Skip to main content

கண்டாங்கி...கண்டாங்கி...கட்டி வந்த பொண்ணு...! பெண்களை மயக்கும் கண்டாங்கிக்கு புவிசார் குறியீடு...!!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு வரிசையில், தற்பொழுது காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இது தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளனர் சிவகங்கை மாவட்ட நெசவுத் தொழிலாளர்கள்.


புவிசார் குறீயீடு:

பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக விளையும் பொருளுக்கோ அல்லது உருவாக்கப்படும் பொருளுக்கோ புவிசார் குறியீடு வழங்கப்படுகின்றது. இதனால் போலியான பொருட்கள் விற்பனை செய்வது தடுக்கப்படுவதால், புவிசார் குறியீட்டிற்கு மதிப்பு இங்கு அதிகம்.

KARAIKUDI SAREES GET IN GEOGRAPHIC CODE HAND LOOM WEAVERS HAPPY

 

தமிழகளவில் மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 29 பொருட்களுக்கு முன்னதாக புவிசார் குறியீடு கிடைத்திருக்க, 2013ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டிற்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் வியாழனன்று புவிசார் குறியீடு கிடைக்க, தமிழகளவில் புவிசார் குறியீடுப் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
 

பருத்திச்சேலை டூ கண்டாங்கி சேலை:

KARAIKUDI SAREES GET IN GEOGRAPHIC CODE HAND LOOM WEAVERS HAPPY

 
கண்டாங்கிச்சேலையின் பாரம்பரியம் ஏறக்குறைய 200 ஆண்டுகள் எனினும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்டாங்கி சேலைகள் தனித் தயாரிப்பாக உருவாக்கியது விருதுநகர் மாவட்டம். அந்த மாவட்டத்தின் முக்கிய பகுதியான அருப்புக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு இடம் பெயர்ந்த ராமலிங்க செட்டியார் காலத்திற்குப் பிறகு தான் ரத்தினசபாபதி, சரவணன் என ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக 80 வருடங்களாக கண்டாங்கி சேலை உற்பத்தியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 48 இன்ச் அகலமும் 5.5 மீட்டர் நீளமும் கொண்ட செட்டிநாட்டு பருத்திச்சேலையின் அழகே இரண்டு பக்க பார்டரும், நடுவில் உள்ள கட்டங்களுமே.! பெண்களின் கெண்டைக் கால் பகுதியில் இந்த சேலைகளின் பார்டர் பளிச்சிடுவதால் கண்டாங்கி சேலை எனவும் அழைப்பதுண்டு.

KARAIKUDI SAREES GET IN GEOGRAPHIC CODE HAND LOOM WEAVERS HAPPY

 

உற்பத்தி துவங்கிய நாட்களில் செட்டிநாட்டிலுள்ள ஆச்சிமார்கள் விரும்பி அணிய செட்டி நாட்டு பருத்திச்சேலை என்றிருக்க, நகரத்தார்களின் சொல் வண்ணத்தால் இது கண்டாங்கி சேலையானது. எனினும் 1980- களில் மீண்டும் செட்டி நாட்டு பருத்திச்சேலை என்றே அழைக்கப்பட்டது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். சேலையின் நடுவில் புட்டா டிசைன், கம்பி டிசைன், கோபுர டிசைன் மற்றும் மாங்காய் என டிசைன்கள் போட்டு பெண்களை கவர்ந்த சிலை, அதே தரத்துடன், போல்ட் மற்றும் ஸ்ட்ரைப்ஸ் என கூகுள், பேஷன் டெக்னாலஜியின் உதவியுடன் மாறினாலும், இரண்டு பக்க பார்டர் மாறாததால் மறுபடியும் கண்டாங்கி என்றே மாறியது.


தயாரிப்பது எப்படி?

ஆரம்பத்தில் 1939ம் ஆண்டுகளில் காரைக்குடி கண்டாங்கி சேலைகளை தயாரிக்க சுத்தமான 40 எண் ரக பருத்தி நூல்களைக் கொண்டே தயாரித்திருக்கின்றனர். கட்டினாலே கம்பீரமான தோற்றப் பொலிவு தரும் இவ்வகை சேலைகளை ரசாயன கலப்பின்றி உற்பத்தி செய்ய, நாளடைவில் 60 எண் ரகத்தினைத் தாண்டி 80 எண் ரக வகையிலான தூய பருத்தி நூல்களைக் கொண்டு தயாரிக்க இளசுகளுக்கும் இது பிடித்தமாயிற்று. முதலில் தங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்து, அதன் பின் சாதம் வடித்த தண்ணீரில் ஊற வைத்து, நிறமிட்டு புணைந்து நெய்ய அனுப்புவார்கள்.
 

நூல் கொடுக்க, பிசிறுகளை சுத்தம் செய்ய, கட்டை மாட்டிவிட என குறைந்தது மூன்று நபர்கள் இருந்தால் ஒரு புடவையே நெய்ய முடியும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். எக்காலத்திலும் நிறம் மங்காததும், அணிய ஏதுவாக எலிகண்டும், போல்டுலுக்கும், தரும் என்பதும், தூய பருத்தி என்பதால் வியர்வையை உறிஞ்சி சருமத்தினைப் பாதுகாக்கும் என்பதும் தான் இதனுடைய வெற்றிக்கான மூலமந்திரம்.

KARAIKUDI SAREES GET IN GEOGRAPHIC CODE HAND LOOM WEAVERS HAPPY

 


கோரிக்கைகள்:
" உலகின் எந்த மூலையில் இருந்தாலும் செட்டிநாட்டு ஆச்சிமார்கள் இந்த சேலையைத் தான் உடுத்துவார்கள். ஆரம்பத்தில் வயதானவர்கள் மட்டுமே கட்டி வந்த இச்சேலைகளை தற்பொழுது கல்லூரிக்கு செல்லும் இளம்பெண்கள் வரை விரும்பி அணிகின்றனர். வெயில் காலம், குளிர்காலம் என எந்தக் காலத்திற்கும் ஏற்றது இந்த கண்டாங்கி சேலைகள். கூலிப் பற்றாக்குறையால் இத்தொழில் அழிந்து வருகின்றது.

KARAIKUDI SAREES GET IN GEOGRAPHIC CODE HAND LOOM WEAVERS HAPPY

 

புவிசார் குறியீடு இதனைக் காக்கும் என்றே நம்புகின்றோம். நூல் விலையேற்றம், ஜி.எஸ்.டி.வரிகளை குறைத்தாலே போதும் இத்தொழில் மென்மேலும் வளரும்." என்கின்றார் பரம்பரையாக கண்டாங்கி சேலையை உற்பத்தி செய்து வரும் ரத்தினசபாபதி செட்டியார்.
 

அரசு ஆவண செய்ய வேண்டுமென்பது நெசவாளர்களின் கோரிக்கை..! நிறைவேற்றுமா..?



 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.