Skip to main content

ஒரு முத்தப் புகைப்பட வரலாற்று நாயகன் மரணம்!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019
navy man


1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றிகொண்ட செய்தியை அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பு அமெரிக்கா முழுவதும் மிகப்பெரிய நிம்மதி பேரலையை பரவச் செய்தது.
 

நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மக்கள் உற்சாகமாக கூடத்தொடங்கினர். மக்களின் உற்சாகத்தை படம்பிடிக்க புகழ்பெற்ற லைஃப் ஆங்கில இதழின் போட்டோகிராபர் எய்ஸென்ஸ்டேட், தனது லெய்கா கேமராவுடன் சதுக்கத்தை சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் கண்ணில் பட்ட காட்சி அவரை உஷார் படுத்தியது. கேமராவை எடுத்து பளிச்சென்று அதை பதிவு செய்தார்.
 

ஒரு கப்பல்படை வீரர் தனக்கு எதிரே வந்த  வெள்ளுடை அணிந்த நர்ஸ் ஒருவரை மிக இறுக்கமாக வாரி இழுத்து இதழோடு இதழ் பதித்து ஆழமான முத்தம் பதித்தார். அந்தக் காட்சியைத்தான் எய்ஸென்ஸ்டேட் மிக விரைவாக பதிவு செய்தார்.
 

அந்த வாரத்தில் லைஃப் இதழின் அட்டைப்படமாக வெளிவந்த இந்த புகைப்படம் போட்டோ ஜர்னலிஸத்துக்கு உதாரணமான படமாக கருதப்படுகிறது.
 

இந்த படத்தில் இருப்பது தாங்கள்தான் என்று 11 பேர் கூறினார்கள். ஆனால், ஃப்ரீட்மேன் என்ற பெண்ணும், மெண்டோன்ஸா என்ற கப்பல்படை வீரரும் மட்டுமே ஆய்வுகளின் அடிப்படையில் பொருத்தமாக இருந்தார்கள்.
 

முதலில் அந்தப் பெண் ஒரு நர்ஸ் என்றே கருதப்பட்டார். ஆனால், ஃப்ரீட்மேன் தன்னை பல் மருத்துவரின் உதவியாளர் என்று கூறினார். அன்றைய தினம் போர்நிறுத்த அறிவிப்பு வெளியானதும் டைம்ஸ் சதுக்கத்தில் மக்களின் சந்தோஷத்தை காண வந்தேன். அப்போது எனக்கு எதிரே வந்த நபர் நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பலமாக என்னை வாரியணைத்து முத்தமிட்டார். அவ்வளவு ஒரு ஆழமான முத்தத்தை நான் பார்த்ததில்லை. எனக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் அவருடைய இறுக்கமான பிடியில் இருந்து நான் விடுபட முடியவில்லை என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஃப்ரீட்மேன்.
 

sail statue


ஜப்பான் சரணடைந்த செய்தி வெளியான போது டைம்ஸ் சதுக்கத்தின் அருகே உள்ள பாரில் மெண்டோன்ஸா மது அருந்திக் கொண்டிருந்தார். இந்த அறிவிப்பு, இனி போர்க்களத்துக்கு போக வேண்டியதில்லை என்ற நிம்மதியை கொடுத்தது. உடனே, தனது தோழியை தேடி சதுக்கத்திற்கு வந்தார்.
 

“எனக்கு எதிரே வெள்ளை உடையில் வந்த பெண்ணை நர்ஸ் என்று நினைத்தேன். நர்ஸுகள் மீது எனக்கு எப்போதுமே பிரியம் அதிகம். மது அருந்தியிருந்த நிலையில் போர் நிறுத்த அறிவிப்பை கொண்டாட வேண்டும் என்று பரபரத்தேன். என்ன செய்கிறேன் என்று யோசிக்கவே இல்லை. அந்த பெண்ணை பற்றியிழுத்து முத்தமிட்டேன்” என்று தனது நினைவை சொல்லியிருக்கிறார் மெண்டோன்ஸா.
 

