Skip to main content

வி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்? -தி.மு.க.வில் வலுக்கும் குரல்!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Ku Ka Selvam MLA

 

தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் பா.ஜ.க.வுக்கு தாவ திட்டமிட்டே டெல்லிக்கு பறந்தார் கு.க.செல்வம். ஆனால், நான் பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லி வரவில்லை என திடீர் பல்டி அடித்தார். எம்.எல்.ஏ.பதவி பறிபோகும் என்பதால் இந்தத் திடீர் பல்டி என்கிறார்கள். இதற்கிடையே, கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லி சென்ற விவகாரம் தி.மு.க.வில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 
                          

கட்சியின் சீனியர்கள் பலரும் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு விவாதித்தபடி இருக்கின்றனர். கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் உள்ள சீனியர்களுடன் அவசர ஆலோசனையையும் நடத்தினார் ஸ்டாலின். போனால் போகட்டும் என சீனியர்களிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். 

                         

இந்த நிலையில், தி.மு.க.வின் மேலிட தொடர்புகளிடம் பேசியபோது, ’’அடுத்த ஆட்சி தி.மு.க.வினுடையது தான் என்றும், 170 இடங்களில் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என்றும் ஐ-பேக் நிறுவனம் ரிப்போர்ட் கொடுத்த நாளில் இருந்தே தி.மு.க. தெம்பாகி விட்டது. சீனியர்களை ஓரங்கட்டினார்கள் இதனாலேயே கட்சியில் அதிருப்திகள் அதிகரித்தபடி இருக்கிறது. கு.க.செல்வம் கட்சி தாவுவதால் தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால், தலைமைக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.வைக்கூட தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற விமர்சனங்கள் தவிர்க்க முடியவில்லை. இது, கட்சி தலைமையின் இமேஜுக்கு டேமேஜ் தான். பா.ஜ.க.வில் அவர் சேர்ந்திருந்தால் வரும் டேமேஜை விட, சேராமல் இருந்தது தான் தி.மு.க.வுக்கு பெரிய இடி. அதாவது, தலைமைக்கு நெருக்கமான ஒரு எம்.எல்.ஏ.வை டெல்லி வரை என்னால் தூக்கி வர முடிகிறது பார் என ஸ்டாலினுக்கு பா.ஜ.க. சவால் விடுவது போல இருக்கிறது ‘’ என்கிறார்கள். 

                      

இதற்கிடையே, கட்சியின் அனுமதியைப் பெறாமல் அல்லது கட்சித் தலைமைக்கு தெரிவிக்காமல் பா.ஜ.க. தலைவர் முருகனை சந்தித்தற்காக வி.பி. துரைசாமியை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கினார் மு.க.ஸ்டாலின். அந்த வகையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்ததன் மூலம், மிகப் பெரிய துரோகத்தையும், அவமானத்தையும் தி.மு.க.வுக்கு ஏற்படுத்திய கு.க.செல்வத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அவரது எம்.எல்.ஏ.பதவியைப் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை தி.மு.க.வில் வலுத்து வருகிறது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.