Skip to main content

மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கரை பொங்கல் என்று ஏன் சொல்லவில்லை..? - கரு. பழனியப்பன் கேள்வி!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

நீண்ட இழுபறிக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு, 

 

kl



ரஜினியின் வருகையை நாம் தமிழர் கட்சி இவ்வளவு நாட்களாக எதிர்த்து வந்தார்கள். ஆனால் தற்போதைய ரஜினியின் பேச்சை அவர்கள் வரவேற்றுள்ளார்கள். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ரஜினிதான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாரே, அப்புறம் வரவேற்கத்தான் செய்வார்கள். பிளாக், ஒயிட் இது இரண்டு மட்டும்தான். அவரு இல்லைனு தெளிவாக சொல்லிவிட்டார்னு நான் நினைக்கிறேன். ஒரு ரசிகரா அவரின் இந்த அறிவிப்பை கண்டு மகிழ்கிறேன். ஒரு ரசிகரா ரஜினியை எனக்கு அவ்வளவு பிடிக்கும். தியேட்டரின் வாசலில் காத்துக்கிடந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த ஒரே நடிகருடைய திரைப்படம் ரஜினி உடையதுதான். வேறு எந்த நடிகரின் திரைப்படத்தையும் அப்படி பார்த்தில்லை. டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவேன். காத்துகிடந்து வேறு யாருடைய திரைப்படத்தையும் நான் பார்த்தில்லை. மிக சமீபத்தில் ரஜினிகாந்த் ஒரு குழைந்தையை கொஞ்சவது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தை நீங்கள் உற்றுநோக்கி ரஜினியின் கண்ணை பார்த்தால் அதில் அவர் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதை கண்களில் காணலாம். அவரே குழைந்தை ஆகின்ற வயதை அவர் அடைந்துள்ளார். அப்பாடா என்று இருக்கு வேண்டிய வயதில் அவரை அரசியலுக்குள் இழுத்துவிடுவது தேவையில்லாத ஒன்று. இன்னும் அவர் நிறைய குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் நடிக்க வேண்டும். அமிதாப் பட்சனை விடவும் அவர் இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வேண்டும். அதற்கெல்லாம் இனி வரும் காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

அவர் அன்றைய பேச்சை முடிக்கும்போது புரட்சி வரட்டும், நான் அதன் பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளாரே?

புரட்சி வருமா? ஏதாவது நடக்கட்டும், அதன்பிறகு உங்களை கூப்பிடுவார்களா? புரட்சியில் பங்குகொண்டு வெற்றிபெற்ற ஒருவன்தான் தலைவன் ஆக முடியும். புரட்சி எல்லாம் நடந்து முடியட்டும், அதன்பிறகு நான் வருகிறேன் என்பதெல்லாம் எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. அதன்பிறகு அவரை வாங்க, வாங்க வந்து சிஇஓ போஸ்ட்ல உங்காருங்கனு யாரும் சொல்லப்போவதில்லை. அவரு கதவை அடைத்துவிட்டார். மறுபடி மறுபடி அவரை நீங்கள் உயிர்பிக்க வேண்டாம். உங்களுக்கு தேவை இருக்கு. அதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவீர்கள். சீட்டுகட்டுகளில் எவ்வளவு கார்டு இருந்தாலும் ஜோக்கர் இருந்தாதான் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும். 

அப்படி என்றால் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? 

வெற்றிடம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு பதிலாக புதிதாக மாற்று தோன்றி அதனை ஈடு செய்யும். அண்ணா, திமுக என்ற கட்சியை தொடங்கி காங்கிரஸ் என்ற பெரிய இயக்கத்தை வீழ்த்தி ஆட்சியில் இருந்த போது எதிர்பாராத விதமாக இறந்து போனார். அவரின் இடத்தை இன்றுவரை யாரேனும் ஈடு செய்தார்களா? மாறாக கலைஞர் என்பவர் தோன்றினார். அவரிடம் இருந்து எம்ஜிஆர் என்பவர் தோன்றினார். ஆகையால் சிம்மாசனமோ அல்லது சவப்பெட்டியோ அவனவன்தான் செய்ய வேண்டும். வெற்றிடம் என்ற ஒன்று இல்லை. நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு நினைத்து பார்த்தீர்களா? எடப்பாடி அவர்கள் அடுத்த மூன்றாண்டு காலத்தை தீர்மானிப்பார் என்று? நாட்டில் இவ்வளவு பிர்ச்சனை இருக்கு எதைபற்றியாவது கவலை படுகிறாரா? நடவு நடுகிறார், வண்டி ஓட்டுகிறார், எதை பற்றியும் அவர் கவலை படவில்லை. சிரிச்சிகிட்டே இருக்காருல்ல. எடப்பாடி என்ன ஜெயலலிதா இடத்தை நிரப்பினாரா என்ன? ஜெயலலிதா எம்ஜிஆர் இடத்தை நிரப்பினாரா? அவரவர் உருவாகி தனக்கான இடத்தை நிரப்புவார்கள். இப்போது பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆட்சி நடைபெற்று கொண்டுதானே இருக்கின்றது. 

ரஜினி அரசியலுக்கு வரவி்ல்லை, அவர் கதவடைத்துவிட்டார் என்று நீங்கள் சொல்வது போல வைத்துக்கொண்டாலும் அவர் புதிய சித்தாந்தம் ஒன்றை கூறியுள்ளதாக நீங்கள் நினைக்கவில்லையா?

