Skip to main content

தேர்தலில் அவர்கள் ராமர் படத்தை காட்டினார்கள்... ஆனால் திமுக அமோக வெற்றி பெற்றது - கோவை ராமகிருஷ்ணன்

Published on 25/01/2020 | Edited on 26/01/2020

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழத்தின் தலைவர் கோவை ராமகிருஷ்ணனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,

துக்ளக் விழாவில் பெரியார் பேசியது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதுதொடர்பாக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவரது வீட்டை முற்றுகையிட போவதாக கூறி அதற்கான முயற்சிகளையும் செய்தீர்கள். ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்கள். உங்கள் போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கருத முடியுமா?

பெரியார் தொடர்பான சர்ச்சை கருத்துக்களை அவர் கூறிய இந்த ஒருவார காலமாக அவர் எந்த தொலைக்காட்சியையும் சந்திக்கவில்லை. இன்று அவருடைய வீடு முற்றுகையிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்ட நிலையில் முதல் முறையாக தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். இதுவே எங்கள் போராட்டத்தினால் வந்த விளைவுதான் இது.  போராட்டத்திற்கு பயந்துதான் இந்த பதிலை அவர் தெரிவித்துள்ளார். கூடவே இந்த செய்தியை மறுக்க முடியாத உண்மை என்றும், மறக்க வேண்டிய சம்பவம் என்றும் கூறியுள்ளார். மறக்க வேண்டிய சம்பவம் என்று ரஜினியே இதை குறிப்பிடுகிறார். ஆனால், கடந்த 14ம் தேதி இந்த விஷயத்தை அவர் மறந்திருந்தார் என்றால் இந்த பிரச்சனைக்கே வேலை இல்லாமல் போயிருக்கும். 71ல் நடந்த விஷயத்தை அவர் இப்போது ஏன் பேசுகிறார். 
 

s



யார் சொல்லிக்கொடுத்து அவர் பேசுகிறார் என்று நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. 50 வருடத்துக்கு முன்பு நடந்த அந்த விஷயத்தை இப்போது ஏன் கொண்டு வர வேண்டும். இப்போது யாராவது அதை பற்றி கேட்டார்களா? இன்னும் சொல்லப்போனால் அப்போது வெளிவந்த சோ தலைமையிலான துக்ளக் பெரியார் ராமனை செருப்பால் அடிப்பது போலவும், அதனை கலைஞர் கைக்கொட்டி சிரிப்பது போலவும் துக்ளக்கில் கற்பனை படத்தை வெளியிட்டார்கள். காங்கிரஸை ஆதரிக்கிறேன் என்கிற பேரில் இத்தகைய செயல்களை அப்போதே செய்தார்கள். திமுக எதிர்ப்பு என்பதற்காக இதனை கடந்த 50 ஆண்டுகளாகவே தொடர்ந்து செய்து வருகிறார்கள். 71ம் வருடம் தேர்தலில் செயற்கையாக அவர்கள் உருவாக்கிய அந்த படத்தை காட்டி தேர்தலின் போது மக்களிடம் இவர்களுக்காக உங்கள் ஓட்டு என்று கேட்டார்கள். ஆனால் 67ல் திமுக வெற்றிபெற்ற இடங்களை விட 71ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் 184 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. திமுகவுக்கு எதிராக அதை பயன்படுத்தலாம் என்று பார்த்தார்கள். ஆனால் அது அவர்களுக்கு எதிராகே சென்றது. எனவே இவர்களின் இந்த பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை.

 

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.