Skip to main content

நீங்க கேட்டு நான் இல்லைன்னு சொல்ல முடியுமா? காசி விஷயத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

suji


"காசி விவகாரம் நமக்கெதற்கு என்று விட்டுவிடக் கூடாது. இன்னும் எத்தனை காசிகள் நம்மிடையே உலவுகின்றனரோ? காசிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை அறிந்து தெளிவதற்காகவாவது, இவன் போன்றவர்களை முடிந்தமட்டிலும் தோலுரித்தே ஆகவேண்டும்'' என்கிற ரீதியிலேயே நாகர்கோவில் மக்கள் ஆதங்கப்பட்டனர்.
 


காசியின் அப்பா தங்கப்பாண்டியன், தன் கோழிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் "இதே கோட்டார் ஸ்டேஷன்ல, என் மகனை எஸ்.ஐ. ஆக்கி உட்கார வைப்பேன்'' எனச் சொல்வாராம். அப்பாவின் ஆசைப்படியே எஸ்.ஐ. ஆகவேண்டும் என்ற எண்ணம் காசிக்கும் இருந்தது. ஆனால், குறுக்கு வழியில்தான், அவன் தலைக்கு எஸ்.ஐ. தொப்பி வந்தது. எப்படித் தெரியுமா?

காசியின் வீடு மற்றும் கோழிக்கடைக்கு மிக அருகிலேயே போலீஸ் குடியிருப்பு உள்ளது. தலைமைக் காவலராக இருந்து பதவி உயர்வு பெற்று எஸ்.ஐ. ஆன அந்த நேர்மையானவரின் மகள், பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றே படித்து வந்தாள். அவள் பள்ளி மாணவியாக இருந்தபோதே பின் தொடர்ந்தான் காசி. குவார்ட்டர்ஸுக்கு பக்கத்திலேயே இருந்ததால், காசி அப்பா வைத்திருந்த இறைச்சிக் கடைக்கு காவலர்கள் பலரும் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.
 

house


போலீஸ் குடியிருப்புக்குள் வெளியாட்கள் யாரும் சுலபமாகப் போய்விட முடியாது. ஆனால், இறைச்சியை டோர் டெலிவரி செய்யும் சாக்கில், போலீஸ் வீடுகளுக்குள் காசி போனான். தான் ‘ரூட்’ விட்ட எஸ்.ஐ.யின் மகள் வீட்டுக்கும் அப்படித்தான் போனான். அவள் கல்லூரியில் படிக்கும் வரையிலும், வீட்டுக்குள் சென்று ‘காதல் நாடகம்’ நடத்தினான். "என் உடம்பைப் பார்.. எஸ்.ஐ. செலக்ஷனுக்கு ரெடி ஆயிக்கிட்டிருக்கேன். எஸ்.ஐ. ஆனதும் உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்...'' என்று காசி பேசிய ஆசை வார்த்தைகளில் அவளை ஏமாற்றி வீடியோ எடுத்தான். "உங்க அப்பாவோட எஸ்.ஐ. தொப்பி எனக்கு நல்லாயிருக்குல்ல...'' என்று தலையில் மாட்டிக்கொண்டு செல்ஃபியும் எடுத்தான்.

காசியிடம் தன் மகள் ஏமாந்தது, நேர்மையான அந்த எஸ்.ஐ.க்கு தெரிந்துபோனது. தனது பெண்ணின் எதிர்காலம் குறித்த அச்சத்தாலும், காசிக்கு அந்த ஊரிலுள்ள ஜாதி பலத்தாலும், ஹரியின் வலுவான பின்னணியாலும் அமைதியானார். அந்த மாவட்டத்திலேயே வேறு ஊருக்கு "டிரான்ஸ்பர்' வாங்கிக்கொண்டு போனார். காசியோ, "அன்னைக்கு இந்த ஆளு போலீஸ்காரன்ங்கிற திமிர்ல, நாங்க பாதைக்கு இடையூறா கோழிக்கூடுகளை வச்சிருக்கோம்னு பிரச்சனை பண்ணி மாற்ற வச்சாரு. போலீஸ்காரன்னா பெரிய பருப்பா? நெஞ்சுல வஞ்சம் வச்சி அவரு மகளை கரெக்ட் பண்ணினேன். இப்ப அவரையே ஊரு மாற வச்சிட்டேன்'' என்று நண்பர்களிடம் மார்தட்டினான். ஒரு போலீஸ் அதிகாரியின் குடும்பத்தையே நிம்மதியிழக்க வைத்தவன் கடையிலிருந்துதான், நல்லி எலும்போடு 2 கிலோ மட்டன் பார்சல், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி போன்றவர்களின் வீடுகளுக்கு வாரம்தோறும் இலவசமாகப் போகிறது.
 

suji

 