அவர் அந்த பத்தரிக்கையாளர் சந்திப்பில் ஒரு சிந்தாந்தத்தை மட்டும் கூறவில்லை. பல சிந்தாந்தத்தை கூறினார். சக்கரை பொங்கல் வைத்த பாத்திரத்தில் மீன் குழம்பு வைத்ததை போல் என்று புதிய அரிய கருத்தை தெரிவித்துள்ளார். மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கரை பொங்கள் வைத்ததுபோல் என்று கூறாமல், சக்கரை பொங்கல் வைத்த பாத்திரத்தில் மீன் குழம்பு வைத்துபோல் என்று தெரிவித்துள்ளார். 

இதில் என்ன தவறு இருக்கிறது? 

உங்களுக்கு புரியவில்லையா? பட்சனம் செய்ய வேண்டும் என்பது அதனுடைய பொருள். உங்கள் வீட்டில் பட்சனம் செய்வார்களா? ஏற்கனவே ஒரு முறை அப்படி சொல்லியுள்ளார். பாலில் பட்சனம் செய்ய வேண்டும் என்று. எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். பெண்களுக்கு ஓட்டுப்போட தெரியவில்லை, ஆண்கள்தான் சொல்லித்தர வேண்டும் என்பதெல்லாம் யாரோட கொள்கை. நீங்கள்தான் யோசித்து புரிந்துகொள்ள வேண்டும். 

 

Next Story

“வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திமுக அரசு” - கரு.பழனியப்பன்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

karu pazhaniyappan talk dmk govt

 

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. கழக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. அராசா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், பெரியாரிய சிந்தனையாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் சுகிர்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இந்நிகழ்வில் பேசிய மதிமாறன், “திமுக மாணவர் அணிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்கள் இந்திக்காரர்களுக்கு எதிராக உள்ளோம் என்கிறார்கள். பாஜக கட்சியை எதிர்க்கும் கட்சிகள் 100 உள்ளன. தமிழ்நாடு முதல்வர் பிரதமராக வந்துவிடுவார்கள் என்கிறார்கள். அவர் வரட்டும். ஹிட்லரை வீழ்த்திய ரஷ்யாவின் ஸ்டாலின் போல், பாஜக ஆட்சியை திராவிட மாடல் கொண்டு வீழ்த்துவார் நம் தமிழ்நாடு முதல்வர். அதிமுக, திமுக எதிர்ப்பாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு கோமாளிகள். அன்று எமர்ஜென்ஸி இல்லாது இருந்திருந்தால் திமுக ஆட்சி காலம் காலமாக இருந்திருக்கும். ஸ்டாலின் கதையை முடிப்பேன் என்ற பன்வாரிலால், இன்று அவர் ஆட்சி வந்த பிறகு மிகச்சிறந்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்கிறார். காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இன்னும் 5 ஆண்டுகளில் மாணவர்கள் நன்றாக இருப்பார்கள்” எனப் பேசினார்.

 

இதையடுத்து பேசிய கரு.பழனியப்பன், “மற்ற கட்சிகள் எது பேசினாலும் திமுக பதில் சொல்லும். ஆனால், திமுக கேள்வி கேட்டால் மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்லத் தெரியாது. அண்ணாமலையைக் கேட்டால் கலைஞர் என்று சொல்லுகிறார். எந்தக் கட்சியை எதிர்க்கிறதோ அந்த கட்சியின் தலைவரையே தங்கள் கட்சித் தலைவர் என்று கூறுகிறது பாஜக. ஸ்டாலின் ஹீரோ ஆனது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி ஏற்ற நேரம். 20 நாட்களில் கொரோனா நோயாளிகளைச் சென்று நேரில் பார்த்தது தான் அவர் சூப்பர் ஹீரோ ஆன நேரம். ஆளுநர் ரவியை சட்டசபையை விட்டு ஓட வைத்தது தான் அவர் மாஸ் ஹீரோ ஆன நாள். கல்லூரிகளில் மாணவர் தேர்தல் வைக்க வேண்டும்.

 

பண்பாடு, இலக்கியம், மருத்துவம், கீழடியில் அருமையான ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று. மகாபாரதத்தை நம்புகிறவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யாமல் உள்ளனர். அண்ணாவிற்கு பிறகு கலைஞருக்கு மதுரையில் நூலகம் கட்டுகிறார். கலைஞர் நடமாடும் நூலகத்தை உதயநிதி அமைக்க உள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்துவது தான் இந்த திமுக அரசு. ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசினார். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அவர் அதில் வெற்றி பெற்றதன் மூலம் பதில் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும், தற்போது முதல்வராக இருந்த போதும் ஒரு நாளும் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசியது இல்லை. சட்டமன்றம் கட்ட மிக அருமையான இடம் உள்ளது” என்றார்.

 

 

Next Story

"அ.தி.மு.க காலகாலத்துக்கும் பா.ஜ.கவின் அடிமைதான்... தேர்தலுக்காக இந்த நாடகம்" - கரு.பழனியப்பன் பொளேர்

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

dfgj

 

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சி தேரதல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த சம்பவங்களும், அதன் காரணமாக அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க மாவட்டங்களில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.

 

அந்த வகையில் திமுகவை ஆதரித்து கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் திரைப்பட இயங்குநர் கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, " கடந்த 8 மாத திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். நிர்வாகம் தெரிந்த காரணத்தால் தான் கரோனாவில் இருந்து முதல்வரால் மக்களை காப்பாற்ற முடிந்தது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை கிண்டல் செய்த பாஜக, இன்றைக்கு உ.பியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்கு பாஜகவை விட வேறு ஒரு ஆள் உலகத்திலேயே இல்லை. எனவே மக்கள் பாஜகவை எப்போதும் போல புறக்கணிக்க வேண்டும். அதிமுக பாஜகவின் கொத்தடிமையாகவே காலகாலத்துக்கும் இருக்கும். கூட்டணியை விட்டு செல்வது எல்லாம் தேர்தலுக்கான நாடகம்" என்றார்.