ர

எழுத்தாளர், பேச்சாளர், படைப்பாளி,வசனகர்த்தா, பாடலாசிரியர், அரசியல்கட்சிதலைவர் என்று பல முகத்தினை உடைய திமுக தலைவர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். கடந்த சிலஆண்டுகளாகத்தமிழகம் அவரின்குரலைக்கேட்கவில்லை. அவரின் திரை வசனத்தை முகரவில்லை, இன்னும் சொல்லப்போனால் அவரின் கரகர குரலில் தொண்டர்களின் மூச்சோடு கலந்துள்ள 'உடன்பிறப்புகளே' என்றவார்த்தையைக்கூடக் கேட்க முடியவில்லை. ஆனாலும், அவரின் திட்டங்களால், தத்துவங்களால் அவர் வாழ்ந்துகொண்டே இருக்கிறார் அனுதினமும்.

Advertisment

தோல்வியைத்தூர எறிந்தவன்

Advertisment

1957ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு முதன் முதலாககுளித்தலையில் இருந்துதேர்ந்தெடுக்கப்படுகின்றார் அவர். அப்பொழுது அவருக்கு வயது 33. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 95. அப்பொழுது அவர் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.கிட்டதட்ட62 ஆண்டுகளாக அவர் சட்டப்பேரவை உறுப்பினர். தோல்வியே சந்திக்காத பேரவை உறுப்பினர் ஒருவர் 60 ஆண்டுகாலமாகஇந்தியாவில் இருந்தார்என்றால், அவர் இவர் ஒருவர் மட்டுமே.

தமிழகத்தின் பொற்காலஆட்சியைக்கொடுத்த காமராஜர் 1967 ஆம் ஆண்டு தேர்தலில்தோல்வியைத்தழுவியுள்ளார். தமிழ்த்தாயின் தலைமகன் என்று சொல்லப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களும் 1962 ஆண்டு காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். ஜெயலலிதாவும் 1996ஆம் ஆண்டுபர்கூரில்தோல்வி அடைந்துள்ளார். ஆனால் கடந்த 60ஆண்டுகாலமாகத்தேர்தலில் பங்கெடுத்த கலைஞர், தோல்வி அடைந்ததில்லை. அவர் தலைமையிலான திமுக படுதோல்வி அடைந்த 1991ஆம் ஆண்டு தேர்தலிலேயே கூட அவர் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

நகைச்சுவையின் நாயகன்

கலைஞரின் நகைச்சுவை என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று. ஒருமுறை சட்டமன்றத்தில் ஒரு காரசார விவாதம் நடைபெற்று வந்தது. ஒருஎதிர்க்கட்சிஉறுப்பினர், "கும்பகோணம் கோயில் குளத்தில் முதலைஉள்ளதாகக்கூறப்படுகின்றது. அவ்வாறு ஏன் செய்தீர்கள்? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை வைத்தார். உடனடியாக கலைஞர் எழுந்தார். அவர் முதல்வராக இருந்த சமயம் அது. மாண்புமிகு உறுப்பினர் முதலையை ஏன் போட்டீர்கள் என்று கேட்கின்றார். அவருக்கு நான் பதில்சொல்லக்கடமைப்பட்டுள்ளேன். அரசாங்கம் முதலைத்தான் போடமுடியுமே தவிரமுதலையைப்போட முடியாது என்று கூறினார். கேள்வி கேட்டஎதிர்க்கட்சிஉறுப்பினரும் அவரின்பதிலைக்கேட்டு அவர் சிரித்து விட்டார்.

