Skip to main content

200 ஆண்டுகளுக்கு முன்பு  இருந்த  நிலை! சாப்பாட்டுக்குத் தவிக்கும் கொடைக்கானல் மலைவாசிகள்!!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இந்தக்  கோடை சுற்றுலாத் தளத்திற்கு ரெகுலராக சுற்றுலாப் பயணிகள் வந்தாலும்கூட  ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில்தான் கோடை சீசன் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குட்டிகளுடன் வந்து குளிர் பிரதேசமான கோடை இளவரசியின் இயற்கையை ரசித்து விட்டு போவது வழக்கம். இந்தச் சுற்றுலாப்பயணிகளை நம்பி 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும்,  அதில் வரும் வருமானத்தை வைத்துதான் வயிற்றைக் கழுவியும் வருகிறார்கள்.
 

k

 

 
அதுபோல்தான் இந்த வருடமும் கோடை சீசனை நம்பி  கோடை வாசிகள் இருந்து வந்தனர். ஆனால் உலகளவில் பரவிய கரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பரவியது. இதனால் கடந்த 24-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போட்டது மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவும் எடப்பாடி அரசு போட்டு உள்ளதால்,  மக்கள் வெளியே வராமல் கரோனா  வைரசுக்குப் பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால்  கோடையில்  சீசன்  தொடங்கியும் கூட சுற்றுலாப் பயணிகள் வராததால்  லேக் மற்றும் தூண் பாறை, டம்டம்பாறை, குணா குகை, பேரிச்சம்  உள்பட கோடையில் உள்ள சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது. அதுபோல் கோடை வாசிகளும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

           

இதுபற்றி கோட்டையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது..... நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதாவது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலைக் கண்டுபிடித்தவர்களே ஆங்கிலேயர்கள் தான் அவர்கள்தான் ஆங்காங்கே குடியிருந்து வந்தனர். அதன்பின் ராணுவத்தினர் வந்தனர். அவர்களுக்குப் பொழுது போக்காக தான் தற்பொழுது உள்ள ஏரியில்  போட்டிங் போய் வந்தனர்.  மற்ற நேரங்களில்  ஏரி வெறிச் சோடித்தான் கிடக்கும். அதுபோல் ஆங்கிலேயர்களைத் தவிர தமிழர்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத் தான்  அப்போது இருந்து வந்தனர்.

 

http://onelink.to/nknapp

 

அதுனால் கொடைக்கானல் நகரம் முதல் ஏரி வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் எப்பொழுதுமே வெறிச்சோடி தான் கிடக்கும். அப்படி ஒரு நிலை தற்பொழுது கரோனா வைரஸ் மூலம் கொடைக்கானலுக்கு வந்துள்ளதால் கோடை ஏரி முதல் நகரம் வரை வெறிச்சோடிக் கிடக்கிறது. மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்தாலும் கூட கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால் மேல் மலைப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உள்ள மக்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

 

அவர்களுக்குத் தொகுதி  எம்.எல்.ஏ.வான ஐ.பி.செந்தில்குமார் அவ்வப்போது போய் தனி மனிதனாக நின்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதுபோல் ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சேர்மன் ஸ்ரீதரும் கூட ஓரளவுக்கு நகர மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க  ஏற்பாடு செய்து வருகிறார்.ஆனால், தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் கோடை மக்கள் உள்பட மேல்மலை பகுதி மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
 

 

அதுபோல் மேல் மலையில் விளையக்கூடிய விவசாயப் பொருட்களையும் கீழே கொண்டுவர முடியாமல் விளைநிலங்களிலேயே போட்டுவிட்டும் வருகிறார்கள். அந்த அளவுக்கு கரோனா மூலம் கொடைக்கானல் உள்பட மேல்பகுதி முழுவதும் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.


           

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

மீண்டும் அரங்கேறிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சம்பவம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள மலை பிரதேச பகுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதி அதிக குளிராக இருப்பதால், கோடை காலத்தில் அதிகமான நபர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் சமீபத்தில் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளான, கேரளாவைச் சேர்ந்த சில இளைஞர்கள், ஆபத்து நிறைந்த குணா குகைக்கு தடையை மீறி செல்கின்றனர்.

அப்போது, அங்குள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து விடும் ஒருவரை, அவரின் சக நண்பர்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவதுதான் கதை. இந்தப் படம் வெளியானது முதல் கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் வெளியானதில் இருந்து, கொடைக்கானலுக்கும் குணா குகைக்கும் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள் கிடைத்த விடுமுறை தினத்தில் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல நண்பர்கள் குழு ஒன்று திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 22 வயதான தனராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள், வழக்கமாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அது அனைத்தையும் செய்து மகிழ்ந்துள்ளனர். அப்போது அவரவர் புகைப்படங்களை வித விதமாக எடுத்து மகிழ்ந்துள்ளனர். பின்னர், கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதிக்குச் சென்ற நண்பர்கள், அங்கிருந்து நடந்து சென்று டால்பின் நோஸ் சுற்றுலாப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இந்தப் பகுதி கொடைக்கானலில் உள்ள ஆபத்தான இடங்களுள் இதுவும் ஒன்று. டால்பின் மீனின் மூக்குப்பகுதி போன்று இந்தப் பாறை அமைந்துள்ளதால் இந்த இடம் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது. ஆனால் இங்குள்ள ஆபத்தை உணராத தனராஜ் செல்ஃபி எடுக்கும் நோக்கத்துடன், டால்பின் நோஸ் பாறை பகுதியின் முனைப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் கால் சட்டென்று வழுக்கியுள்ளது. உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மேலே இருந்து அலறியபடி பொத்தென்று சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார் தனராஜ். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரின் நண்பர்கள், அந்த ஆபத்தான இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

கை கால்களில் பலத்த காயங்களுடன் தனராஜ் கீழிருந்து கதறியுள்ளார்.உடனே அவரின் நண்பர்கள் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர், வனத்துறையினர் என அனைவரும் உடனடியாக சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கயிறு கட்டி 100 அடி பள்ளத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் தனராஜை உயிருடன் மீட்டுள்ளனர். கீழே விழுந்த தனராஜிக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

young man trapped in a 100-foot ditch in Kodaikanal in the style of the film 'Manjummel Boys'

இதன் காரணமாக படுகாயமடைந்த தனராஜை உயிருடன் தீயணைப்பு துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும் போது, கொடைக்கானல் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய பகுதி மட்டுமில்லை. இது ஆபத்து நிறைந்த பகுதியுமாகவும் இருக்கிறது. அழகும் ஆபத்தும் உள்ளதை, சிலர் அறியாது ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல ஆசைப்படுகின்றனர். வனத்துறை சார்பாக ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட போதிலும், சிலர், எச்சரிக்கையையும் மீறி செல்வதால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.