Skip to main content

மா.செ.வின் வீடியோ வைரல்! முகச்சுளிப்பில் அ.தி.மு.க.வினர்! 

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Kanyakumari admk District secretary's video viral

 

குமரி அ.தி.மு.க. மேற்கு மா.செ.வாக ஜான் தங்கம் இருக்கிறார். கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சமீபத்தில் இவர் தன்னுடைய வீட்டு படுக்கையறையில் ஒருவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக, முகம் சுளிக்க வைத்துள்ளது. இவரோடு வீடியோவில் இருக்கும் நபர், கட்சியின் கிளை நிர்வாகி என்று கூறப்படுவதால், அப்பகுதி அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து கடையாலுமூடு பகுதி அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஆரம்பத்தில் ஜனதா, ஜனதா தளம், த.மா.கா. எனச் சுற்றியபின் கடைசியில் அ.தி.மு.க.வில் இணைந்தவர் ஜான் தங்கம். தளவாய் சுந்தரத்தின் தயவில் ஜெயலலிதா காலத்தில் மா.செ. ஆனார். அதன்பிறகு 2014-ல் கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். ஜெ. மறைவுக்கு பிறகு எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக இருந்துவரும் ஜான் தங்கம், 2021-ல் பத்மநாபபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனார். குமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரம் உட்பட பலர் அணி மாறிச் சென்ற போதும் இவர் எடப்பாடியோடுதான் இருந்தார். அந்த விசுவாசத்துக்காக தொடர்ந்து மா.செ.வாக எடப்பாடி வைத்திருக்கிறார்.

 

இந்நிலையில் வெளியான ஜான் தங்கத்தின் ஆபாச வீடியோ குறித்து பேசுறதுக்கே எங்களுக்கு 'நா' கூசுது. ஒரு கட்சிகாரன்கிட்டயா இப்படி தப்பா நடக்கணும்? கட்சியில் கிளை நிர்வாகியாக இருக்கும் அவர், ஜான் தங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர். அரசியலில் பெரிய இடத்திலிருப்பவர்கள் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. ஆனால் ஜான் தங்கத்தின் இந்த சர்ச்சையைப் பார்க்கையில், கட்சியில் ஆண்களுக்கே பாதுகாப்பில்லை என்பதையே காட்டுகிறது. இப்படி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய இவர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

 

இந்நிலையில், அந்த வீடியோ 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு எடுக்கப்பட்டது என்றும், ஜான் தங்கத்தின் பதவியைக் குறிவைத்த எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி ஒருவரும், ஒ.செ. ஒருவரும் காழ்ப்புணர்ச்சியில் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். சென்னையில் அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்தபோது எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகியை தளவாய் சுந்தரமும், ஜான் தங்கமும் எடப்பாடியை சந்திக்கவிடாமல் மோசமாகப் பேசியதால் ஆத்திரத்தில் அவ்வீடியோவை சமூக வலைத்தளத்தில் விட்டதோடு, தலைமைக்கும் அனுப்பிட்டாங்களாம்.

 

ஜான் தங்கம் தரப்பினரோ, “அவருக்கு கால் இடுக்கு பகுதியில் புண் காயம் இருப்பதால் அதில் வழக்கமாக மருந்து போடும் போது, மருந்து போடும் நபரை யாரோ தூண்டிவிட்டு வீடியோ எடுத்து தவறுதலாக சித்தரித்து விட்டனர். அதை கட்சித் தலைமைக்கும் கூறிவிட்டோம்” என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.