Skip to main content

அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை ரஜினி தெளிவாக கூறிவிட்டார் - கரு. பழனியப்பன் பேச்சு!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு, 

 

kl



பலநாட்களுக்கு பிறகு அரசியல் தொடர்பாக ரஜினிகாந்த் நீண்ட செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன் மக்களிடம் எழுச்சி வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் பதவியை தான் ஏற்கப்போவதில்லை என்றும், கட்சியும் ஆட்சியும் வெவ்வேறு நபர்களிடம் இருக்கும் என்ற வகையில் அவர் பேசியுள்ளரார். இந்த கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

எல்லோரும் அரசியலுக்கு வரட்டும். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரட்டும். அவர் வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கேள்விகளை தவிர்த்து வந்தோம். இப்போது அவர் வரவில்லை. இப்போது அவரே எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டார். அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். ஊடகங்களுக்கு ரஜினி தேவைப்படுகிறார். யாரோடு வேண்டுமானாலும் அவரை சேர்த்து கட்டுரை எழுதலாம். பத்திரிக்கைகள்தான் அவர் இவரோடு கூட்டணி வைக்கப் போகிறார், அவரோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று மாற்றிமாற்றி அவரை கூட்டணியில் கொண்டுவந்து விடுகிறார்கள். அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தற்போது தெளிவாக கூறியுள்ளதாகவே நான் கருதுகிறேன். 

இத்தனை ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார், ஆனால் அண்ணாவின் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு அண்ணாவை பற்றிய புரிதல் தற்போது வந்துள்ளது. அவர் முதலில் வரட்டும். வீடுவீடாக சென்று வாக்கு கேட்கட்டும்.  முதல்வர் பதவியில் அமரமாட்டேன் என்கிறார். எதிர்கட்சி தலைவர் பதவியையும் ஏற்க மாட்டாரா? தேர்தலில் போட்டியிடுவாரா? சட்டமன்ற தேர்தலில் நிற்பாரா? என்று நமக்கு தெரியவில்லை. அப்படி நடந்தால் தொண்டர்கள் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்பாரா? அல்லது அவருடைய மனைவி பள்ளிக்கூடம் நடத்துவதை போல தனக்கும் அதற்கு சம்மந்தம் இல்லை என்று கூறுவாரா? என்று தெரியவில்லை. 

1996 தேர்தலில் ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கே ரஜினி ஒரு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்டது. அப்படி என்றால் அவரால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை எப்படி தீர்மானமாக சொல்ல முடியும்?

அவர்தான் தெளிவாக சொல்லிவிட்டாரே, பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் சென்று தெளிவாக பேச வேண்டும் என்று உங்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார். பெண்களுக்கு சரியா வாக்களிக்க தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டிலேயே பெண்களுக்கு வாக்களிக்க தெரியவில்லை என்று கூறிய ஒரே ஆள் இவராகத்தான் இருப்பார். இந்த கருத்தை இவரை தவிர யாராலும் சொல்ல முடியாது. 

 

Next Story

“வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திமுக அரசு” - கரு.பழனியப்பன்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

karu pazhaniyappan talk dmk govt

 

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. கழக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. அராசா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், பெரியாரிய சிந்தனையாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் சுகிர்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இந்நிகழ்வில் பேசிய மதிமாறன், “திமுக மாணவர் அணிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்கள் இந்திக்காரர்களுக்கு எதிராக உள்ளோம் என்கிறார்கள். பாஜக கட்சியை எதிர்க்கும் கட்சிகள் 100 உள்ளன. தமிழ்நாடு முதல்வர் பிரதமராக வந்துவிடுவார்கள் என்கிறார்கள். அவர் வரட்டும். ஹிட்லரை வீழ்த்திய ரஷ்யாவின் ஸ்டாலின் போல், பாஜக ஆட்சியை திராவிட மாடல் கொண்டு வீழ்த்துவார் நம் தமிழ்நாடு முதல்வர். அதிமுக, திமுக எதிர்ப்பாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு கோமாளிகள். அன்று எமர்ஜென்ஸி இல்லாது இருந்திருந்தால் திமுக ஆட்சி காலம் காலமாக இருந்திருக்கும். ஸ்டாலின் கதையை முடிப்பேன் என்ற பன்வாரிலால், இன்று அவர் ஆட்சி வந்த பிறகு மிகச்சிறந்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்கிறார். காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இன்னும் 5 ஆண்டுகளில் மாணவர்கள் நன்றாக இருப்பார்கள்” எனப் பேசினார்.

