Skip to main content

எடப்பாடிக்கு அதிமுக சீனியர்களின் அட்வைஸ் - கண்ணையா ராமமூர்த்தி பகிரும் சீக்ரெட்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Kannaya Ramamoorthy Interview

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக ஆதரவாளர் கண்ணையா ராமமூர்த்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அண்ணாமலை குறித்த செய்திகள் அனைத்திலும் ஆழ்ந்த இரங்கல் என்கிற பதிவுதான் இப்போது காணப்படுகிறது. இவர் நடைபயணம் செய்து என்ன செய்யப்போகிறார்? கேரவன் எல்லாம் வைத்துக்கொண்டு இவர் சினிமா ஷூட்டிங் செல்கிறாரா? ஊழல் ஊழல் என்று பேசுகிறார்கள். எந்த ஊழல் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது? பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை இவர்கள் விடுதலை செய்தனர். மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக பலரை இவர்கள் கொலை செய்துள்ளனர். இதுதான் இவர்களுடைய வரலாறு.

 

கேஸ் விலை, பெட்ரோல் விலை உயர்வது குறித்து மோடிக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்துவதற்காகவே இருக்கும் ஒரு இயக்கம் பாஜக. இஸ்லாமியர்களை அடிப்பது தான் இவர்களுடைய கொள்கை. தமிழருவி மணியன் என்பவர் ஒரு வாய் வியாபாரி. அனைத்து தலைவர்கள் பற்றியும் மேடைகளில் பேசி அதன் மூலம் தனக்கு ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டவர் அவர். அண்ணாமலை பற்றியோ, தமிழருவி மணியன் பற்றியோ பேசுவதெல்லாம் கால விரயம் தான். அதற்கு இவர்கள் தகுதியானவர்கள் அல்ல. 

 

இந்தியாவில் ராகுல் காந்தி அலை ஆரம்பமாகிவிட்டது. மோடியின் அலை அஸ்தமனம் ஆகிறது. தென்னிந்தியாவில் பாஜக இப்போது ஜீரோ ஆகிவிட்டது. இப்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி இல்லை. மிகப்பெரிய கட்சிகள் இணைந்துள்ளதால் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய, வழிநடத்தக்கூடிய கட்சியாக இன்று திமுக இருக்கிறது. கொள்கை ரீதியாக பயணிக்கும் கட்சி இது. குடியாட்சி தத்துவத்தையே மறந்துவிட்டது பாஜக. 

 

மணிப்பூர் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பாஜக பதிலளிக்க வேண்டும். நிர்பயா விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே முடக்கியது பாஜக. ஆனால் அதுபோல் பல நூறு பெண்கள் பாதிக்கப்பட்ட மணிப்பூர் விவகாரம் குறித்து பேச மறுக்கிறது. அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ள பாஜக அமைதியாக இருக்க வேண்டும். பாஜகவோடு கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதே அதிமுக சீனியர்கள் எடப்பாடிக்கு செய்து வரும் ஆலோசனையாக இருக்கிறது. ஆனால் எடப்பாடி என்ன தான் செய்வாரோ?அதிமுக நடத்தும் மாநாட்டால் எந்த தாக்கமும் ஏற்படாது. எடப்பாடி பழனிசாமி பேசுவதைக் கேட்க யாரும் தயாராக இல்லை. அதிமுக ஒரு நல்ல தலைமையின் கீழ் மீண்டும் வலுப்பெற வேண்டும். 
 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.