Skip to main content

சிலர் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்..? - கொளத்தூர் மணி கேள்வி!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019


சென்னையில் பெரியார் இயக்கங்களை சேரந்த பல்வேறு தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாகவும், அதில் ஈடுபடுபவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,  பெரியார் திராவிட கழகம்  தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் மணி கூறியதாவது, " பெரியாரிய உணர்வாளர்கள் சார்பாக சில செய்திகளை தெரியப்படுத்துவதற்காக நாங்கள் உங்களை சந்திக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட சாதியினருடைய மாநாட்டில் பேசிய வெங்கடேஸ்வரன் என்பவர் கலப்பு திருமணம் செய்பவர்களை நாய்களோடு இணைத்து மிகவும் கொச்சையாக பேசினார். அவர் மீது பெரியார் இயக்க தோழர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்கள். 

கடந்த 11ம் தேதி அவர் மீது சில பரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு என்ன காரணத்திற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. அதே போன்று சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திலும், தான் யாரால் பாதிக்கப்பட்டேன், எதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன் என்று அந்த மாணவி விளக்கமாக தன்னுடைய கடிதத்தில் கூறியிருந்தும், புகாருக்குள்ளானவர்களை இதுவரை விசாரிக்க கூட இல்லை. எதனால் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று காவல்துறையினரும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதே போன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்ய போன பெண்ணை அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் தாக்கி இருக்கிறார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது. காவல்துறையினர் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தனர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரகியவில்லை.  
 

d




சோடா பாட்டில் வீசுவோம் என்று மன்னார்குடி ஜீயர் பேசியதை வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போன்று ஹச்.ராஜா பேசாத பேச்சுக்கள் இல்லை. வைரமுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். மேலும், பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று அவர் கூறிய அடுத்த நாள் பெரியார் சிலை திருப்பத்தூரில் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போன்று 30 சதவீத பெண்கள் மட்டும்தான் கற்புடையவர்கள் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதற்காக அவர் மீது தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காயத்ரி விவகாரத்தில் அவர் ஏற்கனவே ஒருமுறை சேரி ஃபிகேவியர் என்று கூறியதற்காக அவர் மீது வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய வேண்டும் கூறி புகார் கொடுத்திருந்தோம். ஆனால் அதுகுறித்து எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் கட்சி தலைவருமான திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாகவும் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சி விஜயேந்திரர் தேசிய கீதம் பாடும் போது அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால் வழக்கு போடுவோம் என்று சொல்லும் யாரும், இதை பற்றி பேசவில்லை. அவர் மீது வழக்குபதிவு செய்யவில்லை. சில குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. குறைந்த பட்சம் வழக்கு பதிவு செய்யப்பட்ட வெங்கடேஸ்வரன் போன்றவர்களையாவது கைது செய்ய வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகிறோம். நம்மை போன்ற ஆட்கள் மீது புகார் கொடுத்த உடனே வழக்கு பதிவு செய்து கைது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போகும் காவல்துறையினர், இத்தனை ஆதரங்களை அவர்கள் மீது கொடுத்தும் புகாருக்குள்ளானவர்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும் நாங்கள் சொல்வதெல்லாம் புகாருக்குள்ளான அனைவர் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

 


 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.