Skip to main content

மரணத்திலும் தனித்துவம் பெற்ற தலைவர் கலைஞர்!!!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
kalaignar


 

கலைஞருடைய மரணம், அவரைப் பற்றி இதுவரை பரப்பப்பட்ட அவதூறுகளை நம்பிப் பரப்பிவந்த இன்றைய தலைமுறையினருக்கு உண்மைகளை உரக்க உரைத்திருக்கிறது. மீடியாக்களில் வேலைசெய்யும் இளைஞர்களேகூட அவரைப்பற்றிய உண்மைகளை இப்போதுதான் படித்து செய்தியாக வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

அட, இவர் இவ்வளவு செய்திருக்கிறாரா என்பது இப்போதுதான் அவர்களுக்கே புரியத் தொடங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், அவருடைய நீண்டகால அரசியல் பயணcமும். அவர் கடந்து வந்த வேறுபட்ட சூழல்களில் வளர்ந்து வந்த தலைமுறைகள்.

 

இன்றைக்கும்கூட அவருடைய சாதனைகளை சொல்ல முயன்றால் முழுவதையும் யாராலும் வரிசைப்படுத்திவிட முடியாது. பலரும் பல சாதனைகளை வரிசைப் படுத்துகிறார்கள். நாம் வரிசைப் படுத்தியதில் இல்லாத பல சாதனைகள் மற்றவர்களின் பட்டியலில் இடம்பெற்று இருக்கும்.

 

 

 

இதற்கு காரணம் எல்லாமே மக்கள் நலன் சார்ந்தவையாகவும், சமூகநீதி சார்ந்தவையாகவும், தமிழ்நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் நீண்டகாலத் திட்டங்களாகவும் அமைந்திருப்பதுதான்.

 

கிராமங்களுக்கு பேருந்துகள் வரக் காரணம் கலைஞர்தான் என்றால் அப்படியா என்கிறார்கள்… காமராஜர் காலத்தில் பஸ்களை விடவில்லையா? என்கிறார்கள்.

 

காமராஜர் காலத்தில் பேருந்துகள் முதலாளிகளுக்கு சொந்தமாக இருந்தது. சாலைகள் நன்றாக இருக்கும் பெரிய ஊர்களுக்கு மட்டுமே பஸ்கள் வரும். கலைஞர்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து போக்குவரத்தை அரசுடைமையாக்கி குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். ஒற்றையடிப் பாதைப் பயணத்தை சாலைவழிப் பயணமாக்கியவர் அவர். ஆம், குக்கிராமங்களையும் சாலைகளால் இணைத்தவர் அவர்தான்.

 

குடிசைகளாய் நிரம்பியிருந்த கிராமங்கள் இன்றைக்கு தீப்பிடிக்காத வீடுகளால் நிரம்பியிருக்கின்றன என்றால் கலைஞரின் குடிசை மாற்று வாரியமும், வீட்டுவசதி வாரியமும்தான் காரணம்.

 

பள்ளிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை தமிழகம் அடையக் காரணமாக இருந்தவர் கலைஞர் என்றால் அப்படியா என்கிறார்கள்… காமராஜர் காலத்தில் 6 ஆயிரம் பள்ளிகளை திறந்தார் என்கிறார்கள். அவருக்கு முன் காங்கிரஸ் அரசின் முதல்வராக இருந்த ராஜாஜி மூடிய 6 ஆயிரம் பள்ளிகளைத்தான் திறந்தார் என்று உண்மையைச் சொன்னால் வியப்படைகிறார்கள்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக கல்லூரியில் பட்ட வகுப்புவரை இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் கலைஞர் என்றால் விவரம் தெரியாமல் மலைக்கிறார்கள். பெண்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பெருமைப்படுவதற்கு கலைஞரே காரணம் என்றால் எப்படி என்று கேட்கிறார்கள்.

 

5 ஆம் வகுப்பு முடித்தவுடன் பெண் பிள்ளைகளை பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவார்கள் என்றால் நம்ப மறுக்கிறார்கள். 1989 ஆம் ஆணடு மூன்றாவது முறையாக கலைஞர் முதல்வரானவுடன், எட்டாம் வகுப்புவரை படித்தால் அவர்கள் திருமணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியும், 10 ஆம் வகுப்புவரை படித்தால் திருமணத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் நிதியும், 12 ஆம் வகுப்புவரை படித்தால் 10 ஆயிரம் ரூபாய் நிதியும் கொடுப்பதாக அறிவி்த்தார். பிளஸ்டூ வரைக்கும் இலவச புத்தகங்கள் வழங்கினார். இந்தத் திருமண உதவியை பெறுவதற்காகவே பெண்களை படிக்க வைத்தார்கள். பிளஸ்டூ வரை நன்றாக படிக்கும் பெண்களை வீட்டாரே மேற்கொண்டு படிக்க வைக்க விரும்பினார்கள்.

