Skip to main content

காலையில் மலர்ந்து மாலையில் கருகியது - கர்நாடக தாமரை அரசியல்

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
karnataka


நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் முடிவுகள் வந்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டு 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் கூடுதல் இடங்களை பெற்று 104 தொகுதிகளையும், காங்கிரஸ் 78 தொகுதிகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 38, சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 
 

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் 124 தொகுதிகளை பாஜகவும், காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 32 தொகுதிகளிலும் முன்னிலை என செய்திகள் வெளியாகின. நண்பகல் வரை பாஜக தொடர் முன்னிலையில் இருந்தது. இதனால் உற்சாகம் அடைந்த கர்நாடக பாஜகவினர் குத்தாட்டம் போட்டு கொண்டாடினார்கள். அதன் எதிரொலியாக தமிழகத்திலும் ஆங்காங்கே பாஜகவின் ஆட்டம் பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு கர்நாடகாவின் வெற்றி தென்நாட்டில் பாஜகவுக்கு வாசல் திறந்தது என்று கூறினார். 
 

பாஜகவின் தேசிய செயலாளரான எச்.ராஜா, கர்நாடகாவில் பாஜக வலுப்பெறும் சக்தியாக வந்துவிட்டது. அடுத்து தமிழகமும் திரிபுராவாக மாறும் என்றார். இப்படி இவர்கள் மனம்போன போக்கில் கொண்டாடிக்கொண்டிருக்க கர்நாடகா வாக்கு எண்ணிக்கை கதை மாறத் தொடங்கியது. 

124 என்ற கணக்கு 114 ஆகி, அடுத்து 110 ஆகி, ஒவ்வொன்றாக குறைந்து 104ஆக சுருங்கியது. காங்கிரஸ் 68 என்ற கணக்கு உயரத்தொடங்கி, 78ல் நின்றது. அதே மதசார்பற்ற ஜனதாதளம் 38ஆக வளர்ந்தது. பிற்பகலுக்கு பிறகு இந்த முடிவுகள் வெளிப்பட பரபரப்பான அரசியல் திருப்பங்களும் நடந்தது. காங்கிரஸ் உயர்மட்ட குழு டெல்லியில் விவாதித்தது. அதன்படி பாஜகவை தென்நாட்டில் விடக்கூடாது என்று முடிவு செய்து முதல் அமைச்சர் சித்தராமையா அக்கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வரா உட்பட முன்னணி தலைவர்களோடு தொலைபேசி வாயிலாகவோ ஆலோசனை வழங்கி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம். இதன் மூலம் கர்நாடகாவில் பாஜகவின் அதிகார கனவை அறுத்தெறிவோம் என முடிவு செய்தார்கள். 
 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடைய சிந்தனையும் அதுவாகவே இருந்தது. டெல்லி ஆலோசனைக்கு ஏற்க உடனடியாக களம் இறங்கிய காங்கிரஸ் மூத்த குலாம் நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனரான தேவகவுடா மற்றும் அவரது மகனும், முன்னாள் முதல் அமைச்சருமான குமாரசாமியிடம் நேரில் சென்று பேசினார். அதன்படி குமாரசாமிக்கு முதல் அமைச்சர் பதவியை கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டு துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான பரமேஸ்வராவை நியமிப்பது என்றும், இரண்டு கட்சி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது. 
 

மஜக சார்பாக ஒரு நாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தரப்பு அவகாசமே வேண்டாம், தேர்தல் முடிவு முழுமையாக வெளிவந்தவுடன் எங்களது ஆதரவு கடிதத்தோடு, ஆட்சி அமைக்க கோருமாறு கவர்னரை சந்தியுங்கள் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இந்த திடீர் திருப்பம் பாஜகவை அதிர்ச்சியடைய வைத்தது. டெல்லி வரை கர்நாடக நிலவரம் பாஜகவை அதிரவைத்துள்ளது. காலையில் இருந்து மாலை வரை தென்னாட்டில் தாமரை மலர்ந்தது என்று மகிழ்ந்து கொண்டாடிய பாஜக மாலையில் அது பறிபோனது என துக்கத்தில் மூழ்கியுள்ளது. 
 

இருப்பினும் கர்நாடக கவர்னர் வஜ்ஜிபாய் லாலாவுக்கு டெல்லியில் இருந்து சில அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் செயல்பட தொடங்கியுள்ளார். இந்த அரசியல் ஆட்டத்தில் பாஜக அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறது என்பது கர்நாடகாவில் பரபரப்பு தொடங்கியுள்ளது. முதல்வர் கனவில் இருந்த எடியுரப்பா காங்கிரஸ் பின் வாசல் வழியாக ஆட்சி முற்பட்டுள்ளது என கூறியிருக்கிறார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஸ்வரா, பின் வாசல் வழியாக நாங்கள் ஆட்சி அமைக்கவில்லை. சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மையாக உள்ள எங்கள் அணி ஆட்சி அமைக்கிறது. எங்களது நோக்கம் ஆட்சி அதிகாரம் அல்ல, மதவாத சக்திகளை தென்னிந்தியாவில் நுழையவிடக்கூடாது என்கிற போராட்டத்தில் நாங்கள் தியாகம் செய்து வெற்றி பெற்றுள்ளோம் என பதலடி கொடுத்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.