Skip to main content

பாரத் என மாற்ற இதுதான் காரணம்; பாஜகவின் உள் நோக்கத்தை கண்ணையா மூர்த்தி விளக்குகிறார்!

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

 Kannaya Murthy Interview

 

மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக ஆதரவாளர் கண்ணையா மூர்த்தி பகிர்ந்து கொள்கிறார்.

 

பெயரை மாற்றினால் அனைத்தும் மாறிவிடும் என்று நினைக்கிறது பாஜக அரசு. 'இந்து' என்கிற பெயர் கூட வெள்ளைக்காரன் கொடுத்தது தான். அதையும் மாற்றிவிடுவார்களா? பிற்போக்குத்தனங்களால் நிரம்பி வழிகிறது இந்த பாஜக அரசு. இந்தியா என்கிற அமைப்பு சட்ட ரீதியாக உருவானது. அதை மாற்ற முயல்வது தவறு. இந்தியாவின் பெயரை மாற்றும் முடிவை இப்போது ஏன் இவர்கள் எடுக்கிறார்கள்? இந்தியாவின் பெயரை 'பாரத்' என இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன? பாஜகவின் பெயரில் பாரத் இருப்பதால் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

 

2G விவகாரத்தில் அரசுக்கு இழப்பு என்கிற செய்தி வந்ததற்கே, இவர்கள் அதை ஊழல் என்று பரப்பி ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள விஷயம் சிஏஜி அறிக்கையின் மூலம் இப்போது வெளிவந்துள்ளது. தேர்தல் வரும் வரை பெயர் மாற்ற விவகாரத்தை எல்லாம் வைத்து திசைதிருப்புவார்கள். அதன் பிறகு மோடி எங்கிருப்பார் என்று தெரியாது. அவர் பிரதமர் வேட்பாளராக இந்த முறை அறிவிக்கப்படுவாரா என்பதே கேள்விக்குறிதான். தங்களுக்கு சாதகமான பொய்யான கருத்துக்கணிப்புகளை பாஜக வெளியிட்டு வருகிறது. 

 

பல்வேறு வாழ்வியல் முறை, வழிபாட்டு முறை, உணவு முறை கொண்ட இந்த நாட்டில் பாஜக தன்னுடைய கருத்துக்களை திணிக்கக் கூடாது. இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் செய்ய விரும்பும் இயக்கம் தான் திமுக. இப்படி சீர்திருத்த இயக்கங்கள் அனைத்து மதங்களிலும் இருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால் எதுவும் மாறக்கூடாது என்கிறது சனாதனம். இது அறிவியலுக்கு எதிரானது. சேகர்பாபுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா சொல்வது நகைப்புக்குரிய விஷயம். ஆன்மீகத்தில் பிற்போக்கு சிந்தனைகள் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நீதிக்கட்சி காலத்திலேயே கோவில்கள் அரசுக்கு கீழே கொண்டுவரப்பட்டன. 

 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முறையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரே கட்சி ஒரே ஆட்சி என்கிற நிலைக்கு கூட இவர்கள் செல்வார்கள். இந்திரா காந்தி எமர்ஜென்சி தோல்வியில் அடிவாங்கி அதன் பிறகு ஜனநாயகப்படுத்தப்பட்டார். தங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வர வேண்டும் என்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்தை இப்போது இவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அனைத்து தேர்தல்களும் நடந்தால், மத்திய ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. எனவே இப்போது இருக்கும் நடைமுறைதான் சரியானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாசிச போக்கு.
 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.