மாமூல் போலீஸ்காரர்கள் ஹரியை பார்க்கும் போதெல்லாம் ‘சல்யூட்’ வைப்பதைப் பார்த்த காசி, தானும் வழக்கறிஞர்- கட்டப் பஞ்சாயத்து- கந்துவட்டி’ என சகலத்திலும் கொடிகட்டிப் பறக்கவேண்டும் என்று ஆசைப் பட்டான். இந்த ஸ்டேட்டஸ், தனது தீவிர பாலியல் வேட்டைக்கு, பெரிதும் பயன்படும் என்று நம்பினான். அதனாலேயே, ஹரிக்கு மிகவும் நெருக்கமானான். எவ்வளவு சம்பாதித்தாலும் பண விஷயத்தில் ஹரி ரொம்பவே கெட்டியானவர். காசியோ, பெண் மிரட்டலில் கிடைத்த பணத்தை, லிக்கர் ப்ளஸ் லேடி எனத் தாராளமாக வாரியிறைத் தான். காசியின் இந்தக் கவனிப்பு தான், அவனை ஹரியின் ஜூனியர் ஆக்கியது.

உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசும்போது “நான் ஹரியின் ஜூனியர் பேசுறேன்.." என்று தெனாவட்டாகப் பேசுவான். இவனது அலப்பறை பிடிக்காத போலீஸ் அதிகாரிகள் "காசி ரொம்ப ஓவரா பேசுறான்...'' என்று ஹரியிடம் சொன்னால், "மாப்ள பேசினானா? சரி, என்ன கேட்டாலும் பண்ணிக்கொடுங்க...'' என்று கூலாகச் சொல்லிவிடுவார்.

ஒருமுறை காசியின் தோழி, டூவீலர் லைசன்ஸ் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும், டபிள்யூ. சி.சி. சாலையில் பயணித்தபோது, டிராபிக் போலீசாரால் நிறுத்தப்பட்டாள். தகவல் காசியிடம் போனது. ஸ்பாட்டுக்கு வந்த காசி "நான் ஹரியின் ஜூனியராக்கும்.. இப்ப விடலைன்னா, நடக்கிறதே வேறு...'' என்று மிரட்ட, டிராபிக் போலீஸோ, அந்தப் பெண்ணை அபராதம் கட்டச் செய்து, ரசீதைக் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஹரி அங்கே வந்துவிட்டார். அங்கிருந்த போலீசாரிடம் சட்டம் பேசி தகராறு செய்து விட்டு, அபராத ரசீதை அங்கேயே கிழித்தெறிந்தார்.

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்களோ, அவர்களது உறவினர்களோ, யாரையாவது மிரட்ட வேண்டுமென்றால், அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே, “தப்பான தொழில் பண்ணிட்டு என்கிட்டயே பஞ்சாயத்து பண்ண வர்றீங்களா? உங்கள மாதிரி ஆளுங்கள விடவே மாட்டேன். இருங்க.. எஸ்.பி.கிட்ட பேசுறேன்...'' என்று டயல் செய்வான். எதிர்முனையில் ஹரிதான் போனை எடுப்பார். “நான் ஹரியின் ஜூனியர் பேசுறேன்..." என்றதும், காசி இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, எஸ்.பி. ரேஞ்சுக்கு பேசுவார். அடிக்கடி இதுபோன்ற தில்லாலங்கடி வேலைகளை, இருவரும் சர்வசாதாரணமாகப் பண்ணுவார்கள்.

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பாறையை அவரது அண்ணன் நடத்துகிறார். அங்குதான், காவல்துறையில் தனக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு 'சியர்ஸ்' சொல்லுவான் காசி. போதை ஏறியதும், காசியின் சேட்டையை அறிந்த அதிகாரிகள், "ஏன்டா நீ மட்டுமே அனுபவிக்குற? எங்க கண்ணுல கொஞ்சம் காட்டக்கூடாதா?'' என்று கெஞ்சுவார்கள். அதற்கு அவன், "சார்.. நீங்க கேட்டு நான் இல்லைன்னு சொல்ல முடியுமா? அழகழகான ஆண்ட்டி பீஸ் கைவசம் இருக்கு. அமவுண்ட் கொஞ்சம் அதிகமாகும்'' என்பான். அவர்களோ, "அட, போடா மாமா.. பணமெல்லாம் ஒரு மேட்டரே இல்ல...'' என்பார்கள். இப்படித்தான், பல முக்கிய அதிகாரிகளுக்கு பெண் சப்ளை நடந்திருக்கிறது.