 

kalaignar


 

1989ல் பதவியேற்ற சமயத்தில்தான் இந்தியாவில் முதன்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை, ஆரம்பக் கல்வி வரை அனைத்து வகுப்புகளுக்கும் பெண்களே ஆசிரியர் என்ற அறிவிப்பு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டங்களையெல்லாம் அறிவித்தார்.

 

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற அறிவிப்புதான், தமிழகம் விவசாயத்தில் தன்னிறைவு பெற அடிப்படை காரணம் என்பது விவசாயிகளுக்கு தெரியும். அவரை மட்டும் 1977ல் மீண்டும் முதல்வராக்கியிருந்தால் தமிழகம் இலவசமே பார்க்காத எல்லா வகையிலும் முன்னேறிய மாநிலமாக ஆக்கியிருப்பார் என்கிறார்கள்.

 

இந்த ஆட்சிக் காலத்தில்தான், இடஒதுக்கீட்டு அளவை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69 சதவீதமாக உயர்த்தினார் கலைஞர். பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை இந்தியாவில் முதன்முறையாக தர்மபுரியில் தொடங்கி வைத்தார் கலைஞர். வெறும் பருப்பு கலந்த சோறாக இருந்த சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தையும், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கியதும் 1989-1991 இடைப்பட்ட இரண்டே ஆண்டு ஆட்சியில்தான்.

 

1977ல் இருந்து 1987 வரை எம்ஜியார் ஆட்சியில் தேடிப்பார்த்தாலும் இதுபோன்ற சாதனைகள் எதையும் பார்க்கவே முடியாது. தமிழகம் சாதி அரசியலுக்கு திரும்பியதும், நீண்டகாலத் திட்டங்களிலும், கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தாமலும் வெறும் கவர்ச்சித் திட்டங்களிலேயே காலத்தை ஓட்டினார் எம்ஜியார் என்பதுதான் உண்மை.

 

1989ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் அவசர அவசரமாக அத்தனை சட்டங்களை பிறப்பித்தார். தமிழகத்தில் மட்டுமே அமலில் இருந்த இடஒதுக்கீடு முறையை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதிலும் முக்கிய பங்குவகித்தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அன்றைய பிரதமர் வி.பி.சிங் மூலம் அமல்படுத்தச் செய்தார். பார்ப்பனீயத்தின் வேரை அசைக்கும் அவருடைய சட்டங்களை நிறைவேற்றும் கலைஞரின் ஆட்சியை பார்ப்பனீய சக்திகள் அனுமதிக்கவில்லை. விடுதலைப் புலிகளைக் காரணமாக காட்டி அடிப்படை காரணமே இல்லாமல் 1991ல் கலைஞர் ஆட்சியைக் கலைத்தன.

 

ஆனால், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் கலைஞருக்கு சாதகமாக இருந்தன. மீண்டும் திமுகவே வெற்றிபெறும் நிலை உருவாகியது. அதைச் சீர்குலைக்கவே, தமிழகத்தில் ராஜிவ் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. இந்தக் கொலைக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது என்று இன்றுவரை சொல்லப்பட்டாலும், கலைஞரையும் திமுகவையும் ராஜிவ் கொலையில் சம்பந்தப்படுத்தி தோற்கடித்தனர்.

 

திமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்பதை அறிந்த ஒருகூட்டம், 1993ல் பொய்யான காரணங்களை குற்றச்சாட்டாக முன்வைத்து கட்சியை மீண்டும் பிளவுபடுத்தியது. ஆனால், கலைஞர் கட்சியை கட்டிக் காப்பாற்றினார். 1996ல் மீண்டும் நான்காம் முறையாக முதல்வரானார். தலைநகர் சென்னையின் ஆங்கிலப் பெயரான மெட்ராஸ் என்பதை நீக்கி, அனைத்து மொழியிலும் சென்னை என்றே அழைக்கும்படி சட்டம் இயற்றினார்.

 

 

 

கிராமப்புற மேம்பாட்டுக்காக நமக்குநாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்தினார். இந்தத் திட்டங்கள் கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க உதவியது. விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை லாபகரமாக விற்க உழவர் சந்தைகளை உருவாக்கினார். அனைத்து சமுதாயத்து மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் 100க்கு மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களை தமிழகம் முழுவதும் உருவாக்கினார்.

 

உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு, பிளஸ்டூ வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், கணினி தமிழை மேம்படுத்தும் வகையில் சென்னையில் இணைய மாநாடு நடத்தி தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தனியார் மூலம் குக்கிராமங்களுக்கு மினிபஸ்கள் என்று 1996ல் பொறுப்பேற்ற கலைஞரின் சாதனைகள் பிரமிப்பூட்டுகின்றன.

 

2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற கலைஞர், பதவியேற்பு மேடையிலேயே கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கவும், கூட்டுறவுக்கடன் ரூ 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தும், சத்துணவுத் திட்டத்தில் வாரம் 2 முட்டை வழங்கியும் உத்தரவிட்டார்.

