Skip to main content

கொடநாடு வழக்கு: அப்டேட்களை பெறும் வேலுமணி... பழனிசாமிக்கு செல்லும் ஆதாரங்கள்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

Kodunadu case: Evidence that goes directly to Edappadi!

 

கொடநாடு கொலை வழக்கில் மேலதிக விசாரணையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்கள், பல புதிய தகவல்களை தாமாக முன்வந்து சொல்கின்றனர். இதை எதிர்த்து ஆளுநரிடம் முறையிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்த மேலதிக விசாரணையை எதிர்த்து சட்டமன்றத்திலும் குரல் எழுப்பினார்.

 

இந்நிலையில் எடப்பாடி தொகுதியை உள்ளடக்கிய சேலம் மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் காணொளி பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "நான் எனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கொடநாடு கொலை வழக்கின் உண்மையை வெளிக்கொண்டு வருவேன் என தெரிவித்தேன். அந்த வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. விரைவில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்'' எனத் தெரிவித்தார். முதல்வருடைய பேச்சுக்கு ஒரு பின்னணி உள்ளது என்கிறார்கள் வழக்கை நன்கறிந்தவர்கள்.

 

கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம், இந்த வழக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு எதிரானது என்பதால் மிகக் கவனமாகத் தகவல்களை சேகரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சதீசன், தீபு உட்பட கேரள மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளிகள், எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுடன் ஒரு டீல் பேசியிருக்கிறார்கள். இந்த வழக்கை எப்படியாவது நீர்த்துப்போகச் செய்யவும், அதில் எடப்பாடிக்கு எந்த தொடர்பும் இல்லை என நிரூபிக்கவும் குற்றவாளிகளுக்கு பல லட்சங்கள் தர இளங்கோவன் முன்வந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், காக்கநாடு சுற்றுலாத்தலத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது என அந்த குற்றவாளிகள் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்கள். அந்த குற்றவாளிகளைக் கொத்தாக தூக்கிய கொடநாடு போலீஸ், விசாரணையில் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த திலீப் என்பவரை, தங்களது ஸ்டைலில் உரித்தெடுத்திருக்கின்றனர்.

 

திலீப் இதுவரை கொடநாடு குற்றவாளிகள் பட்டியலிலோ சாட்சிகள் பட்டியலிலோ இடம்பெற்றதில்லை. அவரிடம் நடத்திய விசாரணை, அந்த சந்திப்பில் இடம்பெற்ற குற்றவாளிகளிடம் நடைபெற்ற விசாரணையைவிட பயனுள்ளதாக இருந்திருக்கிறது. திலீப்பும் இன்னொரு ரியல் எஸ்டேட் புரோக்கரும், குற்றவாளிகள் இளங்கோவனைச் சந்திப்பதற்கு உதவி செய்துள்ளார்கள். அவர்களிடம் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்து தருமாறு இளங்கோவன் கேட்டுக் கொண்டிருக்கிறார். குற்றவாளிகள் தரப்பிலும் எடப்பாடியிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வரும் என ஆசை காட்டப்பட்டதால் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

 

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசப்பட்டபடி பணம் பரிமாறப்படாததால் குற்றவாளிகள் எடப்பாடிக்கு ஆதரவாக பேட்டியளிக்குமாறு இளங்கோவன் சொன்னதைச் செய்யவில்லை என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

அதேபோல், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானை போலீசார் கையிலெடுத்திருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாக கொடநாடு கொள்ளைச் சம்பவம் நடந்த எஸ்டேட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள்? ஜெயலலிதாவின் அறைக்கு எப்படிச் சென்றார்கள்? அங்கிருந்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு டிரைவர் கனகராஜ் எப்படி எஸ்கேப்பானார்? அவர் எங்கு சென்று கனகராஜின் சகோதரரான தனபாலைச் சந்தித்தார்? தனபாலிடமிருந்து புதிய செல்போன்களைப் பெற்றுக்கொண்டு, கொடநாடு சம்பவத்தின்போது உபயோகித்த செல்போனை கனகராஜ் தனபாலிடம் கொடுத்து எப்படி அழிக்கச் சொன்னார்? தனபாலைச் சந்தித்த பிறகு சேலம் மாவட்டம் ஆட்டையம்பட்டிக்கு சயானும் கனகராஜும் எப்படிச் சென்றார்கள்? அங்கிருந்து சயானை விட்டுப் பிரிந்த கனகராஜ், சேலம் இளங்கோவனுக்கு நெருக்கமானவரிடம் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களை எங்கே ஒப்படைத்தார்? எனக் கொள்ளை நடந்த இடங்களையும் அதில் தொடர்புடைய பகுதிகளையும் காண்பிக்கச் சொல்லி சயானை கடந்த ஒரு வாரமாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 

