Skip to main content

கலைஞர் சிலை சிலரைப் படுத்தும்பாடு!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவுக்கும், தந்தை பெரியாருக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அளவுக்கு வேறு யாருக்கும் சிலைகள் இல்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக காமராஜருக்கும், அம்பேத்கருக்கும் சிலைகள் உள்ளன.

 

 

kk

 

 

தந்தை பெரியார் நவீன தமிழகத்தை கனவு கண்டார் என்றால், அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியை அமைப்பதில் வெற்றி கண்டார். மிகக் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், அவருக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர், பெரியாரின் கனவுகளை நிறைவேற்றுவதில் பெரிய அளவில் வெற்றிபெற்றார்.

 

 

அண்ணாவுக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டி பெற்ற தலைவர்கள் வரிசையில் இருந்தார்கள். ஆனால், அண்ணாவுக்கு அடுத்தபடியாக தந்தை பெரியாரின் அன்பைப் பெற்றவர் கலைஞர்தான் என்பதை 1968ல் அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சமயத்திலேயே வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

 

ஆம், 1968 ஜனவரியில் சென்னையில் அண்ணா தலைமையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நினைவாகத்தான், மெரினாவுக்கு இன்று அழகு சேர்த்துக் கொண்டிருக்கிற 10 சிலைகள் நிறுவப்பட்டன. அந்த மாநாடு முடிந்த கையோடு, முதல்வர் அண்ணாவுக்கு அன்றைக்கு மவுண்ட்ரோடு என்று அழைக்கப்பட்ட அண்ணாசாலையில் சிலை திறக்கப்பட்டது.

 

 

அண்ணாவுக்கு சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞருக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்து, அனுமதியும் பெற்றார். ஆனால், பெரியாரின் இந்த முயற்சியை அன்றைக்கு பிராமணர்கள் பலர் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணாவுக்கு சிலை வைப்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள், கலைஞருக்கு சிலை வைக்கும் முயற்சியை விமர்சித்தார்கள் என்றால், அவர்கள் அன்றைக்கே கலைஞரை எந்த அளவுக்கு கற்பனை செய்திருக்கிறார்கள் என்பது புரியும்.

 

 

கலைஞரை கடுமையான வார்த்தைகளால் பிராமணர்கள் சிலர் அர்ச்சித்தற்கு காரணம் என்னவாக இருந்திருக்க முடியும்? அவரே எழுதியதுபோல அவர் பிறந்த சாதியைத் தவிர வேறு எதுவாக இருந்திருக்க முடியும். ஒருகட்டத்தில் பெரியாரின் சிலை வைக்கும் முயற்சி தேவையில்லாதது என்றும், சிலை வைக்கும் அளவுக்கு தான் தகுதி பெற்றவன் அல்ல என்றும் கலைஞரே மறுத்து அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

kk

 

 

ஆனால், அந்த அறிக்கையைப் பெரியார் பொருட்படுத்தவில்லை. தனது முயற்சி குறித்து விடுதலை இதழில் தலையங்கமே எழுதினார். 1968 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதியிட்ட விடுதலை இதழில் கலைஞரின் அறிக்கையைக் குறிப்பிட்டு, அவர் மறுத்தாலும், சிலை வைப்புக் கமிட்டியார் தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவுடன் அவருக்கு சிலை வைப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.

 

 

தந்தை பெரியாரின் ஆசை அண்ணா உயிருடன் இருக்கும்போதே வெளிப்பட்டது ஆகும். அதன்பிறகு, திமுகவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு, கலைஞர் முதல்வரானார். தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி மறைந்தார். அவருக்கு அரசு மரியாதை அளிப்பதற்காக தனது ஆட்சியையே பறிகொடுக்கவும் தயாராய் இருந்தார் கலைஞர். அந்த அளவுக்கு பெரியாரின் சீடராய் கலைஞர் இருந்திருக்கிறார் என்பதை அறியமுடியும். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, மணியம்மை, கி.வீரமணி ஆகியோர் தலைமையில் கலைஞருக்கு சிலை அமைக்கும் முயற்சி மீண்டும் உயிர்ப்பெற்று, அண்ணாசாலையில் 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி மாபெரும் விழா எடுத்து, பேராசிரியர் தலைமையில், மணியம்மை முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் கலைஞர் சிலையை திறந்துவைத்தார்.

 

 

kk

 

 

அந்தச் சிலை பலருடைய வயிற்றெரிச்சலுக்கு தொடர்ந்து ஆளானது. கலைஞர் என்ற தலைவரின் வளர்ச்சி ஒரு பிரிவினரை தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தது. 1987ல் எம்ஜிஆர் இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை பயன்படுத்தி, கலைஞர் சிலையை உடைத்தெறிந்தனர். அந்தப் படம் ஏடுகளில் வந்தபோதுகூட எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர்,
 

 

"உடன் பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை-

நெஞ்சிலே தான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!'' என்று கவிதை எழுதினார். அதன்பிறகு அதே இடத்தில் சிலை வைக்க திராவிடர் கழகம் முயற்சித்தபோது கலைஞர் அதை நிராகரித்துவிட்டார்.

 

 

kk

 

 

கலைஞர் தனது ஆட்சியில் எத்தனையோ கலைநயமிக்க சிலைகளையும், நினைவுச் சின்னங்களையும், கட்டிடங்களையும் கட்டியிருக்கிறார். திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்திலேதான் திமுகவின் தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயம் என்ற மாபெரும் கட்டிடத்தை தொண்டர்களிடம் பெற்ற நிதியில் கட்டி எழுப்பினார். இதோ, அந்த அலுவலகத்தின் அருகிலே, தனது தலைவர் அண்ணாவின் அருகிலே அவரே சிலையாக மாறியிருக்கிறார். 

 

 

 

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.