Skip to main content

காங்கிரசில்  குமரி தொகுதி யாருக்கு?  -மோதும் பெருந்தலைகள் 

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 


திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்து இடங்களுக்கான வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் டெல்லியில் இதுவரை 3 கட்ட ஆலோசனைகள் நடந்து முடிந்துள்ளன. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவைகள்  இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்படாமல் இருக்கிறது. 

 

rani venkadesan


 

இந்த நிலையில், பத்து தொகுதிகளை திமுக ஒதுக்குவதற்கு வசதியாக, தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 16 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் தலைமை திமுகவிடம் ஒப்படைத்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட சில தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டே தீர வேண்டும் என 6 தொகுதிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை! 
 

அந்த 6 தொகுதிகளில் மிக முக்கியமானது கன்யாகுமரி தொகுதி. அந்த தொகுதியை குறிவைத்து காங்கிரசின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வசந்தக்குமார், விஜயதாரணி, முன்னாள் எம்.எல்.ஏ. ராணிவெங்கடேசன் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். கன்னியாகுமரியைக் கைப்பற்ற இந்த மூவரும் சரி சமமாக மோதும் நிலையில், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "கட்சியின் மாநில தலைவர்களாக இருப்பவர்களுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்கிற பொது விதியை அகில இந்திய அளவில் கொண்டு வந்திருக்கிறார் ராகுல்காந்தி. 


 

vijayadharani


அதனால் எந்த ஒரு மாநிலத்திலும் கட்சியின் தலைவராக இருப்பவர்களுக்கு இந்த முறை சீட் இல்லை. அதே போல, எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் அவர்களது பதவி காலம் குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அவர்களை எம்.பி.தேர்தலில் களமிறக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. 
 

அந்த வகையில், வசந்தக்குமாரும் விஜயதாரணியும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். அவர்களது பதவிகாலம் 2021 வரை இருக்கிறது. அதனால், அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு இருக்காது. அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராணிவெங்கடேசனுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.  தவிர, தொகுதியில் கிருஸ்துவ நாடார்களும் இந்து நாடார்களும் தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். பொதுவாக, கிருஸ்துவ நாடார்களின் வாக்குகள் காங்கிரஸுக்கே விழும். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அந்த கூட்டணியை கிருஸ்துவர்கள் புறக்கணிப்பார்கள். அந்த வகையில், இவர்களின் வாக்குகள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே சாதகமானது. 


 

vijayakumar


இந்த சூழலில், இந்து நாடார் வாக்குகள்தான் தீர்மாணிக்கும் சக்தியாக இருக்கும். அதனால் இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரான ராணி வெங்கடேசனுக்கு வேட்பாளர் தேர்வில் முன்னுரிமைக் கிடைக்கும். தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர் ராணி வெங்கடேசன். இளங்கோவனும் தற்போது டெல்லியில் இவருக்காக சிபாரிசு செய்திருக்கிறார்" என்கிறார்கள் கதர்சட்டை தலைவர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.