Skip to main content

கர்நாடக இடைத்தேர்தல்கள் எடியூரப்பாவை கவிழ்க்குமா?

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

கர்நாடகா இடைத்தேர்தல்களை சந்திப்பதற்காகவே காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தலைவரான சிவக்குமாரை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது பாஜக அரசு. ஆனால், அதனால் பெரிய அளவில் பாஜகவுக்கு பலன் இருக்காது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பொருளாதா சீர்குலைவுகளை வலுவான குரலில் எதிரொலிப்பார் என்பதால் ஸ்ட்ராங்கான ஆதாரம் எதுவும் இல்லாமலேயே முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்து சிறைக் காவலை நீடித்து வருகிறது மத்திய அரசு.
 

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 11 பேர், மஜத எம்எல்ஏக்கள் 4 பேர் ஆக 15 எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதை எதிர்கொள்வதற்காக சிவக்குமாரை கைது செய்தது பாஜக அரசு. கைது செய்த பிறகு அவருக்கு எதிராக 200 புகார்கள் பெறப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்தது.

karnataka by election 15 assembly bjp government stay or not election decide

கர்நாடாகா காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவரான சிவக்குமாரை கைது செய்திருப்பதால், அந்த சாதியினர் மிகுதியாக உள்ள தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை விலைக்கு வாங்கி பாஜக எளிதில் வெற்றிபெறலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சிவக்குமார் கைதுக்கு எதிராக கர்நாடகாவில் ஏற்பட்ட கொந்தளிப்பு பாஜகவின் எண்ணைத்தை தவிடுபொடியாக்கியது.

 

சிவக்குமார் கைது, குமாரசாமி ஆட்சிக்கவிழ்ப்பு ஆகிய இரண்டுமே ஒக்கலிக்கர் வகுப்பினரை ஆத்திரமடையச் செய்துள்ளது என்கிறார்கள். சிவக்குமார் கைதுக்கு முன்னரே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, காங்கிரஸ் வெற்றிபெற்ற 11 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றுவது என்று உறுதி மேற்கொள்ளப்பட்டது.

 

கடந்த மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் மத்தியில் ஒற்றுமையில்லாமல் போனதால் தோல்வி ஏற்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மஜத, பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டிருந்தன. அப்போது காங்கிரஸ் பெற்ற 11 தொகுதிகளிலும், மஜத பெற்ற 4 தொகுதிகளிலும்தான் இப்போதும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
 

karnataka by election 15 assembly bjp government stay or not election decide

 

எனவே, அந்தத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை பிரச்சனை என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். சிவக்குமார் இல்லாத நிலையில், சித்தராமய்யா, ஜி.பரமேஸ்வரா, தினேஷ் குண்டுராவ் ஆகியோர்தான் இப்போது தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்பட வேண்டும். இதற்காக, சனிக்கிழமை ஹோஸ்கேட் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுயமரியாதை பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

 

கடந்த மக்களவைத் தேர்தலில் ஒக்கலிகர் பகுதிகளில் பாஜக கூடுதல் வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இப்போது, குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்பும், சிவக்குமார் கைது விவகாரமும் பாஜகவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு மாத ஆட்சியில் எடியூரப்பாவின் நிர்வாகம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. காபி டே அதிபர் தற்கொலை விவகாரம், பொருளாதார சீர்குலைவுகள், வெள்ள நிவாரண பணிகளில் குளறுபடிகள், சித்தராமய்யா தொடங்கிய சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை குறைத்தது, இந்திப் பிரச்சனை என பல்வேறு அம்சங்கள் எடியூரப்பாவுக்கு எதிராக இருக்கின்றன.

 

எனவே, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 15 தொகுதிகளுமே பாஜகவுக்கு சிக்கலைத்தான் ஏற்படுத்துகின்றன. காங்கிரஸ் தனது 11 தொகுதிகளைப் பெற்றால் எடியூரப்பா ஆட்சி கவிழ்வது உறுதி என்கிறார்கள். ஆனால், அதற்கு மஜதவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் பார்க்க வேண்டும். ஒருவேளை எடியூரப்பாவின் ஆட்சியைக் கவிழ்த்தாலும், மீண்டும் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்பதில் ஒரு சிக்கல் உருவாகும்? அப்படி ஏற்படும் சிக்கலை காங்கிரஸ் எப்படி கையாளும் என்பதும் கேள்விக்குறிதான் என்கிறார்கள்.




 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.