Skip to main content

கொடநாடு வழக்கு; சி.பி.சி.ஐ.டிக்கு கிடைத்த புதிய துப்பு; சிக்கலில் இ.பி.எஸ்!

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Kudunadu case; CBCIT got a new clue! EPS in trouble

 

ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என பேசினார். நீண்ட நாட்களாக கொடநாடு பற்றி யாரும் பேசவில்லை. கொடநாடு வழக்கு என்பது அ.தி.மு.க.வின் முதன்மை தலைவராக உள்ள எடப்பாடியின் முதுகெலும்பை முறிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் கொண்டது. கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளையை நடத்தியது எடப்பாடி. வீட்டில் கொள்ளையடித்த நபர் எப்படி அ.தி.மு.க.வின் தலைவராக வரமுடியும்? என்கிற கேள்வி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழுகிறது. சமீபத்தில் எடப்பாடிக்கு சாதகமாக வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைப் பற்றி பேசிய ஓ.பி.எஸ்., “கொடநாடு வழக்கில் தி.மு.க.வுக்கும் எடப்பாடிக்கும் இடையே மறைமுக ஒப்பந்தம் இருக்கிறது, அதனால்தான் அந்த வழக்கு அப்படியே நிலுவையில் இருக்கிறது” என்றார்.

 

இந்நிலையில், திடீரென்று முதல்வர் ஸ்டாலின் எப்படி கொடநாடு வழக்கு பற்றிப் பேசினார்? அதில் முன்னேற்றம் இருக்கிறதா? என காவல்துறை வட்டாரங்களைச் சுற்றி வந்தோம்.

 

மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கிறது என அடித்துச் சொன்ன அவர்கள், அதற்கான தரவுகளையும் தந்தார்கள். கொடநாடு வழக்கு எடப்பாடி ஆட்சி முடிந்து மறுவிசாரணைக்கு தி.மு.க. ஆட்சியில் வந்தது. கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம் விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணை முடியும் தறுவாயில் திடீரென சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அந்த வழக்குப் போனது. ஆனால் அந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சுதாகர் டீமின் விசாரணையின் தொடர்ச்சி விட்டுப்போகக்கூடாது என சுதாகர் டீம் விசாரணையில் முக்கிய பங்கு வகித்த சந்திரசேகர் என்கிற டி.எஸ்.பி.யை சி.பி.சி.ஐ.டி. டீம், தங்களோடு இணைத்துக் கொண்டது. 

 

சுதாகர் டீம் விசாரிக்காத பலரை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது. அதில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கொடநாட்டில் சி.சி.டி.வி. பதிவுகளைக் கையாண்ட தினேஷ், கொடநாடு கொள்ளைக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார். அதை காதல் விவகாரம் என சுதாகர் டீம் சொன்னது. இல்லை என தினேஷின் அப்பாவை கடுமையாக விசாரணை செய்து காரணம் கேட்டது சி.பி.சி.ஐ.டி. டீம். கொடநாட்டில் மர வேலைகள் பார்த்த கூடலூர் சஜீவன் என்பவர், கொடநாட்டில் கொள்ளையடித்து கொலை செய்துவிட்டு கேரளாவுக்கு தப்பிச் சென்ற கொலையாளிகளை, ஒரு செக்போஸ்ட்டில் தமிழக போலீசார் கைது செய்யும்போது, அவர்களை தப்பிக்க வைத்தார். அந்த சஜீவனை, சுதாகர் விசாரித்தார். ஆனால் சஜீவன் அப்போது துபாயில் இருந்தார். அவரது தம்பிகள்தான் போலீசாரை மிரட்டி தப்பிக்க வைத்தனர். அவர்களை நையப்புடைத்து தங்கள் விசாரணை வளையத்தில் கொண்டுவந்தனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார். அதேபோல் கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்தவர் முரளிரம்பா. இவரும், ஐ.ஜி.பாரியும் சேர்ந்து கொடநாடு கொள்ளை முடிந்த பிறகு ஜெ.வின் அறையிலிருந்த தங்கத்திலான குருவாயூரப்பன் சிலைகளை திருடிக்கொண்டு போனார்கள். அவர்களை சுதாகர் டீம் விசாரிக்கவில்லை. தற்பொழுது சி.பி.ஐ.யில் இருக்கும் முரளிரம்பாவை கஸ்டடிக்கு கொண்டுவந்து விசாரித்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி. டீம்.