 

இதையடுத்து பேசிய கரு.பழனியப்பன், “மற்ற கட்சிகள் எது பேசினாலும் திமுக பதில் சொல்லும். ஆனால், திமுக கேள்வி கேட்டால் மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்லத் தெரியாது. அண்ணாமலையைக் கேட்டால் கலைஞர் என்று சொல்லுகிறார். எந்தக் கட்சியை எதிர்க்கிறதோ அந்த கட்சியின் தலைவரையே தங்கள் கட்சித் தலைவர் என்று கூறுகிறது பாஜக. ஸ்டாலின் ஹீரோ ஆனது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி ஏற்ற நேரம். 20 நாட்களில் கொரோனா நோயாளிகளைச் சென்று நேரில் பார்த்தது தான் அவர் சூப்பர் ஹீரோ ஆன நேரம். ஆளுநர் ரவியை சட்டசபையை விட்டு ஓட வைத்தது தான் அவர் மாஸ் ஹீரோ ஆன நாள். கல்லூரிகளில் மாணவர் தேர்தல் வைக்க வேண்டும்.

 

பண்பாடு, இலக்கியம், மருத்துவம், கீழடியில் அருமையான ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று. மகாபாரதத்தை நம்புகிறவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யாமல் உள்ளனர். அண்ணாவிற்கு பிறகு கலைஞருக்கு மதுரையில் நூலகம் கட்டுகிறார். கலைஞர் நடமாடும் நூலகத்தை உதயநிதி அமைக்க உள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்துவது தான் இந்த திமுக அரசு. ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசினார். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அவர் அதில் வெற்றி பெற்றதன் மூலம் பதில் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும், தற்போது முதல்வராக இருந்த போதும் ஒரு நாளும் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசியது இல்லை. சட்டமன்றம் கட்ட மிக அருமையான இடம் உள்ளது” என்றார்.

 

 

Next Story

"அ.தி.மு.க காலகாலத்துக்கும் பா.ஜ.கவின் அடிமைதான்... தேர்தலுக்காக இந்த நாடகம்" - கரு.பழனியப்பன் பொளேர்

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

dfgj

 

தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சி தேரதல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் ஒருவர் கடுமையாக விமர்சித்த நிலையில், சில இடங்களில் வேட்பாளர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த சம்பவங்களும், அதன் காரணமாக அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றது. இது ஒருபுறம் இருக்க மாவட்டங்களில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பல முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினர்.

 

அந்த வகையில் திமுகவை ஆதரித்து கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் திரைப்பட இயங்குநர் கரு.பழனியப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, " கடந்த 8 மாத திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். நிர்வாகம் தெரிந்த காரணத்தால் தான் கரோனாவில் இருந்து முதல்வரால் மக்களை காப்பாற்ற முடிந்தது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை கிண்டல் செய்த பாஜக, இன்றைக்கு உ.பியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்கு பாஜகவை விட வேறு ஒரு ஆள் உலகத்திலேயே இல்லை. எனவே மக்கள் பாஜகவை எப்போதும் போல புறக்கணிக்க வேண்டும். அதிமுக பாஜகவின் கொத்தடிமையாகவே காலகாலத்துக்கும் இருக்கும். கூட்டணியை விட்டு செல்வது எல்லாம் தேர்தலுக்கான நாடகம்" என்றார்.