Skip to main content

நான் வக்கீல் குமாஸ்தா, நான் டாக்டரை பார்க்க வந்தேன்... ஆசிரியர் நக்கீரன் கோபாலைக் காண தலைவர்கள் சொன்ன காரணங்கள்

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
nakkheeran gopal


 

கடந்த ஒன்பதாம் தேதி (09.10.2018) காலை ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், என அனைவரும் ஒன்று திரண்டனர். மாலை நீதிபதி கோபிநாத் வழக்கில் முகாந்தரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்தார். ஆசிரியர் கைது செய்யப்பட்டது முதல் விடுதலை செய்ததுவரை பலரும் அவரை சென்று சந்தித்தனர்.  ஆசிரியரை சந்திக்க தாங்கள் என்னென்ன காரணங்கள் கூறினோம் என, விடுதலை நாளேட்டின் சார்பில் நடந்த பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும் என்ற பாராட்டு விழாவில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டனர்.
 

ஆசிரியர் கைதுசெய்யப்பட்டவுடன் முதலில் எதிர்வினையாற்றிவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், சிந்தாரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு ஆசிரியரைக்காண சென்றார். அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அப்போது அவர் நான் இங்கு அரசியல் கட்சி தலைவராக வரவில்லை. ஒரு வழக்கறிஞராகதான் வந்துள்ளேன். என்னை அனுமதியுங்கள் எனக் கேட்டார். அப்போதும் அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை இதனால் அவர் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை காவல்துறையினர் கைது செய்து மாலையில்தான் விடுவித்தனர்.
 

அடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் ஆசிரியரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவரையும் அனுமதிக்கவில்லை. அவர் உடனே நான் மருத்துவரை பார்க்க வந்தேன். என்னை அனுமதியுங்கள் எனக்கூறி சென்றுள்ளார். 
 

ஆசிரியரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தி ஹிந்து ஆசிரியர் ராம் ஆகியோர் சென்றனர். 
 

அப்போது நீதிமன்றத்திற்குள் தி இந்து ஆசிரியர் ராமை அனுமதித்தனர். திருமாவளவனை விசாரித்தபோது அவர் நான் அரசியல் கட்சி தலைவராக வரவில்லை. நானும் ஒரு வழக்கறிஞர்தான், அரசியல் சாசனம் படி எனக்கு உள்ளே செல்ல உரிமையுண்டு எனக்கூறியுள்ளார். உடனே அவரை அனுமதித்த காவல்துறையினர், முத்தரசனை நீங்கள் ஏன் உள்ளே செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர் காவல்துறையினர். அதற்கு அவர் நான் இந்த வக்கீலுடைய (திருமாவளவனை குறிப்பிட்டு) குமாஸ்தா, நான் இல்லாமல் இவர் எங்கும் செல்லமாட்டார். அதனால் நானும் உள்ளே செல்ல வேண்டும். எனக்கூறியுள்ளார். 

 

 

 

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.