Skip to main content

'அமேசான்' நடத்திய 'Pen To Publish' -இல் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'நக்கீரன்' பொறுப்பாசிரியரின் நூல்...

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

kdp pen to publish award 2019 winner govi lenin


அமேசான் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் Pen To Publish என்ற எழுத்தாளர்களுக்கான நாடு தழுவிய போட்டியில் தமிழ் பிரிவில் 'நக்கீரன்' பொறுப்பாசிரியர் கோவி.லெனின் வெற்றி பெற்றுள்ளார். 
 


கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள சிறந்த எழுத்தாளர்களை அடையாளம் கண்டறியும் வகையில் Pen To Publish என்ற போட்டியை நடத்தி வருகிறது அமேசான் நிறுவனம். இதில் இந்தியாவிலிருந்து ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த இ-புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படும். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளர்களை அமேசான் நேற்று அறிவித்தது. இதில் நீண்ட மற்றும் குறுகிய வடிவ இலக்கியப் படைப்புகளுக்கு தனித்தனியே வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். அந்த வகையில் தமிழ் மொழிக்கான சிறந்த குறுகிய வடிவ நூலாக நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் எழுதிய '2K Kid: திருவள்ளுவர் ஆண்டு' நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய நக்கீரன் பொறுப்பாசிரியரின் இந்த புத்தகம், ஒரு தெருவில் வாழ்ந்த, வாழ்கிற தலைமுறையின் மாறுபட்ட பார்வைகளை அலசும் நூலாக அமைந்தது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்ற நிலையில், தமிழ் மொழிக்கான சிறந்த குறுகிய வடிவ நூலாக '2K Kid: திருவள்ளுவர் ஆண்டு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 

 

 


அதேபோல சிறந்த நீண்ட வடிவ தமிழ் நூலாக புருனோ குருவின் 'போலியோ உணவின் அறிவியலும் உளவியலும்' என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் விருப்பம் மற்றும் நடுவர்களின் தேர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படும் இந்தப் போட்டியில், எழுத்தாளர்கள் துர்ஜோய் தத்தா, சுதா நாயர், திவ்யா பிரகாஷ் துபே, பா.ராகவன் மற்றும் சி.சரவண கார்த்திகேயன் ஆகியோர் நடுவர்களாகச் செயலாற்றினார். 

 

 

 

Next Story

சென்னையில் விர்ச்சுவல் ஷாப்பிங்; அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அமேசான் எக்ஸ்பீரியன்ஸ்  அரங்கை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறது;  வணிக வாடிக்கையாளர்களுக்கு மொத்த கொள்முதல் மீது கூடுதல் சேமிப்பை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 வழங்கியிருக்கிறது

 

பண்டிகைக் காலத்தில் சென்னையில் வணிக வாடிக்கையாளர்கள் வாகனம், ஃபர்னிச்சர்ஸ், லேப்டாப் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரீனா (Amazon Xperience Arena)  மூலம் சென்னையில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதில் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது. அதாவது,  Xperience Arena  என்பது அமேசானில் இடம்பெறும் பொருட்களுக்கு உயிர்கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விர்சுவல் இடமாகும். 

 

இந்நிகழ்வானது, சென்னை எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அமேசான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அனைவருக்கும் வழங்கியது. தவிர, ஊடகங்கள், இணைய பிரபலங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளை ஆராய்வதற்கும், தற்போது நடைபெற்று வரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறுவதற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கியது.

 

அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரீனா ஏழு கவர்ச்சிகரமான மற்றும் இண்டர்ஆக்டிவ் மண்டலங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமான போட்டிகளில் பங்கேற்கவும், அற்புதமான அமேசான் பரிசுகளை வெல்லவும் உதவியது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினிகள், பெரிய உபகரணங்கள், தொலைக்காட்சிகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட வகைகளில் பரந்த தேர்வுகளில் இதுவரை பார்த்திராத ஒப்பந்தங்களை அனுபவிக்கும் வாய்ப்பையும் இது வழங்கியது.

 

இதுகுறித்து அமேசான் இந்தியா இயக்குநர் சுசித் சுபாஸ் பேசுகையில், “அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் 2023-ல் சென்னையில் உள்ள அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரங்கில் கிடைக்கும் அற்புதமான சலுகைகள் மற்றும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  சென்னையில் வணிக வாடிக்கையாளர்கள் அமேசான் பிசினஸிலிருந்து கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்த பண்டிகைக் காலத்தில், வணிக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள், அற்புதமான சலுகைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் எங்களது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023-ன் போது அவர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்யவும் மேலும் சேமிக்கவும் உதவுகிறோம்" என்றார். 

 

 

Next Story

அமேசான் காட்டில் 17 நாட்கள் தவித்த குழந்தைகள்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

amazon forest flight incident four child recover safety

 

கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த 1 ஆம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் பயணம் செய்தனர். இவர்கள் சென்ற விமானமானது அமேசான் வனப்பகுதிக்கு மேலே வான்வெளியில் பறந்தபோது விமானி தங்களது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே விமானமானது, விமான நிலையத்துடன் தனது கட்டுப்பாட்டை இழந்தது.

 

இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும் இந்த தேடுதல் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆம் தேதி விமானத்தின் சில பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட தேடுதல் பணியில் விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

 

மேலும் இந்த விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த குழந்தைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து தேடுதல் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விபத்து நிகழ்ந்த 17வது நாளில் 11 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகளை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் கடந்த 17 நாட்களாக வனப்பகுதியிலேயே சிறிய அளவில் அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு குடில் போன்று அமைத்து தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து கொலம்பியா அதிபர் ட்விட்டரில், இந்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.