டைம்ஸ் சதுக்கத்தில் இந்த புகைப்படம் சிலையாக வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள மெண்டோன்ஸா, தனது 95 ஆவது வயதில் 2019 பிப்ரவரி 17 ஆம் தேதி இறந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

 

 

Next Story

பாராசூட்டில் பறந்த கடற்படை வீரருக்கு நேர்ந்த துயரம்!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

andhra pradesh navy soldier parachute incident at west bengal 

 

பயிற்சியின் போது ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் குதித்த கடற்படை வீரர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்திய கடற்படையை சேர்ந்த சிறப்பு படை வீரர் சந்திரகா கோவிந்த் (வயது 31). இவர் மேற்கு வங்கத்தில் ஹெலிகாப்டரில் வானில் பறந்தவாறு பாராசூட் மூலம் குதித்து தரை இறங்குவதற்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது எதிர்பாராதவிதமாக பாராசூட் சரியாக செயல்படாமல் இருந்துள்ளது.

 

இதனால் சந்திரகா கோவிந்த் கீழே விழுந்து பலியானார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவரின் உடலானது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது. இச்சம்பவம் கடற்படை வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

தமிழ்நாடு மீனவர்களைச் சுட்ட இந்தியக் கடற்படை; வழக்குப் பதிவு செய்த காவல்துறை

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Indian Navy and Tamil Nadu fishermen case

 

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடற்படை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் சென்ற படகின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 

கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து கடற்படை விளக்கம் அளித்தது. அதில், சந்தேகப்படும் படி சென்று கொண்டிருந்தப் படகை  நிறுத்தச் சொல்லி தொடர்ந்து எச்சரித்தும் கேட்காமல் விரைந்து சென்றதால் தாக்குதல் நடத்தப்பட்டது. படகு நிற்காமல் சென்றதால் விதிமுறையின் படி துப்பாக்கியால் சுட்டதாகவும், படகு மேற்படி முன்னேறாமல் இருக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Indian Navy and Tamil Nadu fisIndian Navy and Tamil Nadu fishermen case hermen case

 

காயமடைந்த மீனவருக்கு முதலுதவி அளித்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். மேலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம் என்றும் கடற்படை விளக்கம் அளித்துள்ளது. 

 

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மயிலாடுதுறை மீனவரை அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், “10 மீனவர்கள் சென்றுள்ளனர். அதில் 3 பேர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள் 6 பேர். மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படை வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் வீரவேல் என்ற மீனவர் காயம் பட்டு தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தார். மதுரையில் இருக்கும் அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.பி சு. வெங்கடேசன் அத்தனை பேரும் அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அங்கு மீனவரை குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்” எனக் கூறினார்.

 

Indian Navy and Tamil Nadu fishermen case

 

அதேபோல், கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் இந்திய எல்லையில் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தூரத்திலிருந்து ஒரு கடற்படை படகு வந்தது. அது இந்திய கடற்படையா அல்லது இலங்கை கடற்படையா என தெரியாமல், இலங்கை கடற்படையாக இருக்குமோ என நினைத்து விரித்திருந்த வலையை எடுக்க முயற்சித்தோம். அதற்குள் அந்தப் படகு எங்கள் அருகே வந்தது. அதனால், வலையை கடலிலேயே வெட்டிவிட்டு எங்கள் படகை கரை நோக்கி திருப்பினோம். அப்பொழுதுதான் எங்களை நோக்கி சுட்டனர். 10 முதல் 15 நிமிடங்கள் அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பிறகு நாங்கள் கையை மேலே தூக்கி நின்றோம். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, கீழே மயங்கி விழுந்தார். அதற்குள் அந்த கப்பல் அருகே வந்தது, நாங்கள் இலங்கை கடற்படை என்று நினைத்து ஓடினோம். பிறகு கடற்படையினர், யாருக்கும் அடிபட்டுள்ளதா என்று கேட்டனர். பிறகு அந்த அடிபட்டு மயங்கி இருந்த இளைஞரை அவர்கள் மீட்டனர். அதுமட்டுமின்றி எங்களின் கைகளைப் பின்புறமாக கட்டிவிட்டு, ஸ்டீல் கம்பியால் கடுமையாக தாக்கினர்” என்று குற்றஞ்சாட்டினர். 

 

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய கடற்படை வீரர்கள் மீது தமிழ்நாடு கடலோர காவல் துறையினர் கொலை முயற்சி, பொருட்களை சேதப்படுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.