ஒருமுறை கலைஞர் 'இந்து' என்றால் திருடன் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டுள்ளதாகபொதுக்கூட்டம்ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.சங்பரிவார்அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்களும் நடந்தன. அப்பொழுது வடமாநிலத்தைச்சேர்ந்த சாமியார் ஒருவர் கலைஞரின்தலையைச்சீவி விடுவேன் என்று கூறினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் "உங்களின்தலையைச்சீவிவிடுவதாகசாமியார் ஒருவர் கூறியுள்ளாரே அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு யாரும் எதிர்பாராத ஒரு பதில் கலைஞரிடம் இருந்து உடனடியாக வந்தது, "நானே என்தலையைச்சீவி 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றது.அவருக்குதான்ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போமே" என்று. இதைவிட ஒரு சுவாரசிய சம்பவம் நடிகர் விஜய் படத்தின் வெற்றி விழாவில் நடைபெற்றது. 'லவ்டுடே' படத்தின் வெற்றி விழாவில் பங்கெடுத்த அவர், வெற்றி விழாவில் பேசும் போது, "தம்பி விஜய்க்குலவ்டுடே, எனக்குலவ்எஸ்டர்டே" என்று கூறினார். அவரின் இந்தப்பேச்சைக்கேட்ட விஜய் உள்ளிட்டசினிமாபிரபலங்கள்சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியாமல் சிரித்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது.

அடுக்கு மொழியின் காதலன்

கலைஞரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்ததில் ஒரு கவிதைக்கு முக்கிய பங்கு உண்டு. அண்ணா அவர்கள் மறைவையொட்டி அவர் எழுதிய அந்த கவிதைதான் அது.

மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு-அதில்

முத்தமிழ் மணமுண்டு

மூவேந்தர்,முக்கொடி,முக்கனி-என

மும்முரசுஆர்த்தவர்தமிழர்

அவர் வாழ்ந்த -தமிழ்

வாழ்வுக்கு மூன்றெழுத்து-அந்த

வாழ்வுக்கு அடிப்படையாம்

அன்புக்கு மூன்றெழுத்து-அந்த

அன்புக்குதுணைநிற்கும்

அறிவுக்கு மூன்றெழுத்து

அறிவார்ந்தோர்இடையில்எழும்

காதலுக்கு மூன்றெழுத்து

காதலர்கள் போற்றி நின்ற கடும்

வீரமோ மூன்றெழுத்து

வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து

களம் சென்று காண்கின்ற

வெற்றிக்கு மூன்றெழுத்து-வெற்றிக்கு

ஊக்குவின்றஅமைதிமிகு

அண்ணா மூன்றெழுத்து என்று அந்த கவிதை முடியும்.

அதில், ஒருவரியில் "நீ கண்மூடி சிந்திக்கும்பேரழகைப்பார்த்துள்ளேன், இன்று மண்மூடிக் கொண்டுஉன்னைப்பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமை" என்று எழுதியிருப்பார் அவர். தமிழ் சிலருக்கு வசமாகலாம். ஆனால் தமிழ், வாழ்க்கை ஆனது கலைஞருக்கு மட்டுமே.

தமிழகத்தின்முதல்வராககலைஞர்

தமிழைத்தவிர எந்த பின்புலமும் இல்லாத அவர் தமிழகத்தின் முதல்வராக 19ஆண்டுகாலம்இருந்துள்ளார். அதாவது தமிழகத்தின் நீண்டகால முதல்வர் என்றபெருமைக்குசொந்தக்காரர். இது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் நடந்தது அல்ல, அல்லது கூவத்தூர் பாணியில் வந்ததும் அல்ல. சோம்பலுக்கு விடுமுறை தந்துவிட்டு, சூரியனுக்கு முன் துயிலெழுந்த அவரது உழைப்பால்கிடைத்ததன்றேதவறி, வேறொன்றும் அல்ல. 45 வயதிலேயே தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர். 80 வயதுக்கும் மேலாக முதல்வர்பதவியில் இருந்தவர். 1971ஆம் ஆண்டுதமிழகசட்டமன்றத்தில் 184 உறுப்பினர்களோடு மிகப் பெரியமெஜாரிட்டியில்பதவிக்கு வந்தவர். 20 ஆண்டுகள்கழித்துதான் ஒருவன் மட்டுமே வெற்றி பெற்ற போதும் தோல்வியில் கலங்காதவர். வெற்றியையும், தோல்வியையும் பெரிய வித்தியாசத்தோடு பார்க்காத பண்பாளன் என்றால் அது மிகையல்ல.பலசாதிகளாகப்பிரிந்திருந்ததமிழனைச்சமத்துவபுரத்தில் சமமாக ஆக்கியவர். சாதி மறுப்புதிருமணத்துக்காககடைசி வரையில் போராடி வெற்றி பெற்றவர். பெண்குழந்தைகளுக்குச்சொத்தில் சம உரிமை வழங்கிய தாய் உள்ளம் கொண்டவர். இன்னும் சொல்லலாம்.

