Skip to main content

காஷ்மீர் பற்றியெரியப் போகிறதா???

Published on 22/06/2018 | Edited on 22/06/2018

தீவிரவாதியான தனது மகனை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டது என்பதைக் கேள்விப்பட்டார் ஒரு காஷ்மீர் தாய். கொஞ்சம் கூட கலங்கவில்லை, அவர் முகத்தில் சந்தோஷம் பொங்கியது. ஒரு துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.


 

kashmir


 

இதுதான் காஷ்மீரின் இன்றைய நிலை. ஒருவரை சுட்டுக் கொன்றால் ஒன்பது பேர் தீவிரவாதி ஆகிறார்கள். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, காஷ்மீரில் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காஷ்மீர் மாநிலம் தீப்பிழம்பாக மாறும் என்று ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

 

இதுதான் காஷ்மீரின் உண்மையான நிலைமை. காஷ்மீரில் பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அரசு அமைத்த முதல் நாளில் இருந்தே அந்த அரசை மக்கள் ஏற்கவில்லை. இப்போது அது முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே என்கிறார்கள் மக்கள். ஆனால், மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரி கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாத அமைப்புகள் விடுத்திருந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக காஷ்மீரே வெறிச்சோடியது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமே அரிதாக இருந்தது.

 

 

 

பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களான ஜீலானி, மிர்வைஸ், முகமது அஷ்ரஃப் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இன்னொரு தலைவரான மாலிக் கைது செய்யப்பட்டார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை பழிவாங்கும் செயல் என்று மிர்வைஸ் கூறினார். எங்களை கைது செய்துவிட்டு, தேடுதல் வேட்டை நடத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

 

ஆளுநர் வோரா மாநிலத்தில் அமைதி திரும்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்டியிருந்தாலும், பாதுகாப்புப் படையினருடன் பொதுமக்கள் சண்டையிடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாஜக தலைவர் அவினாஷ் ராய் கன்னா கூறியிருக்கிறார். அதேசமயம் கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பல அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

 

kashmir


 

இந்தமுறை காஷ்மீரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தியே ஆகவேண்டும் என்று பாஜக தலைவர் அவினாஷ் கூறியிருக்கிறார். இதுவரை காஷ்மீரில் 8 முறை குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகி இருக்கிறது. கடந்த காலங்களில் எல்லைக்கு வெளியே இருந்துவந்த தீவிரவாதத்தை எதிர்கொண்ட ராணுவத்துக்கு இந்தமுறை வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது. உள்நாட்டில், சொந்த மாநில முஸ்லிம் இளைஞர்களுடன் ராணுவம் மோத வேண்டியிருக்கிறது.

 

 

 

ஒரு இளைஞனைக் கொன்றால் அடுத்து 9 இளைஞர்கள் அவனுக்காக தீவிரவாதக் குழுவில் சேரும் நிலை இருக்கிறது. தெற்கு காஷ்மீரில் ஊக்கமாகச் செயல்படும் 144 தீவிரவாத இளைஞர்களை ராணுவம் கணக்கெடுத்துள்ளது. அவர்களில் 131 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். 13 பேர் மட்டும் வெளிநாட்டினர். கடந்த ஜனவரி 1 முதல் மே 31 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் மட்டும் 90 இளைஞர்கள் ஆயுதமேந்தி இருக்கிறார்கள். இதெல்லாம் பாஜக ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கு சான்றாகும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


 

kashmir


 

1977 ஆம் ஆண்டு முதல் 8 தடவைகள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகி இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 4 முறை அமலாகி இருக்கிறது. 1990 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் அன்றைய முதல்வர் பரூக் அப்துல்லா ராஜினாமா செய்தார். அதுபோன்றதொரு நிலைமைதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1990 முதல் 6 ஆண்டுகள் 264 நாட்கள் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. அதுதான் மிக நீண்ட ஆளுநர் ஆட்சி நடந்த காலமாகும்.

 

இப்போதும், பாஜக மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகளைப் பொருத்தே ஆளுநர் ஆட்சியின் காலம் நீடிப்பதும், முடிவுக்கு வருவதும் இருக்கிறது என்கிறார்கள். ஏனெனில், பாதுகாப்புப் படையினர் பெண்களின் போராட்டத்தையே சமாளிக்க முடியாமல் திணறினார்கள். இனி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தேடிப்பிடித்து வேட்டையாடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

காஷ்மீரில் எவ்வளவுக்கு எவ்வளவு ராணுவ நடவடிக்கை தீவிரமாகிறதோ, அந்த அளவுக்கு தீவிரவாத நடவடிக்கையும் அதிகரிக்கும் என்பதுதான் கடந்தகால வரலாறு. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் காஷ்மீரில் ஒளிவுமறைவாக எதுவும் பண்ணிவிட முடியாது. மக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் பிரச்சனையை கையில் எடுக்கும் அபாயமும் இருக்கிறது.

 

அப்படி ஒரு நிலைமை உருவாகவேண்டும். அதை தேர்தலில் தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று பாஜக நினைத்தால், அதுவும் தோல்வியிலேயே முடியும். ஏனென்றால் இப்போதைய நிலைமைக்கு முழு காரணமும் பாஜகதான் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, இதைவைத்து கேம் ஆட முடியாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

 

 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.