Skip to main content

பாவமன்னிப்பு கேட்கச்சென்ற பெண்...

Published on 29/06/2018 | Edited on 30/06/2018

கேரளாவில் ஒரு ஆடியோ பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் இரு ஆண்கள் பேசிக்கொள்கின்றனர்.  கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகிய பெண் ஒருவரின் கணவர் ஒருவர், இன்னொருவரிடம் மொபைலில் பேசிக்கொள்கிறார். அதில் அவர், தன் மனைவி பாதிரியாளர்களால் பாலியல் தொல்லைகளும், வன்புணர்வும் செய்யப்பட்டுள்ளார் என்று கூறுகிறார். 


 

church

 

 

 


கடந்த பிப்ரவரி மாதம் அவரது மனைவியின் மெயிலில் 5ஸ்டார் ஹோட்டலில் தங்கிய பில்களாக இருந்துள்ளது. அது என்ன என்று கணவர் கேட்டதற்கு அவரின் மனைவி மலங்கரா ஆர்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்த ஒரு பாதிரியார் தன்னை பிளாக்மெயில் செய்து பாலியல் வன்புணர்வு செய்தார் என்று கூறியதாக அதில் சொல்கிறார். மேலும் அதில், பல வருடங்களுக்கு முன்பு அதாவது அவர்கள் இருவருக்கும் திருமணமாவதற்கு முன்பே அவரது மனைவியை பாதிரியார் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, தற்போதுவரை அதை காரணம்காட்டி பிளாக்மெயில் செய்துவருகிறார். அவர்கள் குழைந்தை ஞானஸ்தானத்தின்போது கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் அந்த சோகத்தை வேறொரு பாதிரியாரிடம் பகிர்ந்து பாவமன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அவரும் இதை கணவரிடம் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் என்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிளாக்மெயில் செய்துள்ளார். அப்போது அந்த பாதிரியார் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வேறொரு பாதிரியாருக்கு அனுப்ப, அவரும் இந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவுகள் என்று இதற்கு முன்னர் செய்தவர்கள் போன்றே செய்திருக்கிறார். அவர்கள் அந்த பெண்ணின் தகாத புகைப்படம், வீடியோ என்று எடுத்துக்கொண்டு அவரை பிளாக்மெயில் செய்துள்ளனர். அப்பெண்ணை 5 முதல் 8 பாதிரியார்கள் வரை சீண்டியிருக்கலாம் என்று அந்த ஆடியோவில் சொல்கிறார் அந்த கணவர்.

 

இதுத்தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அந்த சர்ச்சின் மேலிடத்தில் புகார் செய்துள்ளார். மேலும் அந்த சர்ச்சின் செய்தி தொடர்பாளர் பி.சி.எலியாஸ், “ஒரு பெண்ணின் கணவர் 5 பாதிரியார்கள் தனது மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தது உண்மைதான். அந்த 5 பாதிரியாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளும்வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். விசாரணையில் உறுதியான பின்புதான் அவர்கள் நல்லவர்களா, தீயவர்களா என்று சொல்ல முடியும். அவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது என்பதும் அப்போதுதான் முடிவு செய்ய முடியும். ஒரு வேளை விசாரணையின்போது அவர்கள் நல்லவர்கள் என்று முடிவு வந்தால் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இதே வேலைக்கு திரும்புவார்கள் என்று கூறியுள்ளார். அவர் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஐந்து பாதிரியார்கள் பற்றியும் தகவல்கள் தெரிவிக்கவில்லை. 

 

 

 

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பாதிரியாளர்களில் மூன்று பாதிரியார்கள் திருவல்லாவில் உள்ள நிராணம் டியோசீஸ், பண்டாலத்தில் உள்ள தும்பமொன் மற்றும் டெல்லியில் உள்ள டிவோசீஸை சேர்ந்த பாதிரியார்கள் என்று சொல்லப்படுகிறது. டிவோசீஸ் என்றால் கிறித்துவ மத குருவின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம். இந்த டிவோசீஸுக்கு கீழ் இந்தியா முழுவதும் 30 மாவட்டங்கள் உள்ளது. இந்த பிளாக்மெயில் விஷயத்தில் பல பாதிரியாளர்கள் இருப்பதாகவும், அவரது மனைவி அவர்களை பற்றி வெளியே சொல்வதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

 

சர்ச்சின் நிர்வாக குழு செயலாளர் பாதிரியார் மேத்திவ்," இது முற்றிலும் நம்பத்தகுந்ததில்லை. பாதிரியார் யாராவது 5ஸ்டார் ஹோட்டலிற்கு பாலியல் வன்புணர்விற்காக அழைத்து செல்வார்களா. அங்கிருக்கும் சிசிடிவியை பார்த்தாலே தெரிந்துவிடும். இவர் ஏற்கனவே கம்யூனிட்டியை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவர். ஆகையால் அதற்கு பழிவாங்கும் நோக்கில்கூட இவ்வாறு தவறாக சித்தரித்து சொல்லலாம்", என்கிறார்.

 

 

 

ஒரு சிலர், சர்ச் பாதிரியாளர்களின்மீது இவ்வாறு பல வருடங்களாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கான விசாரணை கிறிஸ்துவ மத குருமார்கள் சரியாக நடத்துவதில்லை. பாதிரியார்கள் இப்படி தவறு செய்தியிருக்கிறார்கள் என்று வெளியே தெரியவந்தால், அது அந்த மதத்திற்கே பெரிய விளைவை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இது போன்ற விசாரணைகளை தட்டிக்கழித்தும், பாதிரியாளர்களை காப்பாற்றியும் வருவதாக தெரிவிக்கின்றனர்.   

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்றுவரை காவலர்களிடம் வழக்கு தொடரவில்லை, சர்ச் நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு அந்த பாதிரியார்களின் பதவி பறிக்கப்பட்டாலே போதும் என்று அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் நேஷனல் விமன் கமிஷன் என்று சொல்லப்படும் பெண்கள் நலக்குழு இதைப்பற்றி கேரள கோட்டயம் காவல்துறையின் குற்றவியல்துறை இயக்கி வரும் டிஜிபி லோக்நாத் பெஹ்ராவிடம் கோரிக்கை வைத்தனர். இதேபோன்று முன்னாள் முதல்வர் அச்சுனானந்தனும் கோரிக்கை வைத்துள்ளார். அப்படி இருந்தால்தான் நல்ல நேர்மையான விசாரணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  

 

 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.