Skip to main content

நானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் "கலைமாமணி" விருது சர்ச்சை!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

2011-லிருந்து 2018-ஆம் ஆண்டுவரை 8 ஆண்டுகளுக்கான "கலைமாமணி' விருது வழங்கும் விழா, கடந்த 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதாவது ஜெ. ஆட்சிக்கும் சேர்த்து தாமதமாக விருது வழங் கியதை ஒப்புக்கொண்டது எடப் பாடி அரசு. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 201 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி னார் முதல்வர் எடப்பாடி. "திறமையான, உண்மையான கலை ஞர்கள் பலருக்கு "கலைமாமணி' விருது கிடைக்கவில்லை, அமைச்சர்கள் கை காட்டுபவர்களுக்கே விருதுகள் கிடைத் துள்ளன' என்ற சர்ச்சைக் குரல்கள் மதுரையிலிருந்து ஒலிக்கின்றன.

 

award



இதுகுறித்து தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் முத்து ராமலிங்கம் நம்மிடம் விரிவாகப் பேசினார். ""1955-லிருந்து சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1973-ல் தமிழ்நாடு இயல் -இசை -நாடக மன்றமாக்கி னார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக இருப்பார். அவர்தான் நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், ஆர்மோனியம் பின்பாட்டுக் கலைஞர்கள், சினிமா நடிகர்கள் ஆகி யோரை இனம் கண்டு விருதுக்குப் பரிந்துரைப்பார். 

 

admk



இதுதான் இத்தனை ஆண்டுகால நடைமுறை. ஆனால் இப்போது எடப்பாடி அரசு தங்கவேலு என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை இயல் -இசை -நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராகப் போட்டு, எட்டு ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்து விருதும் வழங்கியுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 30 ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருக்கிறேன். மொத்த உறுப்பினர்கள் 400 பேர். 

 

drama actor



இதுவரை மொத்தமே 8 பேர்தான் இந்த சங்கத்திலிருந்து "கலைமாமணி' விருது பெற்றி ருக்கிறார்கள். அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக யாருக்குமே விருது கொடுக்காமல் இப்போதுதான் சிலருக்கு கிடைத்துள்ளது, அதுவும் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால், "கலைமாமணி' விருது பெற்றவர் பரிந்துரை செய்ய வேண்டும். கொஞ்ச காலத்திற்கு முன்பு விருது வாங்கிய எட்டு பேரும் உயிருடன் இல்லாததால், சீனியர் மெம்பர்கள் ஓய்வூதியம்கூட வாங்க வழியில்லாமல் போய்விட்டது.

இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி தங்கவேலு வந்த பிறகு, "ஏய் நல்லா பார்த்துக்க, நானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான்'னு அமைச்சர்களின் சிபாரிசுகளோடு "கலைமாமணி' விருது வாங்கியிருக்கிறார்கள். "விருது வாங்கலையோ விருது'ன்னு கூவிக்கூவி விக்காத குறைதான்''’என்றார் வேதனையுடன். மதுரை இயல் -இசை -நாடக மன்றத்தின் செயலாளரான சோமசுந்தரம் நம்மிடம் பேசும் போது, ""மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு "கொம்பு-தப்பட்டைக் கலைஞர்' என்ற வகையில் "கலைமாமணி' விருது வழங்கி யிருக்கிறார்கள். அந்த வாத்தியக் கலைஞரே அவர் இல்லை. அதேபோல் இசைக்கல்லூரியில் இப்போதுதான் படிப்பை முடித்திருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் விருது வழங்கி யிருக்கிறார்கள்'' என்றார்.


விருது சர்ச்சை குறித்து தங்கவேல் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டபோது, “மதுரையைப் பொறுத்த வரை கலைஞர்களுக்கான சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு சங்கமும் போட்டி பொறாமையுடன் இருப்பதால், எப்போது விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் இதே பிரச்சனை தான். என்னைப் பொறுத்தவரை சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறேன்''’என்கிறார். மதுரையில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களும் "கலைமாமணி' விருது குறித்துக் குமுறுகிறார்கள். சர்ச்சைகளில் சிக்கி வழக்குகளை எதிர்கொள்ளும் பிரகாஷ் எம்.சுவாமி, நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு முதல்வர் விருது வழங்கியிருப்பது குறித்து கண்டனக் குரல்கள் பதிவாகின்றன. "கலைமாமணி' விருதுபோல் மற்றொரு விருது சர்ச்சையும் அதே மதுரையிலிருந்து கிளம்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனமான "பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' சார்பில், கைவினைக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுவது வழக்கம். விருது பெறுவோர், தங்களின் படைப்பை செய்து காட்டும் வீடியோ பதிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.

இந்த விதியை எப்படி மிதிக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லத் தொடங்கினார் பஞ்சலோக சிலை வடிவமைப்பாளரான மோகன். 1979-லிருந்து பித்தளை கலைப்பொருட்கள் செய்து வருகிறேன். கேரளாவில் 2018-ல் நடந்த பன்னாட்டுக் கைவினைக் கலைஞர்கள் திருவிழாவில், சிறந்த கலைஞர்கள் நான்கு பேரில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்தது கேரள அரசு. தமிழக அரசின் விருதுக் காக எட்டு ஆண்டுகள் முயற் சித்தும் எனக்கு கிடைக்க வில்லை. இதைவிடக் கொடுமை என்னன்னா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கும் கைவினைப் பொருட்கள் விற்கும் ஒரு கடையில் நான் வடிவமைத்த சிலைகளை வாங்கி, விருதுக் கமிட்டிக்கு அனுப்பி விருதும் வாங்கியிருக்கிறார் கிருஷ்ணன் என்பவர்''’என பொருமினார். இன்னும் எவ்வளவு பொருமல்கள் வெளியில் தெரியாமல் இருக்கின்றனவோ?
 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.