 

கலைஞரின் இந்த பதவிக் காலத்தில்தான், சாமான்ய மக்களின் கனவான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி,  இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு ஆகியவை அனைத்துக் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டன. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதையடுத்து, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றினார் கலைஞர்.

 

கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 மாதங்களுக்கு மாதம் 1000 ரூபாய் நிதியுதவி,  படித்தும் வேலைகிடைக்காத இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை, ஆதரவற்ற முதியோருக்கு மாதம் 400 ரூபாய் உதவித்தொகை, திருமணமாகாத மூத்த பெண்மணிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

kalaignar


 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு, அரவாணிகள் என அழைக்கப்பட்டோரை திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு நல வாரியம், ஊனமுற்றோர் என இழிவாக ஒதுக்கப்பட்டவர்களை மாற்றுத் திறனாளிகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியதை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தியது கலைஞர் அரசு.

 

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம், ஏழைகளுக்கும் உயர்தரமான சிகிச்சைகள் கிடைக்க வசதியாக 2009 ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம், 2010-ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் நாள் முதல் கலைஞர் இலவச வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம் பல லட்சம் மக்கள் பலன் அடைந்தனர்.

 

சென்னைக்கு அருகே கார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட்டு, உற்பத்தி வருவாயும் வேலைவாய்ப்பும் பெருகச் செய்தார். ஒரே பாடத்திட்டத்துடனான சமச்சீர் கல்வி முறை, ஒரு குடும்பத்திலிலிருந்து முதல் தலைமுறையில் பட்டதாரியாகும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் கட்டணம் இலவசம், பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம், பள்ளி மாணவர்களுக்கு ஊட்டமளிக்கும் வகையில் சத்துணவில் வாரம் 5 முட்டைகள் எனப் பல திட்டங்களை கலைஞர் நடைமுறைப்படுத்தி சாதனை படைத்தார்.

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வளமும், பண்பாட்டுப் பெருமையும் கொண்ட தமிழ்மொழிக்கு மத்திய அரசின் செம்மொழித் தகுதியை பெற்றுக்கொடுத்தார் கலைஞர். அதைத்தொடர்ந்து, 2010 ஜூன் 23 முதல் 27 வரை கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும்,  தமிழ் இணைய மாநாட்டையும் நடத்தினார். தமிழில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் வேலை அளிப்பதற்கான அவசரச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர்.

 

இவ்வளவு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றினாலும், பொய்ப்புகார்களை ஊதிப் பெரிதாக்கி, ஈழப் பிரச்சனையை திமுகவுக்கு எதிராக திசைதிருப்பி, எல்லாக் கட்சிகளும் அணிசேர்ந்து திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தன என்பதுதான் சோகம்.

 

 

 

2011ல் ஆட்சிக்கு வந்திருந்தால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தின்படி, அர்ச்சகர் பொறுப்புகளிலும் இட ஒதுக்கீடுப்படி ஏராளமானோரை நியமித்திருப்பார்.  சமூகநீதி முழுமை அடைந்திருக்கும். ஆனாலும் என்ன அவருடைய சட்டப்படி, அவர் காலத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களில் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பணிநியமனம் பெற்றசமயத்தில்தான் கலைஞர் உயிர் பிரிந்திருக்கிறது.

 

தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தமிழ் மொழிக்காக பாடுபட்ட, பெண்களின் நலனுக்காக சட்டப்பாதுகாப்பு வழங்கிய கலை, இலக்கியத்தில் குறிப்பிட்த்தக்க தொண்டாற்றிய கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடமில்லை என்று தமிழக அரசு மறுத்தபோது தமிழகம் நிஜமாகவே கொந்தளித்தது.

 

சொத்துக்குவிப்பு வழக்கி்ல் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவுக்கு எம்ஜியார் சமாதியில் இடம் கொடுத்த அரசு, தமிழக வரலாற்றில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்தில் வேறு யாருமில்லாத அளவுக்கு 19 ஆண்டுகள் ஆட்சி செய்து அரிய சாதனைகளைப் படைத்த கலைஞருக்கு இடமில்லை என்று தமிழக அரசின் வழியாக ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மறைமுகமாக தடை ஏற்படுத்தின.

 

ஆனால், போராட்டமே வாழ்க்கையாக கொண்ட கலைஞர், அவருடைய மரணத்துக்கு பின்னரும், நீதிதேவதையுடன் ஆதரவுடன் அண்ணா நினைவிடத்தில் இடத்தை பெற்று ஓய்வெடுக்கிறார்.

 

தமிழ்நாட்டுக்காக உழைத்த மாபெரும் தனித்துவமிக்க தலைவர் என்ற வகையில் அண்ணா நினைவிடத்தில், திமுக சார்பில் கொடுத்திருக்கும் வரைபடத்துக்கு ஏற்ப அரசு இடம் ஒதுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுப் புகழ்பெற்ற தீர்ப்பை வழங்கியது கலைஞரின் இறப்புக்கு பிறகான சாதனைதான்.

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.