Skip to main content

"வாட்ச்ச வெச்சே 25 தொகுதி ஜெயிப்பாரா அண்ணாமலை? வார்டு கவுன்சிலரா முதல்ல ஜெயிக்க சொல்லுங்க..." - குடியாத்தம் குமரன் தடாலடி

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

g

 

கடந்த சில நாட்களாக திமுக, பாஜகவுக்கு இடையே வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் தொடர்பாக ஏற்படுத்திய சர்ச்சை தற்போது வரை குறைந்தபாடில்லை. தொடர்ந்து இருதரப்பும் அதுபற்றி பேசி வருகிறது. இந்நிலையில் இந்த வாட்ச் விவகாரத்தை வைத்தே 25 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று அண்ணாமலை பேசியிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் குடியாத்தம் குமரனிடம் பேசியபோது, "பாஜக முதலில் உள்ளாட்சித் தேர்தலில் எங்கேயாவது வெற்றிபெற்றதை பார்த்துள்ளார்களா? சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாநகராட்சி தேர்தலில் எத்தனை கவுன்சிலர்கள் வெற்றி பெற்றார்கள், எத்தனை நகராட்சியைக் கைப்பற்றியுள்ளார்கள் என்ற விவரத்தை முதலில் சொல்வார்களா இவர்கள்.

 

தனித்து நின்றால் நோட்டா வாங்கும் வாக்குகள் கூட இவர்கள் வாங்க முடியாது என்ற நிலையில் அவர்கள் 25 சீட் ஜெயிப்போம், 50 சீட் ஜெயிப்போம் என்று கதை விட்டு வருகிறார்கள். கனவில் கூட இவர்களால் தேர்தலில் நின்று தமிழகத்தில் வெற்றி பெறுவதாக நினைக்கக்கூடாது. ஏனென்றால், நடக்காத ஒன்றை எதற்காக இவர்கள் தேவையின்றி நினைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. குறிப்பாகக் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற போது அவர்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றோம். 

 

எனவே பாஜக எங்களைத் தேர்தலுக்குப் பயந்த கட்சி என்றோ, எங்களால் வெற்றிபெற முடியாது என்றோ சொல்ல எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. இன்றைக்கு பாஜகவைச் சேர்ந்த அக்கா வானதி சீனிவாசன் எல்லாம் வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுகிறார். இவர்கள் எதற்காக அதைக் கையில் எடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அண்ணாமலை பதவிக்கு வந்து அவர்களை டம்மி செய்ததன் காரணமாக நாம் திமுகவை விமர்சித்தால் தான் நம்மை நாலு திமுககாரர்ரகள் திட்டுவார்கள் என்ற எண்ணத்தில் திமுகவைப் பற்றித் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இல்லை என்றால் பாஜகவில் உள்ள யாரும் திமுகவை விமர்சனம் செய்ய எந்த தார்மீக தகுதியும் இல்லை" என்றார்.

 

 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

''விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும்''- அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
"May his people succeed in their work" - Udayanidhi wishes

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

இதனிடையே கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சிப் பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அமைச்சர் உதயநிதியை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிளித்த அவர், 'இந்திய ஜனநாயகத்தில் யாரும் அரசியல் கட்சி இயக்கம் தொடங்கலாம். அதற்கான உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வோம். அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்'' என்றார்.