கோட்டார் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் காசி மீது புகார் அளித்தவுடன், இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், முதலில் ஹரியைத்தான் தொடர்பு கொண்டார். "காசியைக் கொஞ்சம் விசாரிக்கணும்.. கூட்டிட்டு வாங்க...'' என்று அவர் கூற, ஹரி அலட்சியமாக “மாப்ள இப்ப பிசியா இருக்கான். நேரம் கிடைக்கும்போது நானே கூட்டிட்டு வர்றேன்'' என்றிருக்கிறார். அது சரி! காசியை விசாரிப்பதற்கு ஹரியிடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும்? காவல் நிலையத்திலிருந்து பார்த்தாலே, காசியின் வீடு தெரியும். ஆனாலும், ஹரியின் வலதுகை என்பதால், காசியை விசாரிப்பதற்கு முதலில் ரொம்பவே தயங்கியது காவல்துறை. காசி கைதாவதற்கு முன், சகல அஸ்திரங்களையும் பிரயோகித்துப் பார்த்து விட்டுத்தான் ஹரி ஓய்ந்திருக்கிறார். இப்போதும் கூட, மாமூல் பணம், பெண் சப்ளை போன்ற விவகாரங்களில், இந்தக் கூட்டணி தங்களை மாட்டிவிட்டால் என்னாவது? என்று கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள் சில போலீஸ் அதிகாரிகள். அதனால்தான், கஸ்டடியில் காசி இருந்தபோது, பேச்சில் கடுமை காட்டினாலும், முடிந்த அளவுக்கு மிதமாகவே நடந்து கொண்டனர். இத்தனை உள் விவகாரம் இதற்குள் இருப்பதால், இந்த வழக்கிலிருந்து காசி தப்புவதற்கான வழிகளை ஆராய்ந்து, காப்பாற்றியே தீரவேண்டும் என்ற முனைப்பில் ஒரு போலீஸ் டீமே செயல்படுகிறதாம்.

நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் காசி குறித்த சில உண்மைகளையும், அவனோடு தனக்கிருந்த தொடர்பினையும் ஒளிவுமறைவின்றி பேசியிருந்தார், வழக்கறிஞர் ஹரி. நாகர்கோவில் மக்கள் ஹரியைப் பற்றி அவரது வாய்ஸிலேயே தெரிந்து கொண்டதாலோ என்னவோ, "நக்கீரன் நிருபர்களின் கை, கால்களை உடைத்து வீட்டிற்குள்ளேயே முடக்கிப் போடுவேன். வழக்கு வந்தால் சந்திப்பதெல்லாம், எனக்கு சாதாரண விஷயம்தான்'' என்று மிரட்டும் தொனியில், தனது நட்பு வட்டத்தில் பேசிவருகிறார், ஹரி.
 

 

advocate

 

http://onelink.to/nknapp


காசியின் தாயார் பத்மா, "என் மகன் தப்பு செய்திருக்க மாட் டான். அவனை நான் அப்படி வளர்க்கல. ஆடம்பரமா வளர்த்தது ஒரு தப்பா? அப்படி அவன் தப்பு பண்ணியிருந்தாலும், அதில் தப்பில்லை. ஏன்னா.. அந்தப் பெண் பிள்ளைங்களாட்டு அவனைத் தேடி போனதுனாலதானே அந்தத் தப்பு நடந்திருக்கும். இப்ப ஒரு ஈ, காக்கா கூட வீட்டு பக்கம் வரலியே...'' என்று வீட்டுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். "அக்கம் பக்கத்தினர் யாரும் காசி வீட்டு பக்கம் தலை காட்டுவதில்லை. பக்கத்திலுள்ள உறவினர்களும் என்ன ஏதென்று கேட்காத நிலையில், வீடு பூட்டியே கிடக்கிறது. வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் இரண்டு குடும்பத்தினரும் கூட, காசியின் பெற்றோரிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. பக்கத்திலேயே வசிக்கும் காசியின் சகோதரி, அடிக்கடி தாய் வீட்டுக்கு வருவார். கைது சம்பவத்துக்குப் பிறகு அவர் வெளியே வருவதில்லை'' என்கிறார்கள், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

காசியின் பெற்றோரைக் காட்டிலும் பன்மடங்கு துயரத்தில் அவனால் பாதிக்கப்பட்ட பெண்களும் உறவினர்களும் இருக்கிறார்கள். புகார் அளிக்காத நிலையிலும், வீடியோவில் சிக்கி விசாரணைக்கு ஆளாகி வருபவர்களோ, வெளியே தெரிந்தால் மானம் போய்விடும்; உயிர் வாழவே முடியாது என்று பரிதவிக்கின்றனர். காசி-ஹரி கூட்டணிக்கு துணைபோய், அவர்கள் ஏற்பாடு செய்த பெண்களை ருசித்த காக்கிகளும், தங்கள் பெயர் வெளி வந்துவிடக் கூடாது என்ற பீதியில் உறைந்துபோய் கிடக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அத்தனையும் செய்துவிட்டு, போலீசார் வீடுகளுக்குள்ளும் புகுந்து விளையாடியவனை, தப்ப வைக்கும் முயற்சியில் சில கருப்பு ஆடுகள் ஈடுபட்டுள்ளன வா? இவர்களைக் காவல்துறை விட்டு வைக்கலாமா?


-மணிகண்டன்.


 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.