Skip to main content

லெனினின் நண்பர்... தாயைப் படைத்தவர்!  

Published on 27/03/2018 | Edited on 29/03/2018
maxim

 

 

தான் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் நாட்டை சுரண்டல் ஆட்சி செய்யும் குடும்பத்தாரிடமிருந்து மீட்க வேண்டும் என தன் எழுத்துக்கள் வழியாகவும், உடல் உழைப்பு வழியாகவும் போராடியவர் மாக்சிம் கார்க்கி. அவர் எழுதிய எழுத்துக்களை ஒற்றித்தான் இன்றைய பல எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.  
 

ரஷ்யாவில் நிஸ்னி நவ்கிரோட் என்கிற கிராமத்தில் 1868 மார்ச் 28ந்தேதி பிறந்தார் மாக்சிம் கார்க்கி. அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் தான் இவரது இயற்பெயர். 5 வயதில் தந்தை இறந்துவிட்டார். தாய் உயிருடன் இருந்தபோதும் தாயன்பு கிடைக்காமல் பாட்டி அக்குலினா அரவணைப்பில் வளர்ந்தார்.
 

குடும்பத்தில் வறுமை, இதனால் பள்ளிக்கு போவதை 7 வயதிலேயே நிறுத்திவிட்டார். 8 வயதாகும்போது வேலைக்கு சென்றார். அங்கு பல தரப்பினரோடு பழகினார், அதோடு கொஞ்சம் படித்து வைக்கலாம் என தனிப்பட்ட முறையில் படிக்கத் துவங்கினார். இத்தாலி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி மொழிகளை கற்றுக்கொண்டார்.
 

1892ல் இவர் முதல் சிறுகதை 'மகர் சுத்ரா' என்கிற தலைப்பில் மாக்சிம் கார்க்கி என்கிற பெயரில் எழுதினார். அது வெளிவந்தபின் தொடர்ந்து அந்த பெயரிலேயே எழுதத்துவங்கினார். 1899ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சியை எதிர்த்து புரட்சிக்கர கட்டுரைகளை எழுதி வந்தார். இவரது எழுத்துக்கள் அனைத்தும் பாமர மக்கள் அரசாங்கத்தை நோக்கி கேள்வி கேட்பது போலவே இருக்கும். இதனால் இவரது எழுத்துக்கள் தணிக்கைக்கு உள்ளாகின. அதோடு கார்க்கி எழுதிய நாடகங்கள், புதினங்கள், கதைகள் வெளிவரும்போதுயெல்லாம் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கபடுவது வாடிக்கையானது.

 

stalin maxim gorky

கார்க்கி - ஸ்டாலின் 

 

1906ல் 'மதர்' என்கிற பெயரில் இவரது நாவல் வெளிவந்தது. ரஷ்யாவின் ஜார் மன்னராட்சிக்கும் – அதை எதிர்க்கும் ஒரு புரட்சியாள இளைஞனுக்குமான போராட்டத்தில் அந்த இளைஞனின் தாயின் பங்கு குறித்ததே தாய் நாவலின் மையம். ஆட்சியை எதிர்த்து போராடும் தன் இளவயது மகனை நினைத்து அழும் தாய், அவனை தடுக்கிறாள். அந்த மகன் அதை மீறி நாடே முக்கியம் என புரட்சிக்கருத்துக்களை தொழிலாளர்கள் மத்தியில் பேசுகிறான். அவனது கருத்துக்களை படிப்படியாக உள்வாங்கும் அந்த புரட்சிக்கர இளைஞனின் தாய், மகனின் போராட்டத்துக்கு படிப்படியாக உதவி அவளும் ஓரு புரட்சிவாதியாக மாறியதே நாவலில் விவரிக்கப்பட்டுயிருக்கும். இது ரஷ்யாவில் எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் உலகம் முழுக்கவே இந்த நாவல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நாவலே உலக அளவில் கார்க்கியை பிரபலமடைய வைத்தது.
 

மாமேதை லெனினோடு சேர்ந்து ரஷ்ய புரட்சிக்கு நிதி திரட்ட உலகின் பல நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டினார். அதோடு, இவர் சம்பாதித்ததை நன்கொடையாக ரஷ்ய புரட்சிக்கர தொழிலாளர் இயக்கத்துக்கு வழங்கினார். புரட்சி வெற்றி பெற்றபோது ஆனந்தம் அடைந்தார். தனது கருத்தை யாருக்காகவும், எதற்காகவும் வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டார். லெனின் முன்பே அவரது தவறுகளை கூறுவார். ஆனாலும் அவர்களது நெருங்கிய நட்பு என்றும் உடைந்ததில்லை. பென்சிலால் மட்டும்மே கார்க்கி தனது எழுத்துக்களை எழுதுவார். அதேபோல் சிறு வயது முதலே ஒரு குறிப்பேட்டை தன்னுடன் வைத்திருப்பார், தோன்றும் கருத்துக்களை உடனுக்குடன் அதில் குறித்துவைத்துக்கொள்வது அவரது வாடிக்கை.
 

வறுமையால் சிறு வயதில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று அது தோல்வியில் முடிந்தது. காயத்தோடு உயிர் பிழைத்தார். அதன்பின் சுடுகாட்டில் வேலை பார்த்தார். இதுதான் அவரை எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும் மானப்பாங்கை உருவாக்கி தந்தது. தான் வளர்ந்து சமூகத்தில் ஒரு இடத்தை அடைந்தபின், சாலையோரம் உள்ள அனாதை பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்து உணவு வழங்குவது, கிருஸ்துமஸ் உட்பட திருவிழா நாட்களில் அவர்களுக்கு புத்தாடை வாங்கி தருவது போன்றவற்றை செய்து தந்தார்.
 

அதோடு, வெளியே செல்லும்போது தனது கோட் பாக்கெட்டில் சாக்லெட் உட்பட இனிப்புகளை எடுத்துச்செல்வார். வழியில் தென்படும் அனாதை சிறுவர்களுக்கு அதை வழங்கி அவர்கள் மகிழ்வோடு உண்பதை காண்டுவிட்டு செல்வார். தான் அநாதையாக சாலையில் திரிந்த போது தனக்கு கிடைக்காததை தற்போது தன்னால் முடிந்த அளவுக்கு அதே நிலையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கிவந்தார்.
 

மனைவி பெஷ்கோவா. இந்த தம்பதியரின் மகன் தான் இலக்கியத்தில் கார்க்கிக்கு எல்லாமுமாக இருந்தார். மகன் பல மொழி அறிந்திருந்தது, அவர் மொழி இலக்கியத்தை, கதைகளை, கட்டுரைகளை மொழி பெயர்த்து தந்தைக்கு செல்ல அவர் அதை உள்வாக்கிக்கொண்டார். அந்த மகன் இளம் வயதிலேயே இறந்தது கார்க்கிக்கு பெரும் துயரத்தை வழங்கியது.
 

1936 ஜீன் 16ந்தேதி மறைந்தார். அவர் எழுதி வைத்திருந்த கவிதைகள் அவர் இறந்தபின்பே புத்தகமாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

 

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.