Skip to main content

குஷ்பு சினிமா ஸ்டாராக இருக்கலாம்; ஆனால் மருத்துவர் எழிலன் அரசியல் ஸ்டார் - திருமா பேச்சு!

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

ghf



தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரைகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது, "ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அதிகப்படியான விருப்பத்தின் பேரிலேயே இன்று இங்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளேன்.

 

அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதே நேரத்தில் தளபதி அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும். எழிலனுடைய தந்தை பேராசிரியர் நாகநாதன் பொருளியல் வல்லுநர். பொருளாதாரத்தில் ஆகச்சிறந்த வல்லுநர். மறைந்த நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான தோழர். காலையில் கலைஞர் அவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார் என்றால் அவரோடு சேர்ந்து நடக்கின்ற பாக்கியம் பெற்றவர் பேராசிரியர் நாகநாதன். அந்த அளவுக்கு நெருக்கமானவர். அவருடைய அருமை புதல்வர்தான் நம்முடைய மருத்துவர் எழிலன். நம்முடைய தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அவருடைய பிள்ளையாகவே இருந்து அவரை பார்த்துக்கொண்டவர் மருத்துவர் எழிலன். 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. 


கோபாலபுரமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் அவருடன் 24 மணி நேரமும் இருந்து அவரை கண்காணித்தார் என்ற பெருமை அவர் ஒருவரையே சாரும். அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருப்பவர் அல்ல. தனக்குப் பதவி வேண்டும் என்ற அடிப்படையில் தளபதியை அவர் கட்டாயப்படுத்தி வற்புறுத்தி இந்த வாய்ப்பை அவர் பெறவில்லை. இவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் கொள்கைகளை சட்டமன்றத்தில் பாதுகாக்கும் முக்கியப் பணியை சிறப்பாகச் செய்வார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. அதையும் தாண்டி அனைத்து காரியங்களையும் கொள்கை சார்ந்து சிந்திக்கக் கூடியவர். வெறும் கட்சிப் பற்று, தலைமைப் பற்று என்று இல்லாமல் தமிழக மக்களுக்காக ஒரே கோட்டில் அவர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தருகிறேன். பேரறிஞர் அண்ணா, பெரியாரின் கொள்கைகளையும் எப்போதும் காக்க வேண்டும், அதன்படி ஆட்சி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர் என்பதால் சமூகநீதி கருத்தைக் காப்பதில் யாரையும் விட அவருக்கு அதிக அக்கறை உண்டு. 


நாடு தழுவிய அளவுக்கு அவருக்குக் கருத்தியல் சார்ந்த தொடர்புகள் உண்டு. அப்படி இவர் ஆற்றிய பணிகளைக் கண்டு மனமுகந்து இவரை உங்களிடம் ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடியவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் சினிமா ஸ்டாராக இருக்கலாம், ஆனால் இவர் அரசியல் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. கருத்தியலில் இவரோடு அவர் போட்டியிட முடியாது. இவரின் விவாதத்துக்கு அவரால் பதிலளிக்க முடியாது. அவரையும் இவரையும் நாம் ஒப்பிடவே முடியாது. அவருக்கு சினிமா புகழ் உண்டு. அதை வைத்து அரசியலிலும் புகழ் தேட ஆசை. எனவே அவர் ஒரு கட்சியில் சேர்ந்த இங்கே போட்டியிட வந்திருக்கிறார். இவர் தமிழகத்தைச் சமூகநீதி பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். எனவே இந்த தமிழகம் அடிமையாகாமல் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல தீயசக்திகளைப் புறந்தள்ள வேண்டும். மருத்துவர் எழிலனை சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.


 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.