Skip to main content

'அர்பன் நக்சல்' கிரிஷ் கர்னாட்... கலையும் கலகமும்! 

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

மாநிலத்தில் நாளை அரசு விடுமுறை விடப்படும் என்றும், மூன்று நாட்கள் தொடர் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு கடந்த 10ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 

krish karnat



மத்தியில் உயர் பொறுப்பில் உள்ளவர்களோ அல்லது மாநில முதல்வர்களோ எதிர்பாராத விதமாக மரணமடைந்தால், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநில அரசுகள், அரசு விடுமுறையை அறிவிக்கும்.  அப்படி ஏதேனும் தேசிய அல்லது மாநில அளவில் அந்த குறிப்பிட்ட தேதியில் நிகழ்ந்ததா என்றால், அந்த மாதிரியான எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அப்படியென்றால் மாநில அரசு விடுமுறை விடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த நபர் யார் என்றால் அவர் வேறு யாரும் அல்ல 80 வயதிலும் மத பிரிவினை வாதிகளின் அச்சுறுத்தலை எதிர்த்து குரல் கொடுத்த நடிகர் கிரிஷ் கர்னாட்.

இவரை நடிகர் என்று ஒற்றைப் புள்ளியில் சுருக்கினால், மதவாதிகளை விட அவருக்கு நாம் அதிகம் தீங்கிழைத்தவராகிவிடுவோம். ஆம்...அவர் வெறும் நடிகரல்ல. இலக்கியவாதி, நாடக ஆசிரியர், கதையாசிரியர் என பல முகங்களை கொண்டவர். அவரின் இந்த பன்முகத்திறமையை போன்றும் வகையில் அவருக்கு பத்மவிபூசன், பிலிம் பேர் போன்ற விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உச்சபட்சமாக இலக்கிய உலகின் ஆஸ்கர் விருதாகப் போற்றப்படும் ஞான பீட விருதினை பெற்றுள்ளார். மகாராஷ்ட்ராவில் பிறந்த அவர், தனது கல்லூரி வாழ்க்கையை கர்நாடகாவில் தொடர்ந்தார்.

பின்னர் மேற்படிப்பை ஆக்ஸ்போர்டில் தொடர்ந்த அவர், ஆக்ஸ்போர்ட் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் தலைவராகவும் இருந்துள்ளார். பின்னர் கர்நாடகா வந்த அவர், நாடகக் கலைஞர்களோடு இணைந்து தனது வாழ்க்கையை தொடர்ந்தார். நாடகத்துடன் எழுத்தையும், இயக்கியத்தையும் தொடர்ந்தார். இந்தக் கால கட்டத்தில்தான் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் அதிகம் வரத் தொடங்கின. எழுத்தில் தடம் பதித்தது போலவே சினிமாவிலும் தான் அசைக்க முடியாதவன் என்று மிக குறுகிய காலத்திலேயே நிரூபித்தார். 'காதலன்' படத்தில் தமிழக ஆளுநராக அவர் காட்டிய உடல்மொழியை சினிமாவை அறிந்த எவரும் மறக்கமாட்டார்கள். கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த 'டைகர் ஜிந்தா ஹை' திரைப்படமே அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம். 
 

 

krish karnat


கிரிஷ் கர்னாட் தன்னை நடிகராக, இலக்கியவாதியாக, எழுத்தாளராக மட்டும் சுருக்கிக்கொள்ள முற்படவில்லை. அநீதிக்கு எதிராக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குரல் கொடுத்தார். ஒற்றை தேச கொள்கைக்கு எதிராக கடுமையாக போராடினார். மொழித்திணிப்பு கொள்கைக்கு எதிராகப் பொங்கினார். இதனால்தானோ என்னவோ, மதவாதிகள் அவரின் உயிருக்கு அவர் இறக்கும் வரைக்கும் அச்சுறுத்தலாகவே இருந்தார்கள். எந்த அச்சுறுத்தலையும் கண்டு கலங்காத அவர், கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட போது மதவாதிகளுக்கு எதிராக தெருவுக்கு வந்தார்.

மதவாதத்தை அழிப்பதே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்பட இருப்பதாக பிரகடனம் செய்தார். அரசியல்வாதிகள் போல் அதனை வெறும் வாக்குறுதிகளாக மட்டும் தராமல், சொல்லியவாறு செயலிலும் காட்டினார். கவுரியின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், தன்னுடைய கழுத்தில் 'அர்பன் நக்சல்' என்ற பலகையை மாட்டிக்கொண்டு, மதவாதிகளுக்கு மாரடைப்பு வரவைத்தார். கலையை சமூகத்திற்காகப் பயன்படுத்திய கலைஞனுக்கு என்றும் மரணமில்லை. 
 

 

 

 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.