Skip to main content

பாஜகவை பயமுறுத்திய ஒற்றை வார்த்தை, பரபரப்பான நாடாளுமன்றம்...

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

இன்று தமிழ்நாடு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
 

periyar



அனைத்து தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். ஒவ்வொருவரும் வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பெரியார், வாழ்க அம்பேத்கர் என தமிழ், தமிழ்நாடு, தலைவர்கள் சார்ந்து முழக்கமிட்டனர். இவையனைத்திற்கும் பாரத் மாதாக்கி ஜே போன்ற எதிர்குரல்கள் வந்தன. 

இப்படியாக முதல்நாளே மொழி பிரச்சனை தொடங்கியது. இந்த முறை அந்தந்த மாநில மொழிகளில் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் நேற்றிலிருந்தே பிறமொழிகளில் பதவியேற்றபோது சலசலப்பு இருந்தது. இன்று 39 உறுப்பினர்கள் தொடர்ந்து தமிழில் பதவியேற்றவுடன் அந்த சலசலப்பு அதிகமானது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி நாடாளுமன்றதொகுதி உறுப்பினர் கனிமொழி, தனது பதவியேற்பின் முடிவில் வாழ்க பெரியார் எனக்கூறினார். அப்போது உடனடியாக ஜெய் ஸ்ரீராம் என கோஷங்கள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இப்படியாக முதல்நாளே தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள் தங்களின் வலுவான குரல்களை பதிவுசெய்துள்ளனர். 

ஒருவர் குறித்து கூறியவுடன் உடனே எழும் எதிர்ப்புதான், அவர் கூறிய கொள்கையும், அவரின் வழிகளும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சாட்சி. அந்தவகையில் இன்றும் பெரியார் என்று கூறியவுடன், உடனே ஜெய் ஸ்ரீராம் என எழுந்த கோஷம்தான் அவர் கொள்கையும், அவரின் கோட்பாடும் இன்னும் உயிர்ப்புடனும், வலுவாகவும் இருக்கிறது என்பதற்கு சாட்சி.

முன்பு பெரியாரின் சிலைகள் வலதுசாரி இயக்கங்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது, அதனால் அவரின் சிலைகள் உடைக்கப்பட்டன. இன்று அவரின் பெயரே அவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், பீதியை கிளப்புவதாகவும் அமைந்துள்ளது. பெரியார் இன்றும், என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். வாழ்க பெரியார்...

 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.