ADVERTISEMENT

கடத்தவில்லை... மிரட்டல் விடுக்கவில்லை... காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம்..! அதிமுக எம்.எல்.ஏ விளக்கம்..!

06:29 PM Oct 05, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரபு. இவரது சொந்த ஊர் தியாகதுருகம். இவரது தந்தை ஐயப்பா, தாய் தைலம்மை. ஐயப்பா தியாகதுருகம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளராக சுமார் பத்தாண்டுகளாக பதவியில் உள்ளார்.

இந்தநிலையில், தியாகதுருகத்தில் உள்ள மலையம்மன் கோயில் அர்ச்சகராக உள்ள சாமிநாதனின் மகள் கல்லூரி மாணவியான சௌந்தர்யாவுக்கும் பிரபுவுக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட காதலை சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் ஏற்றுக் கொள்ளவில்லை. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் தந்தை இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் சௌந்தர்யாவின் முழு சம்மதத்துடன் சௌந்தர்யாவின் உறவினர்கள் மற்றும் எம்.எல்.ஏ பிரபுவின் உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள, எளிமையான முறையில் பிரபு - சௌந்தர்யா திருமணம் பிரபுவின் வீட்டில் இன்று அதிகாலை நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபு. அந்த வீடியோவில், நாங்கள் இருவரும் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறியுள்ளார்.

வீடியோவில் அவர், வணக்கம். நான் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு. எனக்கும் சௌந்தர்யாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சில வதந்திகள் வந்துகொண்டிருக்கிறது. நான் சௌந்தர்யாவைக் கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வற்புறுத்தி திருமணம் செய்ததாகவும் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. அப்படியெல்லாம் ஒரு சம்பவமும் நடக்கவில்லை.

நாங்கள் இருவரும் காதலித்தோம். சௌந்தர்யா காதலித்ததால் அவர்கள் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டோம். அவர்கள் தர மறுத்தார்கள். பின்னர் நாங்கள் இருவரும் எங்கள் அப்பா, அம்மா சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டோம். சௌந்தர்யாவுக்கோ, இவர்கள் குடும்பத்திற்கோ கொலை மிரட்டலோ, சௌந்தர்யாவுக்கு ஆசாபாசங்கள் பேசியோ திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT