்கள் கடைசியாக வர வேண்டிய இடம் இதுதான். இதை விட்டால் அவர்களுக்கு வேறு வழி கிடையாது. முருகன் அவர்களை பாஜகவிற்கு அழைத்து வருவார். இந்த முருகன் பேரைத்தான் சீமான் தொடர்ந்து உச்சரித்து வருகிறார். அதனால்தான் எங்களுடைய தலைவர் பேரும் கூட முருகன் என்று இருக்கிறது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும், வந்து 10 நிமிடமாவது பேச வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் இரண்டு நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நான் வருகிறேன் என்று சொல்லியும், அண்ணா கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

 

நான் அவரைப் பற்றி 10 நிமிடத்தில் என்ன பேச முடியும். 10 நிமிடத்தில் பேசக் கூடிய ஆளா அவர். கராத்தே தியாகராஜன் மட்டும் இல்லை என்றால், நான் சட்டமன்ற உறுப்பினரே ஆகி இருக்க முடியாது. அம்மா அவர்கள் இருக்கும்போது நான் தேர்லில் போட்டியிட்டபோது ஒரு குறிப்பிட்ட வார்டில் மா.சுப்பிரமணியன் அவர்கள் பலமாக ஆளுமை செலுத்திக்கொண்டிருந்தார். அம்மா அந்த வார்டை சொல்லி, ‘அந்தப் பகுதியில் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது’ என்று கேட்டார். நான் மா.சுப்பிரமணியன் அங்கு பலமாக இருப்பதாக கூறினேன். அப்படியா என்று கேட்ட அம்மா, உடனடியாக அந்த பகுதிக்குக் கராத்தே தியாகராஜனை அனுப்பி வைத்தார். வேறு யாரும் அம்மா நினைவுக்கு வரவில்லை. உடனடியாக அவரை அந்தப் பகுதியில் தேர்தல் பணியைக் கவனிக்க போட்டார்கள். ஆனால் கராத்தே தியாகராஜனைப் பார்த்து என்னிடம் ஒரு போலீஸ் அதிகாரி சொன்னார், ‘இவரிடம் ஜாக்கிரதையாக பழகுங்கள்’ என்று. அவர் எவ்வளவு மோசமோ அதை போல நானும் மோசமானவன். இந்த மோசமும், மோசமும் ஒன்னா சேர்ந்தால்தானே உருப்பட முடியும். அவரைப் பற்றி நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. 

 

இன்றைக்கு தாமரை மலராது என்று தொடர்ந்து சிலர் பேசி வருகிறார்கள். தாமரை தமிழகத்தில் நிச்சயம் மலரும். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால் தாமரை இல்லை என்று அர்த்தம் இல்லை. தண்ணீர் வருகின்றபோது தாமரை மேலே தெரியும். எனவே தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. நமக்கு திமுகவைப் பற்றி பயப்பட தேவையில்லை. நம்முடைய வேலையைப் பாதி திமுக தலைவரே செய்து கொண்டுள்ளார். யானை சாணம் போட்டால் லத்தி என்று சொல்லுவோம், மாடு போட்டால் சாணம் என்று சொல்லுவோம். ஆடு போட்டால் புழுக்கை என்று சொல்லுவோம். சாணி போடுவதிலேயே இவ்வளவு இருக்கிறது. அண்ணா யானை மாதிரி திமுகவை வைத்திருந்தார், ஆனால் தற்போது நிலைமை அப்படியா இருக்கிறது. ஸ்டாலின் சொல்கிறார், ‘நாங்கள் பார்க்காத போலீசா’ என்று, நான் அவருக்குச் சொல்கிறேன், எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். அதிகம் பேசினால் அவர்களும் தங்களுடைய வேலைகளைக் காட்டுவார்கள். உங்கள் அப்பாவிடம் போய் இதைப் பற்றி நீங்கள் கேட்க வேண்டும். எங்கள் தலைவர் வேல் எடுத்துக்கொண்டு சென்றதையடுத்து இன்றைக்கு வேலை இல்லாதவன் எல்லாம் வேல் எடுத்துக்கொண்டு மாவட்டம் மாவட்டமாக சுற்றுகிறார்கள். இவர்கள் எப்படி சுற்றினாலும் பாஜக தமிழகத்தில் கால் பதிப்பதைத் தடுக்க முடியாது" என்றார்.

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்