Skip to main content

கர்நாடகா ஆளுநர் யார் தெரியுமா? - நண்பர் மோடிக்காக ராஜினாமா செய்த கதை   

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பல குழப்பங்கள் நடந்தன. ஓபிஎஸ் ராஜினாமா செய்ய சசிகலா முதல்வராகப் போகிறார் என்றார்கள். திடீரென ஓபிஎஸ் தர்மயுத்தத்தைத் தொடர்ந்தார். சசிகலா கூவத்தூர் அஸ்திரத்தை எடுத்தார். அடுத்த நாளே ஆளுநர் அழைத்துவிடுவார் என நம்பி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் கொண்டு சென்றார். காத்திருந்து காத்திருந்து பில் ஏறியதுதான் மிச்சம். அப்பொழுதுதான் ஆளுநர் என்ற ஒருவரை கவனிக்க ஆரம்பித்தனர் சாதாரண மக்கள். வித்யாசாகர் ராவ், சசிகலா சிறைக்கு செல்லும் வரை காத்திருந்து பின்தான் அழைப்புவிடுத்தார். தற்காலிக ஆளுநர் அப்படியென்றால் நமக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் பன்வாரிலால், ஒரே பரபரப்பாகத்தான் இருக்கிறார். இப்படி சமீபமாக தமிழ்நாடு ஆளுநரின் இருப்பை உணருகிறது. இப்பொழுது கர்நாடகாவின் முறை.

 

vajubhai



கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காமல் போனதைத் தொடர்ந்து, பழைய 'எதிரிக்கு எதிரி நண்பன்' கோட்பாட்டில் திடீர் கூட்டணி அமைத்த மஜதவும் காங்கிரஸும் 'ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுப்பார் என்கின்றன. இன்னொரு பக்கம் அதிக தொகுதிகளை வென்ற தனி கட்சி என்ற முறையில் ஆளுநர் எங்களை ஆட்சியமைக்க அழைப்பார் என்கிறார் எடியூரப்பா. 

 

 


இன்னும் யாருக்கும் அழைப்பு வரவில்லை. பாஜகவின் மணிப்பூர், கோவா தந்திரத்தை காங்கிரஸ் இங்கு நிகழ்த்த முயல்கிறது. இந்த நேரத்தில் ஆளுநர் யாரை அழைப்பார் என்பதை அவரது பின்னணி தெரிந்தால் கணிக்கலாம். 

 

 

modi vajubhai



யார் இந்த வஜூபாய் வாலா? அவரும் குஜராத் மாநிலம்தானாம். ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்து, படிப்படியாக ஜன சங்கத்தில் சேர்ந்து பின்னர் பாஜக சார்பில் தேர்தல்களை சந்தித்து குஜராத் மாநில அமைச்சராக கூட பொறுப்பேற்றுள்ளார். 1998 முதல் 2012 வரை பல துறைகளில் மந்திரியாக இருந்துள்ளார். குஜராத்தில் பாஜக வலுவாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து மோடிக்கு பக்கபலமாக இருந்தவர். 

 

 


2001ஆம் ஆண்டு கேஷுபாய் பட்டேலின் பெயர் குஜராத்தில் மோசமாக மாறிக்கொண்டே வந்தது, உடல்நிலையும் சரியில்லை. வேறொருவருக்கு முதல்வர் பொறுப்பு அளிக்கவேண்டும் என்று நினைத்தது பாஜக மேலிடம். அத்வானி கட்சிக்குள் பேசி நரேந்திர மோடியை குஜராத் முதல்வராக்கினார். அப்போது அவர் எம்எல்ஏ வாக இல்லை. முதல்வராகப் பதவியேற்ற ஒருவர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். அவருக்காக, 1994இல் இருந்து 2002 வரை தொடர்ந்து வென்று வந்த தொகுதியான ராஜ்கோட் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து மோடிக்கு வழிவிட்டார். அவ்வளவு தோஸ்த்துகள் இந்த இருவரும்.

குமாரசாமி, 'ஆளுநர் என்னைத்தான் அழைப்பார்' என்கிறார், எடியூரப்பாவும் அதையே சொல்கிறார். ஆளுநரின் பின்னணி இதுதான். இனி நீங்கள் கணிக்கலாம், அல்லது விரைவில் தெரியவரும், யாரை அழைப்பாரென்று.  

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.