Skip to main content

அதுக்கு இப்ப என்ன? சி.பி.ஐ.-க்கு போனா இன்னும் எத்தனை பேரு சிக்குவாங்கனு பாருங்க... காசி வழக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்! 

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

bjp


காசியின் பாலியல் கொடூரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராடிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான டீம் விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளளது. காசி மீது பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் போக்சோ மற்றும் கந்துவட்டி வழக்கைத் தவிர 4 இளம் பெண்கள் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட அந்த 4 வழக்குகளின் ஆவணங்களை மட்டும் குமரி மாவட்ட காவல்துறை சி.பி.சி.ஐ.டியிடம் ஒப்படைத்து இருக்கிறது.
 


இதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் காசியை வெளியில் எடுக்கத் திட்டமிட்டியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். சிறையில் திருட்டுக் குற்றவாளிகள் 5 பேருடன் அடைக்கப்பட்டியிருக்கும் காசி எதுவும் அலட்டிக்கொள்ளாமல் கேசுவலாக நாட்களைக் கடத்துகிறான். சிறையில் அவனை தந்தை தங்கபாண்டியன் மற்றும் இரண்டு உறவினர்கள் சந்தித்துள்ளனர். கரோனா பிரச்சினையால் சிறையில் இரண்டு மீட்டர் இடைவெளியில் நின்று காசியைப் பார்த்து கலங்கியிருக்கிறார்கள் தந்தையும் உறவினர்களும்.

வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு போய் விட்டது என்று அவர்கள் சொன்னதும், "அதுக்கு இப்ப என்ன? சி.பி.ஐக்கு போனாலும் பரவாயில்லை. என்னை போலீஸ் பிடிச்சதில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டது வரை அதற்கு முன் என்னோடு இருந்தவர்கள் (கூட்டாளிகள்) ஆறுதலுக்குக் கூட உங்களையும் பார்க்கல. எனக்காக எந்த உதவியும் செய்யல. இந்த விசயத்தில் எனக்குப் பின்னால யார் யார் உண்டுனு எனக்கு மட்டும்தான் தெரியும். என்னை அழிக்க நினைச்சா அவங்கள கண்டிப்பாகக் காட்டி கொடுப்பேன்'' என ஆவேசத்தைக் காட்டியிருக்கிறான் காசி.
 

dr

 


அவனுடைய ஆவேசத்திலும் அர்த்தம் இருக்கிறது எனக் கூறும் உறவினர்கள், சென்னை பெண் டாக்டர் கொடுத்த அந்த ஒரு புகாரோடு போலீசை சரிக்கட்டி அவனை ஜாமீனில் எடுத்து வழக்கை முடித்துவிடலாம் என்று சிலர் பேரம் பேசினார்கள். அந்தப் பேரத்துக்கும் ஒத்துக்கொண்டோம். கடைசியில் அவர்களும் கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகு அவனை ஆட்டுவித்த நண்பர்கள்கூட காசியை பலிகடா ஆக்கி விட்டு அவர்கள் தப்பிக்க முயற்சிப்பதோடு காசியை பற்றி சில தகவல்களையும் வெளியே விட்டு இருக்கிறார்கள் என்றனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையைத் தொடங்கியிருக்கும் நிலையில் போலீஸ் சோர்ஸ் ஒருவர் முக்கியத் தகவலை நம்மிடம் கூறினார். "செக்ஸ் டாக்டர் பிரகாஷைப் போல் காசியையும் ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளே வழக்கை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் சி.பி.சி.ஐ.டியினர் இருப்பதாகவும், இதற்கு முக்கியக் காரணமே வெளியில் இருக்கும் சிலரை காப்பாற்றுவதற்குத் தான்'' என்ற அவர் மேலும், "காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு வருவதற்கு முக்கியக் காரணம் முதல்வர். அவரின் நேரடி கவனத்துக்கு இந்தச் சம்பவம் சென்றதால்தான். அதேபோல் காவல் துறை தலைமையும் காசி வழக்கை பொள்ளாச்சி ரேஞ்சுக்கு கொண்டு போய்விடாமல் இருக்க அதற்காக இருக்கிற சாட்சியங்கள் தடயங்களை வச்சி சி.பி.சி.ஐ.டியே வழக்கை முடித்து விட வேண்டுமென்று நினைக்கிறதாம். இதனால் மேற்கொண்டு யாரையும் குறிப்பாக காசியின் கூட்டாளிகள் என்று கருதப்படும் அந்த வி.ஐ.பி. நபர்களை விசாரிப்பதாகத் தெரியவில்லை. இதனால் காசியோடு மட்டும் வழக்கை முடித்து விடுவார்கள்'' என்றார்.
 

http://onelink.to/nknapp


இதற்கிடையில் காசியுடன் தொடர்புடைய பட்டியலில் மறைந்து இருக்கும் தாசில்தார் ஒருவர், காசியின் அந்தரங்க வேட்டைக்கு கோவை, சென்னை, பெங்களூரு என்று காசியுடன் அடிக்கடி பறந்து இருக்கிறாராம். முக்கிய அதிகாரி ஒருவரின் நெருக்கமாக தாசில்தார் இருப்பதால் ஏற்கனவே காசியின் வழக்கை விசாரித்த லோக்கல் போலீசாரின் பார்வை அவர் பக்கம் திரும்பவில்லை. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பார்வையாவது அவர் பக்கம் விழுமா? அதுபோல் காசியின் வி.ஐ.பி. கூட்டாளிகளும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையால் காசியின் வழக்கில் உண்மை தெரிந்து விடாது. அதன்மீது நம்பிக்கையும் இல்லை. சி.பி.ஐதான் இதற்கு ஒரே தீர்வு என்கின்றனர் குமரி மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம்.

 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.