Skip to main content

"கே.சி வீரமணி தளபதி மட்டும் தான்; கேப்டன் எடப்பாடி பழனிசாமி தான்..." - ரெய்டு விடும் பெங்களூர் புகழேந்தி!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

fd

 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் கடந்த சில வாரங்களாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இதில் பல்வேறு சொத்து ஆவணங்கள், பணம், நகை கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளிவந்த நிலையில், கே.சி வீரமணி வீட்டில் முறைகேடான வகையில் குவிக்கப்பட்டிருந்த பல நூறு யூனிட் மணல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

கே.சி வீரமணி வீட்டில் கடந்த 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில், நகைகள், ஆவணங்கள், வெளிநாட்டுப் பணம் முதலியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 653 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

என் உடம்பு நன்றாக இருக்கிறது, ஹாட் பீட் முதல் அனைத்தும் நார்மலாக இருக்கிறது, நீங்கள் உங்கள் உடம்பைச் சோதனை செய்துகொள்ளுங்கள். இது கே.சி வீரமணியுடன் முடிந்து போகிற சம்பவம் இல்லை. இன்னும் வரிசையாக ஆட்கள் இருக்கிறார்கள். அண்ணன் தங்கமணி இருக்கிறார். கேப்டன் மீதே இன்னும் கை வைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தானே கேப்டன். இதய பிரச்சனை இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பலகோடி ரூபாய் பதுக்கல்கள் எல்லாம் இனி வரிசையாக வர இருக்கிறது. 500 கோடி, 1000 கோடி என மனுஷன் பார்த்தா என்ன சார் ஆவான், டொங்குனு போயிடுவான். எனவே அந்த செய்திகளைப் பார்க்கும் நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லாம் நம்முடைய வரிப்பணம். போன முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது இருந்த சொத்துக்களை விட 50 மடங்கு, 100 மடங்கு என அதிகப்படியான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்கள். 

 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக தலைமை, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்களே? 

 

ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? திமுக 52 சதவீத இடங்களில் வெற்றி பெற்றார்களே, அது எப்படி நடந்தது. திமுக வரவே வராது என்றார் ஈபிஎஸ். ஆனால் நடந்தது என்ன. திமுக வெற்றிபெற்றதும் அடுத்து நடத்த வேண்டிய நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்தாமல் பயந்து நடுக்கினார். கிராம புறத்திலேயே அதிக இடங்களில் வெற்றிபெற்ற திமுக , இந்த தேர்தலை நடத்தினால் அனைத்து இடங்களில் வெற்றிபெறும் என்ற பயத்தினால் தேர்தலை நடத்துவதையே கை விட்டு விட்டார். 

 

வரப் போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளாரே?

 

எனக்குத் தமிழகத்தைத் தாண்டி கர்நாடகா, டெல்லி அரசியல் தலைவர்கள் வரை பாஜக தலைவர்களுடன் நல்ல பழக்கம் இருக்கிறது. அனைவரிடமும் நட்பு பாராட்டுவேன். எடியூரப்பா வரை எனக்கு நல்ல நண்பர் தான். ஆனால் நட்பு வேறு, அரசியல் வேறு. தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைத்தால் அந்த கூட்டணி வெற்றி பெறாது என்பது அனைவருக்கும் தெரியும், பாஜகவுக்கு இந்த உண்மை தெரியும், அதிமுகவுக்கு தெரியும். இருந்தும் அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் இவர்கள் இருவரும் இப்படி மாற்றி மாற்றி கூறுகிறார்கள். அதிமுக மட்டுமல்ல, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கூட அவர்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதே நிஜம். 

 

ரெய்டு போகிற இடங்களில் சொத்து ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. ஆனால் கே.சி வீரமணி வீட்டில் பல நூறு யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறதே? 

 

இந்த தகவல் உண்மையாக இருந்தால் வெட்கக்கேடானது, அத்தியாவசியமானப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இதற்குச் சட்டத்தில் தனிப்பிரிவே இருக்கிறது. கடுமையான தண்டனை வரை இதற்குக் கொடுக்கலாம். அதுவும் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த மாதிரியான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்பது மன்னிக்க முடியாத குற்றம். நிச்சயம் அதற்கான தண்டனையை அவர் பெறுவார்.

 

 

 

 

Next Story

ஓபிஎஸ் அணி சார்பில் கர்நாடகாவில் தனித்துப் போட்டி? -ஆலோசனையில் புகழேந்தி

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

eparate competition in Karnataka on behalf of the OPS team? -pughazhendhi in consultation

 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கர்நாடக அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

 

கர்நாடக மாநில அதிமுக சார்பில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநில கழக செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவைத் தலைவர் ஏ.ஆனந்தராஜ்,  பொருளாளர் மனோகர், இணைச்செயலாளர் வசந்த ராணி, துணைச் செயலாளர் அனிதா, மாவட்ட கழக செயலாளர் முனிரத்தினம், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணா, பரசுராமன், இஸ்ரேல், பங்காரு பேட்டை ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சண்முகம், ரவி, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் எஸ்.ரவி, கோலார் மாவட்ட கழக செயலாளர் சாயி இன் ஷா, காந்திநகர் தொகுதி அவை தலைவர் பாண்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்குக் கழக கொள்கை பரப்பு செயலாளர் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியில் இணைந்து போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் கோலார் தங்க வயல், காந்திநகர், பங்காரு பேட் போன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ்ஸிடம்சமர்ப்பித்து அனுமதி பெறப்படுகிறது என தீர்மானிக்கப்பட்டது.