 

Kudunadu case; CBCIT got a new clue! EPS in trouble

 

இந்நிலையில் சுதாகர் டீம் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும் போது ஒரு முக்கியமான துப்பை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடியின் பாதுகாவல் அதிகாரியாக இருந்த கனகராஜ் என்பவர் தற்பொழுது விழுப்புரம் காவல்துறையில் இருக்கிறார். அவரைப் பற்றிய முக்கியமான தகவல்தான் அது.


கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ஜெ.வின் முன்னாள் பாதுகாவலர் கனகராஜ் (இரண்டு பெயரும் ஒன்றே) கொள்ளை முடிந்ததும் சேலம் ஆத்தூரில் ஒரு கார் விபத்தில் இறக்கிறார். கொள்ளையடித்த கனகராஜ் உபயோகித்த செல்போன் பி.எஸ்.என்.எல். செல்போன். ஆத்தூரை அடுத்த காட்டுக்கொட்டாய் என்கிற ஊரில் அவரது அண்ணனுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு ஆத்தூருக்கு வந்தபோது எதிர்த் திசையில் வேகமாக வந்து மல்லிகா நல்லுசாமி என்பவரது காரில் மோதி இறந்துபோனார். அவரது மரணம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு எடப்பாடி அவரிடம் பேசியிருக்கிறார். எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசரின் செல்போன் எண் இறந்த கனகராஜின் செல்போனில் பதிவாகியிருக்கிறது. ஜி.டி.ஆர். என்ட்ரி என்ற தரவுகள்படி இந்த விஷயத்தை சுதாகர் டீம் கண்டுபிடித்தது. அதைப் பின்தொடர்ந்த சி.பி.சி.ஐ.டி. டீம், எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசரான விழுப்புரம் மாவட்டத்தில் தற்பொழுது டி.எஸ்.பி.யாக பணியாற்றும் கனகராஜை கடுமையாக விசாரித்து வருகிறது. செத்துப்போன கனகராஜை எப்படித் தெரியும்? அவன் சாவதற்கு முன்பு அவனுடன் நீ ஏன் போனில் பேசினாய். நீ தனிப்பட்ட முறையில் பேசினாயா? அல்லது உன் போனை வாங்கி எடப்பாடி பேசினாரா?

 

Kudunadu case; CBCIT got a new clue! EPS in trouble

 

கொடநாடு கொலை, கொள்ளையில் கனகராஜ் பணத்தைத் தேடி அந்த பங்களாவுக்குள் செல்லவில்லை. ஆவணங்களைத்தான் எடுத்துக்கொண்டு சென்றதாக கனகராஜுடன் ஒன்றாகப் பயணித்த சயான் சொல்கிறார்.


அந்த டாகுமெண்டுகள் எங்கே? எடப்பாடிக்கும் இந்த கொள்ளை, கொலைக்கும் என்ன தொடர்பு? கொள்ளையடித்த கனகராஜை யார் கொன்றது? கொடநாடு கொலை, கொள்ளையில் கனகராஜ் மரணத்திலும் எடப்பாடி நேரடியாக தலையிட்டாரா? எடப்பாடி உனது செல்போனை வைத்து தான் ரகசியமான விஷயங்களைப் பேசுவார் எனச் சொல்கிறார்களே? என ஏகப்பட்ட கேள்விகளை சி.பி.சி.ஐ.டி.யினர் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


இதில், கனகராஜ் உண்மையைச் சொல்கிறாரா? இல்லையா என்பதை அறிய அவரை உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். இதில் சில விஷயங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனால்தான் முதல்வர் வெளிப்படையாக வாய் திறந்திருக்கிறார் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

 

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.