Skip to main content

விதியை மதியால் வெல்லத் தெரியாதா? இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற... - கலைஞர்

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

ஆயிரம் நிகழ்ச்சிகளை, தமிழ் முழுதறிந்த தன்மையாளராகத் திகழ்ந்த அந்தத் தனிப்பெரும் தலைவரின் புகழை, எந்த வகையிலும் எடுத்துச் சொல்லலாம். அவர் அறியாத தமிழ் இல்லை, அவர் தெரியாத சங்கப்பாடல் இல்லை, அவர் எழுதாத உரைவிளக்கம் இல்லை. ஒன்றுமட்டும் சொல்கிறேன். கோப்பு என்பதைப் பார்க்கிறபோதுகூட அவருடைய இலக்கியத்திறன் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு ஒரு சான்று நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஏதோ ஒரு கோப்பில் "விதி இதற்கு இடம்தரவில்லை'’என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன். 

 

kalaingar



மறுநாள்காலை முதல்வர் எழுதுகிறார், "விதியை மதியால் வெல்லத் தெரியாதா?'’இதைவிட நாட்டு மக்களுக்கு நலம் செய்கிற தொடர் இருக்க முடியுமா? இன்னுமொன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. திண்டுக்கல் அருகே குஜிலிபாளையம்’என்று ஒரு பகுதி இருக்கிறது. "குஜிலிபாளையம் என்ற சொல்லை மாற்றவேண்டும், அது என்ன பொருள் என்று விளங்கவில்லை' என்று அந்தக் கோப்பு வந்தது. நானும் என்னால் முயன்ற வரையிலும் பார்த்து “குஜிலி“ என்று சொன்னால் குஜராத்தியர்கள் குடியேறிக் கடைவைத்திருந்த இடம் என்பதனால் அந்தக் கடைப்பகுதிக்குப் பெயர் குஜிலிபாளையம் என்று பெயர் வந்திருக்கிறது. இதனை மாற்றுவது என்று சொன்னால் திண்டுக்கல் பகுதியைச் சார்ந்தது என்பதற்காக “குறிஞ்சிப்பாளையம்“ என்று மாற்றலாம் என்று முதலமைச்சரிடம் பணிந்து இந்தக் கோப்பு அனுப்பப்படுகிறது என்று அனுப்பிவைத்தேன். 

 

kalaingar



வின்ஸ்டன் சர்ச்சிலைப் பற்றிச் சொல்வார்கள். அவர் தலைமை அமைச்சராக இருந்தது பெரிதில்லை. அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுதிகள்தான் அவருக்கு ஆங்கில இலக்கியத்திலேயே நோபல் பரிசு பெற்றுத்தந்தது. உலகத்தில் சர்ச்சிலுக்கு அடுத்து மாசேதுங்கைச் சொல்வார்கள். அப்படிப்பட்ட இலக்கிய மனம் உடையவர் என்று. இந்த இரண்டு பேரிடத்தும் காணாத ஒருதிறன், நம் கலைஞரிடம் இருந்தது. ஒரு சான்று சொல்வது என்றால்……அவருக்கு அரசியல் தெரியும். இலக்கியம் தெரியும். கலை தெரியும், சிந்தனை தெரியும், எண்ணுகிற எண்ணங்களையெல்லாம் எப்படி என்று எடுத்துக் காட்டவும் தெரியும். அவர் சிந்திய எழுத்தினுடைய துளிதான் என்னைப் போன்றவர்களையெல்லாம் துணை வேந்தராக ஆக்கியது.

 

kalaingar



12 மணிக்கு நண்பர் சண்முகநாதன் தொலைபேசி யில் கேட்டார் "பொருதடக்கை வாள் எங்கே'’’ என்ற தொடர் எங்கே வருகிறது? என்று. எனக்குக் கேட்டால் எதுவும் நினைவுக்கு வராது. நான் அவரிடத்தில் சொன்னேன். "பொருதடக்கை வாள் எங்கே?'“ என்று பொதுவாகப் போட்டுவிட்டால் போகிறது. யார் அதைக் கவனிக்கப் போகிறார்கள் என்றேன். சண்முகநாதன் சொன்னார், "உங்களுக்கு வேண்டுமென்றால் தூக்கம் வரும். கலைஞருக்கு விடியற்காலை வரையில் தூக்கம் வராது'. அந்தத் தொடரைக் கண்டுபிடித்தால்தான் தூங்குவார். அந்தக் குஜிலிபாளையத்தைப் பற்றிச் சொன்னேனே... அதற்கு ஒரு விளக்கம் எழுதியிருந்தார்.

குறிஞ்சிப்பாளையம் என்று மாற்றுவதில் குற்றமில்லை. ஒரு முதலமைச்சர் எழுதுகிற தொடரைப் பாருங்கள். ஆனால் குஜிலி என்ற சொல் வருகிறபோது அதற்கு பங்கஜம் என்பதைப் பங்கயம் என்று மாற்றுவது போல குயிலம்பாளையம் என்று மாற்றவேண்டும். சிலப்பதிகாரச் சிந்தனை அதைத்தான் சொல்கிறது. இன்றுதான் "இந்து' நாளிதழில் ஒரு கட்டுரையைப் படித்தேன். “எ ரைட்டர் ஸ்டேட்ஸ்மென்“ என்று கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். “எ ஸ்காலர் ஸ்டேட்மென்“ என்று. அவருக்குத் தெரியாத கருத்துக்களே இல்லை. அவர் எதைச்சொன்னாலும் அதிலே ஒரு துளி இருக்கும். சிந்தனை இருக்கும். ஒளி இருக்கும். ஆற்றல் இருக்கும்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.