அத்துடன் இதுவரை சாட்சியமாக சயான் சொன்னதைத் தவிர என்னவெல்லாம் நடந்தது? கனகராஜ் எதற்காக கொடநாட்டில் கொள்ளையடித்தார்? அங்கு கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் எவை? அவற்றை கனகராஜ் எப்படி எடப்பாடி வசம் ஒப்படைத்தார்? அவர் மரணமடையும்போது எந்த நிலையில் இருந்தார்? அப்பொழுது என்ன பேசினார்? என ஒவ்வொரு அணுவாகப் பிரித்து சயானிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசாரணை வேகத்தைப் பார்த்த சயான், நான்தான் இந்த வழக்கில் மறு விசாரணை கோரினேன். என்னை இப்படி கொடுமைப்படுத்துகிறீர்களே என குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷிடம் கதறியுள்ளார்.

 

இப்படி வழக்கு விசாரணை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நகர்ந்து கொண்டிருப்பது எடப்பாடியை சங்கடப் படுத்தியுள்ளது. எப்படியாவது இந்த விசாரணையின் தீவிரத்தைக் குறைக்க வேண்டுமென எடப்பாடி ஒரு புதிய ஆயுதத்தை எடுத்துள்ளார். அந்த ஆயுதம், சயானுடன் சேர்ந்து கொள்ளையடித்த வாளையார் மனோஜ் என்கிற குற்றவாளி. தற்பொழுது ஜாமீன் பெற்று ஊட்டியில் தங்கியிருக்கும் வாளையார் மனோஜ், ஊட்டி நீதிமன்றத்தில் "எனது ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடையுங்கள்'' என மனு போட்டுள்ளார். "எனக்கு ஊட்டியில் சாப்பாடு கிடைக்கவில்லை. தங்கவும் இடமில்லை. எனவே என்னை மீண்டும் ஜெயிலுக்கு அனுப்புங்கள்'' என வாளையார் மனோஜ் கூறியுள்ளார்.

 

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த், வாளையார் மனோஜுக்கு தினமும் உணவளிக்க ஒரு தொண்டு நிறுவனத்தை ஏற்பாடு செய்வதாக நீதிமன்றத்திடம் கூறியுள்ளார். வாளையார் மனோஜை மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டால் மேலதிக விசாரணையின் வேகம் தடைபடும். ஒரு குற்றவாளி சிறையில் இருந்தால் வழக்கு விசாரணையை வேகமாக முடிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என்பதால் வாளையார் மனோஜை மறுபடியும் சிறைக்குள் அனுப்ப எடப்பாடி டீம் திட்டமிடுகிறது என்கிறார்கள் போலீசார்.

 

இதற்கிடையே வழக்கை விசாரிக்கும் டீமிலும், ஓட்டையைப் போட்டுள்ளார் எடப்பாடி. சயானிடம் வாக்குமூலம் பெறும் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷின் மனைவியும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மனைவியும் ஒன்றாகப் படித்தவர்கள். சுரேஷின் மனைவி மூலம் வேலுமணி இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை அப்டேட்டாகத் தெரிந்துகொள்கிறார். அத்துடன் நீலகிரி மாவட்ட புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டராக கொடநாடு கொள்ளை நடந்தது முதல் பதவி வகிப்பவர் சுபாஷிணி. இவர் சமீபத்தில் ஒரு ரகசிய இடத்தில் எடப்பாடியை சந்தித்துப் பேசினார். அத்துடன் கொடநாடு கொலை வழக்கில் மேலதிக விசாரணை செய்யும் டீம் எடுக்கும் முடிவுகளை, கிடைக்கும் புதிய ஆதாரங்களை எடப்பாடி தரப்புக்கு நேரடியாகக் கொடுக்கிறார். செல்போனை ஆராய்ந்தாலே தெரிந்துவிடும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

இந்நிலையில், கொடநாடு கொலை வழக்கை இரண்டாகப் பிரித்து, கனகராஜ் கொலை வழக்கு, கொடநாடு கொள்ளை வழக்கு என டீல் செய்ய ஐ.ஜி. சுதாகர் முடிவெடுத்துள்ளார். இப்படி தடைகள் தாண்டிய ஓட்டமாக இருக்கும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஜீவனை, உளவுத்துறை ஆய்வாளர் சுபாஷிணியும், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷும் அடிக்கடி ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசுகிறார்கள் என வெடிகுண்டு தகவலை போலீசார் சொல்கிறார்கள். இந்த இருவரையும் பதவி நீக்கம் செய்யாவிட்டால் கொடநாடு வழக்கில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும் என அடித்துச் சொல்கிறார்கள் நீலகிரி மாவட்ட தி.மு.க.வினரும், இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்து நடத்திவரும் தி.மு.க. வழக்கறிஞர்களும்.

 

 

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.