Skip to main content

அன்றே ராகுலை கணித்தவர் ஸ்டாலின்  - காசி முத்து மாணிக்கம் 

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Kasi Muthu Manickam Interview

 

சமகால அரசியல் செயல்பாடுகளைப் பற்றியும், கலைஞர் குறித்த நினைவுகளையும், திமுக மூத்த உறுப்பினர் காசி முத்துமாணிக்கம் நம்மோடு  பகிர்ந்து கொள்கிறார்.

 

கலைஞரின் இறப்பு எங்கள் அனைவரையும் மிகவும் பாதித்தது. கண்ணீர் என்பது தொடர்ந்துகொண்டே இருந்தது. மாற்றாக தளபதி கிடைத்ததால் அது இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனாலும் தலைவர் கலைஞர் அவர்களை எப்போதும் மறக்க முடியாது. எங்களின் ரத்தத்தோடும் நரம்போடும் சதையோடும் அவர் எப்போதும் கலந்திருக்கிறார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நாவலர் உட்பட அனைவரும் கலைஞர் தான் கழகத்தை வழிநடத்த தகுதியானவர் என்கிற முடிவுக்கு வந்தனர். ஒருமுறை கூட சட்டமன்றத் தேர்தலில் தோற்காத தலைவர் கலைஞர். 

 

அனைத்து விதமான வெற்றி தோல்விகளையும் பார்த்தவர் கலைஞர். அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். வரலாற்றின் ஒரு பகுதியையே கலைஞர் எழுதினார். தன்னுடைய கடைசி காலத்தில் கூட அண்ணாவின் பெயரையே அதிகம் உச்சரித்தார். சிறிய கட்சிகளைக் கூட வாழவைத்தவர் கலைஞர். தன்னை விட்டுச் சென்ற தலைவர்களைக் கூட, அவர்கள் திரும்பி வந்த பிறகு அன்போடு அரவணைத்தவர். சாதாரண தொண்டனான என்னுடைய மனம் கூட நோகக்கூடாது என்று நினைத்து கலைஞர் பேசுவார். 

 

அவர் மறைந்தாலும் அவருடைய எழுத்துக்கள், பேச்சுக்கள், வசனங்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றன. கலைஞர் போல் இன்னொருவர் வர முடியாது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் மதிக்கக்கூடியவர் அவர். கலைஞர் போலவே தளபதியும் அனைவரையும் அரவணைக்கக் கூடியவர். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் உட்பட அனைவரையும் கூட்டணிக்குள் கொண்டுவந்தார். அதுபோல் இன்று இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சரியாக அறிவித்தார். இன்று இந்தியாவின் தலைவராக ராகுல் காந்தி வரும் வாய்ப்பு இருக்கிறது.

 

இப்போது இந்தியாவே ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டு விட்டது. அதற்கு அடித்தளம் அமைத்தவர் தளபதி தான். இன்று தேசிய அளவில் திமுகவை ஒரு முக்கியமான கட்சியாக உருவாக்கியுள்ளார் தளபதி. கலைஞர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதைவிட அதிகமாக உழைக்கிறார் தளபதி. திராவிடத்தை இந்திய அளவில் வளர்க்கும் வேலைகளை அவர் செய்து வருகிறார். கலைஞர் இறந்த பிறகு எங்களுடைய வாழ்வு இருண்டுபோனது என்று நினைத்தோம். தளபதி ஒரு மெழுகுவர்த்தியாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஆகாயத்தீயாக இருக்கிறார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நிறைவேறியிருக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும்.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.