Skip to main content

என்னை விட்டு தொலையுங்கள்;எடப்பாடி பழனிச்சாமி குமுறல்!! 

Published on 28/08/2018 | Edited on 29/08/2018

 

edapadi

 

 

 

 

அதிமுகவில் ஓபிஎஸ் அணி பிரச்சனையை தூண்டிய பிறகு அதை சமாளிக்க முடியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திணறுகிறார். இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணியின் நிர்வாகியான அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமயை இன்று சந்தித்தார். அதில் தங்களது ஆதரவாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை அதன் வெளிப்பாடாக தற்போது நடைபெற்ற வடசென்னை மீனவர் சங்க தேர்தலில் ஜெயக்குமார் அமைச்சர் அறிவித்த நபர்களே பொறுப்பாளர்களாக போட்டுள்ளார்கள்.  இது நியாயமா என்று கேட்ட அவர், இபிஎஸ்-ஓபிஎஸ் அணி இணையும் பொழுது என்ன கோரிக்கை பேசப்பட்டது அது இதுவரையிலும் நிறைவேறவில்லை. கட்சியில் என்னை அவைத்தலைவராக அறிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய நீங்கள் இல்லை அம்மாதான் அறிவித்தார். அதை தொடர்ந்து இப்பொழுதும் நான் அந்த பதவியில் இருக்கிறேன் எனக்கு என்ன மரியாதை. கட்சி நடவடிக்கையில் மற்றும் ஆட்சி அதிகார நடவடிக்கையில் முழுக்க முழுக்க நீங்களே செயல்படுகிறீர்கள். மரியாதைக்காக ஓபிஎஸ்சும் ஏற்றுக்கொள்கிறார். வருமான வழியை மட்டும்  பார்க்கிறீர்கள் கட்சியை பார்க்கவில்லை ஆகவே கட்சி இனிமேல் உங்கள் வசம் இருக்க எனக்கு விருப்பம் இல்லை ஒருங்கிணைப்பு குழு என்னாச்சு எந்த நிர்வாகிகளும் இதுவரை பேசவில்லை. அம்மாவின் ஆசிபெற்ற ஓ.பன்னீர்செல்வதை புறக்கணித்து கட்சியையும், ஆட்சியையும் நடத்த சொல்லி உங்களுக்கு உத்தரவுவிட்டது யார். எங்களிடம் ஏற்கனவே 12 எம்.எல்.ஏக்களுடன் இப்பொழுது 33 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் பட்டியல் போடட்டுமா என காரசாரமாக மதுசூதனன் எடப்பாடியிடம் ஏகிற ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எல்லாத்தையும் ஒருவாரம் கழிச்சு பேசிக்கலாம் எனக்கூறி மதுசூதனனை அனுப்பிவிட்டார்.

 

 

 

 

இதன் பிறகு தனது சம்பந்தி முறையாகிற அமைச்சர் தங்கமணியை தொடர்பு கொண்டு பிரச்சனை ஓவரா இருக்குது என்ன செய்யலாம் எனக்கேட்ட போது அமைச்சர் தங்கமணி நீங்க ஊருக்கு வந்துருங்க அப்பறம் மெல்ல பேசிக்கலாம் என்றார். ஆனால் முதல்வர் எடப்பாடி  என்னை விட்டு தொலையுங்கள்  சமாளிக்கவே முடியவில்லை  என்றார் அதற்கு அமைச்சர் தங்கமணி இங்க வந்துருங்க பேசிக்கலாம் என்றார். இதனால் 28-ஆம் தேதி இரவு தனது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி 29-ஆம் தேதி காலை சேலம் வந்து அநேகமாக வருகிற 2-ஆம் தேதி வரை ஏறக்குறைய 5 நாட்கள் உட்கட்சி பிரச்சனையால் சேலத்தில் உள்ள தனது சொந்த  கிராமமான எடப்பாடியில்  முகாமிடுகிறார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.