Skip to main content

தேர்தலில் கூட்டணி வைக்க ரெடியாகிய கமல்! மக்கள் நீதி மய்யம் உற்சாகம்!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

முதல் தேர்தல் களத்தில் ஏறத்தாழ 4% பெற்ற கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் நகரவாசிகளிடமிருந்து தான் கிடைத்தன. கிராம மக்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் அறிமுகமாகாதது கமலை யோசிக்கவைத்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசனை கடந்த மாதம் சந்தித்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களிடம் கமல்ஹாசன்.... ""மக்கள் நீதி மய்யம் இதுவரை முழுமையாக எந்த ஒரு கிராமத்தையும் சென்றடையவில்லை. இதனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கிராமங்களில் மக்கள் நீதி மய்யத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

 

mnm



தமிழகத்தில் தி.மு.க., அ.தி. மு.க. கட்சிகள் வலுவாக இருப்பதற்கு காரணம் அக்கட்சியின் வலுவான அடித்தளம் கிராமத்திலிருந்து வளர்ந்ததுதான். கடந்த தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்துக்கு அதிகமான ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியது. அதனால் அதன் அடித்தளம் மீண்டும் பலமானது. ம.நீ.மய்யத்துக்கு அதைப்போன்ற ஒரு அடித்தளத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். இனி நடக்கும் ஒவ்வொரு கிராம சபைக் கூட்டங்களிலும் ம.நீ.மய்யத்தினர் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினையில் நாம் கேள்விகள் கேட்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றிருக்கிறார்.


இதனைத் தொடர்ந்து 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் மனுக்களோடு கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசன் காணொலி மூலம் 72 ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடமும் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்களிடமும் பேசி நிலவரத்தைக் கேட்டறிந்தார். இதேபோல் குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 95 ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்த மக்கள் நீதி மய்யத்தினர், அங்கு தீர்க்கப்படாத, அதிகாரிகள் கண்டுகொள்ளாத மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்து அதை கிராம சபைக் கூட்டத்தில் விவாதப் பொருளாக்கி தீர்மானமாக்கினார்கள்.

 

 

mnm



பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ம.நீ.ம. நாகர்கோவில் தொகுதி மற்றும் பகுதிப் பொறுப்பாளர்களான சிதம்பரம், ராஜசேகர், சுந்தர்ராஜ், கணேஷ் சிதம்பரம் நம்மிடம், "உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்களுக்கான தேவைகளும் பிரச்சினைகளும் அதிகம் உள்ளன. இதையெல்லாம் ஒவ்வொரு ஊராட்சியிலும் சென்று பட்டியல் தயாரித்தோம். பறக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் கக்கன்புதூரில் அந்த மக்கள் குளத்தில் இறங்கிக் குளிப்பதற்கு பல ஆண்டுகளாக படித் துறை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் அதை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

 

mnm



அதேபோல் நெடுந்தெரு மக்களுக்கு கழிவுநீர் சாக்கடை நிரம்பியுள்ள பகுதியிலிருந்து ஆழ்குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறார்கள். அந்த குடிநீர் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும். மின்சாரம் இல்லாமல் காட்சிப் பொருளாக இருக்கும் இ- சேவை மையத்துக்கு மின்சாரமும், அலுவலகம் இருக்கு ஆனால் அதிகாரிகள் இல்லை. இதையெல்லாம் கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளை வலியுறுத்தி தீர்மானம் போட வைத்தோம்.

இங்கு கிராம சபைக் கூட்டம் நடக்கும்போது பொதுமக் கள் 5-ல் இருந்து 10 பேர்தான் வருவார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில் 100 பேரை கலந்து கொள்ள வைத்தோம். ஆரம்பத்தில் அந்த மக்களுக்கு எங்களை அடையாளம் தெரியவில்லை. கிராம சபைக் கூட்டத்துக்குப் பிறகு அந்த மக்கள் எங்களுக்கு ஒரு அடையாளத்தை தந்ததோடு எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையும் வந்துவிட்டது. இது கிராமத்தில் எங்களுக்கு முதல் வெற்றி'' என்றனர். கிராம சபைக் கூட்டங் களை கையிலெடுத்திருக்கும் கமல்ஹாசனின் யுக்தி குறித்து மாநில நிர்வாகிகளிடம் பேசிய போது... ""பிரதான கட்சிகளும் ஆண்ட மற்றும் ஆளும் கட்சி களும் கிராமங்களைக் கண்டு கொள்ளவேயில்லை. இதனால் கிராம மக்களின் குரலை ஒலிக்க வைக்கவும் கிராமங்களில் ம.நீ.ம.வை வலுப்படுத்தவும், ஊராட்சியில் முழு அதிகாரம் கொண்ட கிராமப் பொறுப் பாளர்கள் என்ற பதவியை அறி விக்கவும் தலைமை திட்டமிட்டுள் ளது. அந்தப் பொறுப்பாளர்கள் கிராமத்திலுள்ள மக்கள் பிரச் சினைகளை முழுமையாக அறிந் திருக்க வேண்டும். அதன்பிறகு தலைமை அறிவிக்கும் ஒரு விச யத்தை மாவட்ட தலைநகரத்துக் குப் பதில் கிராமத்திலிருந்து நடைமுறைப்படுத்தும் விதமாக திட்டம் வகுக்கப்பட உள்ளது. இனி கட்சிக்கு முதுகெலும்பே கிராமம்தான்''என்றனர்.


பிக்பாஸ் சீஸன் 3 பங்கேற் பாளர்களிடம் "அகம் டி.வி.' வழியே பேசுகிற கமல், ம.நீ.ம. சார்பில் கிராம மக்களிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸில் பேசியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் வந்தால் கணிசமான ஊராட்சிகளில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதே கமலின் டார்கெட். கிராம சபை வியூகம், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ஹிட்டானால், அது சட்டமன்ற தேர்தலுக்கு பெரிய கட்சிகளுடன் மோதுவதற்கோ அல்லது கூட்டணி அமைப்பதற்கோ பயன்படும் என்பது கமல் கணக்கு.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.