Skip to main content

நானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் "கலைமாமணி" விருது சர்ச்சை!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

2011-லிருந்து 2018-ஆம் ஆண்டுவரை 8 ஆண்டுகளுக்கான "கலைமாமணி' விருது வழங்கும் விழா, கடந்த 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதாவது ஜெ. ஆட்சிக்கும் சேர்த்து தாமதமாக விருது வழங் கியதை ஒப்புக்கொண்டது எடப் பாடி அரசு. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 201 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி னார் முதல்வர் எடப்பாடி. "திறமையான, உண்மையான கலை ஞர்கள் பலருக்கு "கலைமாமணி' விருது கிடைக்கவில்லை, அமைச்சர்கள் கை காட்டுபவர்களுக்கே விருதுகள் கிடைத் துள்ளன' என்ற சர்ச்சைக் குரல்கள் மதுரையிலிருந்து ஒலிக்கின்றன.

 

award



இதுகுறித்து தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் முத்து ராமலிங்கம் நம்மிடம் விரிவாகப் பேசினார். ""1955-லிருந்து சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1973-ல் தமிழ்நாடு இயல் -இசை -நாடக மன்றமாக்கி னார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக இருப்பார். அவர்தான் நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், ஆர்மோனியம் பின்பாட்டுக் கலைஞர்கள், சினிமா நடிகர்கள் ஆகி யோரை இனம் கண்டு விருதுக்குப் பரிந்துரைப்பார். 

 

admk



இதுதான் இத்தனை ஆண்டுகால நடைமுறை. ஆனால் இப்போது எடப்பாடி அரசு தங்கவேலு என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை இயல் -இசை -நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராகப் போட்டு, எட்டு ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்து விருதும் வழங்கியுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 30 ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருக்கிறேன். மொத்த உறுப்பினர்கள் 400 பேர். 

 

drama actor



இதுவரை மொத்தமே 8 பேர்தான் இந்த சங்கத்திலிருந்து "கலைமாமணி' விருது பெற்றி ருக்கிறார்கள். அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக யாருக்குமே விருது கொடுக்காமல் இப்போதுதான் சிலருக்கு கிடைத்துள்ளது, அதுவும் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால், "கலைமாமணி' விருது பெற்றவர் பரிந்துரை செய்ய வேண்டும். கொஞ்ச காலத்திற்கு முன்பு விருது வாங்கிய எட்டு பேரும் உயிருடன் இல்லாததால், சீனியர் மெம்பர்கள் ஓய்வூதியம்கூட வாங்க வழியில்லாமல் போய்விட்டது.

இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி தங்கவேலு வந்த பிறகு, "ஏய் நல்லா பார்த்துக்க, நானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான்'னு அமைச்சர்களின் சிபாரிசுகளோடு "கலைமாமணி' விருது வாங்கியிருக்கிறார்கள். "விருது வாங்கலையோ விருது'ன்னு கூவிக்கூவி விக்காத குறைதான்''’என்றார் வேதனையுடன். மதுரை இயல் -இசை -நாடக மன்றத்தின் செயலாளரான சோமசுந்தரம் நம்மிடம் பேசும் போது, ""மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு "கொம்பு-தப்பட்டைக் கலைஞர்' என்ற வகையில் "கலைமாமணி' விருது வழங்கி யிருக்கிறார்கள். அந்த வாத்தியக் கலைஞரே அவர் இல்லை. அதேபோல் இசைக்கல்லூரியில் இப்போதுதான் படிப்பை முடித்திருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் விருது வழங்கி யிருக்கிறார்கள்'' என்றார்.


விருது சர்ச்சை குறித்து தங்கவேல் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டபோது, “மதுரையைப் பொறுத்த வரை கலைஞர்களுக்கான சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு சங்கமும் போட்டி பொறாமையுடன் இருப்பதால், எப்போது விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் இதே பிரச்சனை தான். என்னைப் பொறுத்தவரை சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறேன்''’என்கிறார். மதுரையில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களும் "கலைமாமணி' விருது குறித்துக் குமுறுகிறார்கள். சர்ச்சைகளில் சிக்கி வழக்குகளை எதிர்கொள்ளும் பிரகாஷ் எம்.சுவாமி, நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு முதல்வர் விருது வழங்கியிருப்பது குறித்து கண்டனக் குரல்கள் பதிவாகின்றன. "கலைமாமணி' விருதுபோல் மற்றொரு விருது சர்ச்சையும் அதே மதுரையிலிருந்து கிளம்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனமான "பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' சார்பில், கைவினைக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுவது வழக்கம். விருது பெறுவோர், தங்களின் படைப்பை செய்து காட்டும் வீடியோ பதிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.

இந்த விதியை எப்படி மிதிக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லத் தொடங்கினார் பஞ்சலோக சிலை வடிவமைப்பாளரான மோகன். 1979-லிருந்து பித்தளை கலைப்பொருட்கள் செய்து வருகிறேன். கேரளாவில் 2018-ல் நடந்த பன்னாட்டுக் கைவினைக் கலைஞர்கள் திருவிழாவில், சிறந்த கலைஞர்கள் நான்கு பேரில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்தது கேரள அரசு. தமிழக அரசின் விருதுக் காக எட்டு ஆண்டுகள் முயற் சித்தும் எனக்கு கிடைக்க வில்லை. இதைவிடக் கொடுமை என்னன்னா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கும் கைவினைப் பொருட்கள் விற்கும் ஒரு கடையில் நான் வடிவமைத்த சிலைகளை வாங்கி, விருதுக் கமிட்டிக்கு அனுப்பி விருதும் வாங்கியிருக்கிறார் கிருஷ்ணன் என்பவர்''’என பொருமினார். இன்னும் எவ்வளவு பொருமல்கள் வெளியில் தெரியாமல் இருக்கின்றனவோ?
 

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.