தலைவர்களின் பார்வையில் கலைஞர்

கலைஞர் கருணாநிதி, இந்த ஒற்றை பெயர்தான் கடந்த 60ஆண்டுகாலத்தமிழ் பத்திரிகை உலகின் தலைப்பு செய்தி என்று ஒருமுறை கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்திருப்பார். அது வெறும்வாய்சொல்லல்ல. 1996 ஆண்டு தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், பிரதமர் பதவிக்குயாரைக்கொண்டு வரலாம் என்ற பேச்சு வட மாநில தலைவர்கள் மத்தியில் எழுந்தது. உடனே அவர்கள் அனைவரும் சொன்ன ஒரு பெயர் கலைஞருடையது. ஆனால் விஷயத்தைகேள்விப்பட்டஅவர் 'என் உயரம்எனக்குத்தெரியும்' என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தார். அதன் பிறகேகர்நாடகாவைச்சேர்ந்த தேவகவுடா பிரதமர் ஆனார் என்பது வரலாறு. ஒருமுறை ஜெயலலிதாவிடம் 'கலைஞரிடம் பிடித்தது எது?' என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.அதற்குப்பதில் அளித்த அவர், அவரின் தமிழ் என்றும், கூடுதலாக அவரின் குடும்பப் பாசமும் கூட என்று கூறி ஒரே கேள்வியில் ரோஜா பூவையும் ,அணுகுண்டையையும்சேர்ந்து வீசினார் ஜெயலலிதா. இந்த பதில் கூட கருணாநிதியின் வசனத்தின் தாக்கத்தால் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்குமோ என்று கூட அப்பொழுது பத்திரிகைகள் எழுதின.

அணுகுண்டைவிடவும் ஆபத்தானது கலைஞரின் கோபம்

கலைஞரை அனைவரும்சிரித்துப்பார்த்திருப்போம், சிலர் அழுதும்பார்த்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர்கோபப்பட்டுப்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் 1957 ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்ம வீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்ரமணியன் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடையகருத்தைத்தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒருபகுதியில் இருந்துஇதனைகலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்ரமணியன்,ஆசைத்தம்பியிடம்உங்களுக்குச்சிறுநீர் வந்தால்தாரளமாகவெளியே செல்லாம்,அதற்காகச்சபாநாயகரிடம் அனுமதிபெறத்தேவையில்லை என்று கூறி அமர்ந்தார்.

அமைச்சரின் இந்தபதிலைக்கேட்டஆசைத்தம்பிசெய்வதறியாது திகைத்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுதுதான் அந்த குரல் வெளிப்பட்டது, வெளிப்படுத்தியவர் கலைஞர். அமைச்சரின் பேச்சால் கடும் கோபத்துக்கு உள்ளான அவர்,சபாநாயகரைப்பார்த்துக்கூறியதுதான்உச்சகட்டஅணுகுண்டுதாக்குதல். "மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,ஆசைத்தம்பிக்குசிறுநீர் வந்தால், அமைச்சர் சி.சுப்பரமணியன்ஏன் வாய் திறக்கின்றார்" என்று கூறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார் கலைஞர். அவரின் இடிமுழக்கக்கருத்தைக்கேட்ட சி.சுப்ரமணியன் அவமானத்தால் கூனிக்குறுகினார். கலைஞரின்பேச்சைக்கேட்ட காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ்எம்.எல்.ஏக்கள்ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.