Skip to main content

முதல்வர் மாவட்டத்தில் கந்துவட்டி மாஃபியா!

Published on 20/02/2019 | Edited on 04/03/2019

ந்துவட்டி சண்முகத்தையும், அவர் தம்பி மணியையும், சேலம் மாவட்ட சங்ககிரியின் மக்கள் ""த்ரீ தௌசண்ட் செவன் பிரதர்ஸ்'' என்று உச்சரிக்கிறார்கள். சங்ககிரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயி களும், சிறுதொழில் அதிபர்களும் தங்கள் சொத்து சுகங்களை இந்த த்ரீ தௌசண்ட் செவன் பிரதர்ஸிடம் பறிகொடுத்துவிட்டு புலம்புவதற்கும் ஜீவனற்று நடுத்தெருவில் நிற்கிறார் கள்.

சங்ககிரியில் உள்ள முகில் முட்டும் கட்டடங்கள் பலவும், பரந்து கிடக்கும் நிலங்களும், ஸ்ரீபி.எஸ்.ஜி. கல்வி நிலை யங்களும், சண்முகம் டிரான்ஸ் போர்ட் சர்வீசும், ஸ்பின்னிங் மில்லும் தொழில் சாம்ராஜ்ஜியமும், குட்டி போட்ட கந்து வட்டி மீட்டர் வட்டிக்காக, "3007 பிரதர்ஸ்' மிரட்டி எழுதி வாங்கியவையே என்கிறார்கள் மக்கள்.

kathuvati

இந்த 3007 பிரதர்ஸ் தான் சமீபத்தில் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர்களிடம் தங்களை சங்ககிரி விவசாயிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு ""எங்களோட சொத்துகளையும் நிலங்களையும் கேட்டு முதலமைச்சர் எடப்பாடியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுகிறார்'' என்று சொன்னவர்கள்.

இவ்வளவு பெரிய கந்துவட்டிப் பேரரசர்கள் எதற்காக முதலமைச்சரின் மைத்துனர் வெங்க டேசன் மீது புகார் கூற வேண்டும்?

""என் தாத்தா வழி உறவினரான மோகன் என்பவர் இந்த 3007 பிரதர்ஸிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு, மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்ற நிலையில்தான் என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். நான் இதுவரை பஞ்சாயத்து செய்ததில்லை என்னால் செய்யவும் முடியாது. நீங்கள் உடனே போலீசில் புகார் செய்யுங்கள் என்றுதான் சொன்னேன். மோகனும் அவர் மகனும் டி.எஸ்.பி. அசோக்குமாரிடம் புகார் அளித்தார்கள். இதனால் பயந்து போன 3007 பிரதர்ஸ் சென்னைக்கு போய் என்னைப் பற்றி அபாண்டமாகப் பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார்கள். என்னைப் பற்றி சங்ககிரி மக்களிடம் கேட்டுப் பாருங்கள்'' என்றார் முதலமைச்சரின் மைத்துனர் வெங்கடேஷ்.

3007 பிரதர்ஸால் எப்படிப் பாதிக்கப்பட்டார் மோகன்? அவரிடமே கேட்டோம்.

dinesh""சங்ககிரி நகரின் மையப்பகுதியில் எங்களுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை அடகு வைத்து 3007 பிரதர்ஸிடம் 15 லட்சம் கடன் வாங்கினோம். அப்போது நிரப்பப்படாத பத்திரங்கள், பாண்டு பேப்பர்கள், காசோலை களையும் வாங்கிக் கொண்டார்கள். ஒரு வருடம் வட்டியை மிகச் சரியாக கட்டினோம். மறுவருடம் வட்டி கட்டச் சிரமமாகிவிட்டது.