 

eparate competition in Karnataka on behalf of the OPS team? -pughazhendhi in consultation

 

தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் வா.புகழேந்தி பேசும்போது,''கோலார் தங்கவேல் காந்திநகர் போன்ற இடங்களில் தனித்து நின்று ஜெயலலிதா ஆணைக்கிணங்க தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலிலும் ஓபிஎஸ் அனுமதித்தால் போட்டியிடத் தயார். தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளராக அவர் இருப்பதால் அவர்தான் ஏ, பி பாரங்களை வழங்க வேண்டும். இரட்டை இலை எங்களுக்குதான் கிடைக்கும். ஓபிஎஸ் நிர்வாகிகளை அறிவித்த பின்னர் இந்த மண்டபத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. மீண்டும் கர்நாடகா கழகம் எழுச்சி பெற்றுள்ளது'' என்றார்.

 

முன்னதாக ஓபிஎஸ் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 24 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு கர்நாடகத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 

 

Next Story

“வளர்மதி நவீன புரட்சித் தலைவி...” - இ.பி.எஸ் அணியின் மீது புகழேந்தி பாய்ச்சல்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

pugazhenthi talk about admk and edappadi palanisamy

 

திருச்சியில் வருகின்ற 24-ஆம் தேதி எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் கட்சி 50 ஆண்டுகள் முடிந்து 51 வது ஆண்டின் துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னுரையாக நேற்று திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் மருது அழகுராஜ் பேசுகையில், “அநீதி எழும்போதெல்லாம் திரைப்படத்தில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ராஜ்கிரண் வருவது போல எடப்பாடியின் அரசியல் பித்தலாட்டத்தை கண்டு  எங்கள் அண்ணன் ஓபிஎஸ் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிற்கிறார். இபிஎஸ் என்ற துரோகியை குறித்து சொல்ல இருவர் இருந்தால், ஓபிஎஸ் என்ற உத்தமரை சொல்ல 4பேர் இருப்பார்கள். எனவே இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கிற்கு அதிகமான சீர் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் ஒருவர் சீர் கொண்டு சென்றார். எடப்பாடி வயதிற்கு வந்துவிட்டாரோ? அதுவும் புதுக்கோட்டையில் இருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த சீரில் குட்கா கொண்டு சென்றுள்ளனர். ஓபிஎஸ் செய்த ஒரு தவறை இபிஎஸ்ஸை சொல்லச் சொல்லுங்கள். எடப்பாடி செய்த துரோகத்தை வெளிச்சம் போட்டு இந்த ஊருக்கு சொல்லும் நாள் ஏப்ரல் 24 தான், இலை கோட்டையின் பலத்தை இந்த மலைக்கோட்டையில் காட்ட வேண்டும். திருச்சியில்  கடல் இல்லை என்ற ஒரு குறையை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டு வரவேண்டும். இதை பார்க்கும் இபிஎஸ்க்கு லூஸ்மோசன் போக வேண்டும்” என்றார்.

 

புகழேந்தி கூறுகையில், “பிரதமரை பார்க்க ஓபிஎஸ் வந்தபோது இபிஎஸ் ஓரமாக ஒதுங்கி நின்றார். ஆனால் பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்தாரே அவருடைய காலில் வந்து விழச் சொல்லுங்கள். வழக்கு தோல்வி அடைந்து விட்டதாகப் பலர் என்னிடம் கேட்டார்கள். இது தர்ம யுத்தம் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம் என்று கூறினேன். இபிஎஸ் மீது தேர்தல் ஆணையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என இபிஎஸ் மனு அளித்தார். ஆனால் நீதிபதி தன்னால் விசாரிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். 1996ல் திருச்சியில் அன்று ஜெயலலிதா விடிய விடிய மாநாட்டை நடத்தினார்கள். நாம் நடத்தப்போகும் மாநாட்டில் நீங்கள் இராணுவ சிப்பாய்கள் போல இருந்து செயல்பட வேண்டும். எடப்பாடியை தகர்க்க எடப்பாடியில் இருந்து மிகப்பெரிய கூட்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்றைய காலகட்டத்தில்  நவீன பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் என்று பலர் அழைக்கப்படுகிறார்கள். அதில் பொன்னையன் தான் நவீன தந்தை பெரியார், அண்ணா யார் என்றால் கே.பி முனுசாமி, இன்னொருவர் தொப்பியும் கண்ணாடியும் போட்டுக் கொண்டு வலம் வந்தார்.  

 

வளர்மதி தான் நவீன புரட்சித் தலைவி, இது வெட்கக்கேடானது. அதேபோல் ஜெயகுமார் பேசுகிறார், "மாநாடு குறித்து பேசியவர் முதலில் தெருக்கூட்டம் என்றவர் கருப்புப் பணம் 200கோடியை வைத்து மாநாடு நடத்தப்படுகிறது" என்று கூறுகிறார். மாநாடு முடிந்த பிறகு மைதானத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் கேன்கள், பைகள் சேகரிக்கும் டெண்டரை ஜெயக்குமாருக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.  எடப்பாடி பல தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் ஒரு முறை கூட தோற்கவில்லை. பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்த போது தோளில் தட்டிக் கொடுத்ததற்கு காரணம் மீண்டும் நீங்கள் முதலமைச்சர் ஆவீர்கள் என்பதற்காகவே. ஓபிஎஸ் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து நிறைய இழந்து விட்டார். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் ஓபிஎஸ்சை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  தற்போது இருக்கும் சபாநாயகர் புத்திசாலியானவர். இபிஎஸ்சின் திட்டம் என்ன என்று நன்றாகத் தெரியும். சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக இபிஎஸ்ஸை கையாண்டு வருகிறார்.  ஏப்ரல் 24 இபிஎஸ்ஸின் அரசியலுக்கு சாவு மணி அடிக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைய வேண்டும்” என்றார்.