Skip to main content

வி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்? -தி.மு.க.வில் வலுக்கும் குரல்!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Ku Ka Selvam MLA

 

தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் பா.ஜ.க.வுக்கு தாவ திட்டமிட்டே டெல்லிக்கு பறந்தார் கு.க.செல்வம். ஆனால், நான் பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லி வரவில்லை என திடீர் பல்டி அடித்தார். எம்.எல்.ஏ.பதவி பறிபோகும் என்பதால் இந்தத் திடீர் பல்டி என்கிறார்கள். இதற்கிடையே, கு.க.செல்வம், பா.ஜ.க.வில் இணைவதற்காக டெல்லி சென்ற விவகாரம் தி.மு.க.வில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 
                          

கட்சியின் சீனியர்கள் பலரும் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு விவாதித்தபடி இருக்கின்றனர். கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் உள்ள சீனியர்களுடன் அவசர ஆலோசனையையும் நடத்தினார் ஸ்டாலின். போனால் போகட்டும் என சீனியர்களிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். 

                         

இந்த நிலையில், தி.மு.க.வின் மேலிட தொடர்புகளிடம் பேசியபோது, ’’அடுத்த ஆட்சி தி.மு.க.வினுடையது தான் என்றும், 170 இடங்களில் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என்றும் ஐ-பேக் நிறுவனம் ரிப்போர்ட் கொடுத்த நாளில் இருந்தே தி.மு.க. தெம்பாகி விட்டது. சீனியர்களை ஓரங்கட்டினார்கள் இதனாலேயே கட்சியில் அதிருப்திகள் அதிகரித்தபடி இருக்கிறது. கு.க.செல்வம் கட்சி தாவுவதால் தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால், தலைமைக்கு நெருக்கமான எம்.எல்.ஏ.வைக்கூட தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையே என்கிற விமர்சனங்கள் தவிர்க்க முடியவில்லை. இது, கட்சி தலைமையின் இமேஜுக்கு டேமேஜ் தான். பா.ஜ.க.வில் அவர் சேர்ந்திருந்தால் வரும் டேமேஜை விட, சேராமல் இருந்தது தான் தி.மு.க.வுக்கு பெரிய இடி. அதாவது, தலைமைக்கு நெருக்கமான ஒரு எம்.எல்.ஏ.வை டெல்லி வரை என்னால் தூக்கி வர முடிகிறது பார் என ஸ்டாலினுக்கு பா.ஜ.க. சவால் விடுவது போல இருக்கிறது ‘’ என்கிறார்கள். 

                      

இதற்கிடையே, கட்சியின் அனுமதியைப் பெறாமல் அல்லது கட்சித் தலைமைக்கு தெரிவிக்காமல் பா.ஜ.க. தலைவர் முருகனை சந்தித்தற்காக வி.பி. துரைசாமியை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கினார் மு.க.ஸ்டாலின். அந்த வகையில், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்ததன் மூலம், மிகப் பெரிய துரோகத்தையும், அவமானத்தையும் தி.மு.க.வுக்கு ஏற்படுத்திய கு.க.செல்வத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும். அவரது எம்.எல்.ஏ.பதவியைப் பறிக்க சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை தி.மு.க.வில் வலுத்து வருகிறது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.