முதலும் வட்டியும் 50 லட்சம் வந்துவிட்டது. அடகு வைத்த நிலத்திற்கு நாலரைக் கோடி விலை பேசி விற்க முடிவு செய்தோம். ஆனால் 3007 சண்முகம், நிலம் முழுகிவிட்டது என்று கொஞ்சங்கூட நெஞ்சில் ஈரமில்லாமல் சொன்னார். அப்புறம்தான் நானும் என் மகன் தினேசும் டி.எஸ்.பி. அசோக்குமாரிடம் புகார் அளித்தோம். இதை அறிந்ததும் 3007 பிரதர்ஸ் காவல்துறை உயர்மட்டத்தில் தஞ்சமடைந்துவிட்டார்கள். தேவையில்லாமல் முதலமைச்சர் மைத்துனரையும், இதில் இழுத்துவிடுகிறார்கள்'' என்றார் மோகன்.

3007 பிரதர்ஸ் மீது போலீஸில் புகார் செய்த முதல் நபர் மோகன்தான். அவர் துணிச்சலுடன் புகார் கொடுத்திருப்பதைக் கேள்விப்பட்ட பிறகு தான், 3007 பிரதர்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார் கொடுக்கும் துணிச்சல் வந்திருக்கிறது.

3007 பிரதர்ஸான சண்முகம், மணி மற்றும் சண்முகத்தின் மகன் கார்த்திகேயன், தங்கை பர்வதம் ஆகிய நான்குபேர் மீதும், சங்ககிரி அம்மாபேட்டையை சேர்ந்த ராமசாமி என்பவர் சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
kathuvati
அம்மாப்பேட்டை ராமசாமியை அவர் இல்லத்தில் சந்தித்தோம்.

""நான் மைன்ஸ் தொழில் பண்றேன். 1997-ல் 3007 பிரதர் ஸிடம் மாதத்திற்கு மூன்று வட்டி என்று 25 லட்சம் கடன் வாங்கினேன். இதற்காக என் வீட்டையும் மைன்ஸ் தொழிலில் என்னுடைய 20 சதவீத பங்கு களையும் எழுதி வாங்கிக்கொண் டார்கள். மாதம் 75 ஆயிரம் வட்டி கட்டினேன். ஒரு மாதம் கூட பாக்கி வைக்கவில்லை. 2012இல் அசல் கடனைக் கட்டு வதற்காக போனபோதுதான் எனக்குத் தெரிந்தது போலி பத்திரம் தயாரித்து என்னுடைய வீட்டையே 3007 பிரதர்ஸ் கிரயம் செய்திருந்தார்கள். அசலையும் வட்டியையும் கட்டியபிறகும் "இன்னும் ஒரு கோடி தர வேண்டும். உடனே வீட்டை காலி செய்' என்று மிரட்டினார்கள். அவர்களிடம் பலபேர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சண்முகம் பிரதர்ஸின் கல்லூரி இருக்கே அந்த 15 ஏக்கர் கூட மனோகர் என்பவரிடம் வட்டிக்காக மிரட்டி எழுதி வாங்கியதுதான். பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான அவர்களை யார் என்ன செய்துவிட முடியும்? இப்போதுதான் துணிச்சல் வந்து புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார் ராமசாமி.

குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெறு வதற்காக 3007 பிரதர்ஸின் வீட்டுக்குச் சென்றோம். இருவரும் தலைமறைவாகிவிட்டனர். செல்போன் களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன.

""3007 பிரதர்ஸ், பல கோடி செலவில் புதுசா ஒரு ஆடம்பரப் பங்களா கட்டினாங்க. 10.2.19 அன்னிக்கித்தான் கிரகப் பிரவேசம் நடந்தது. அதுக்கே அவங்க ரெண்டுபேரும் வரலீங்க. அரெஸ்ட் பண்ணிடுவாங்களோ என்ற பயம். தலைமறைவாயிட்டாங்க'' என்றார்கள் அக்கம் பக்கத்தினர்.

3007 பிரதர்ஸ் மீதான புகார்கள் குறித்து டி.எஸ்.பி. அசோக்குமாரிடம் கேட்டோம்.

""அவர்களை விசாரணைக்கு கூப்பிட்டோம். தலைமறைவாகிவிட்டார்கள். தேடிக் கொண்டி ருக்கிறோம். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போதுதான் புகார்களோடு வரத் தொடங்கி யுள்ளனர்'' என்றார் டி.எஸ்.பி.




 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.