Skip to main content

EPS ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள்..! விட்டுத்தர மாட்டார்கள்..! -கே.சி.பழனிசாமி

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
sss

 

 

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக கட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை. இன்று நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

இதனிடையே அதிமுகவினரிடம் ஜூம் செயலி மூலம் பேசி வரும் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நம்மிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

 

''பொதுவாக தேர்தலுக்கு முன்பு பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடத்துவார்கள். டிசம்பரில் பொதுக்குழு நடத்தியாக வேண்டும். பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கு முன்பு முதல் அமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்துவிடுவார்கள். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் அவரது ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். எக்காரணத்தைக்கொண்டும் அவர்கள் அதனை விட்டுத்தர மாட்டார்கள். உறுதியாக இருக்கிறார்கள். 

 

KCPalaniswamy

 

அடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் விஷயம். அதிமுக - பாஜக கூட்டணி இல்லையென்றால் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் ஊழல் வழக்குகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் சூழல் வந்தால் அன்றைக்கு இப்போதுள்ள அமைச்சர்களுக்கு பாதுகாப்புக்கு பாஜக வேண்டும் என்பதால் முழிக்கிறார்கள். யாரும் உத்தமர்கள் கிடையாது. எல்லோரிடமும் கரை இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக தொண்டர்களுக்கு விருப்பம் இல்லை. அதிமுக தொண்டர்களிடையே எதிர்ப்பு இருக்கிறது. 

 

தேர்தலுக்கு முன்பாக சசிகலா வெளியே வந்துவிடுவார். அப்போது அதிமுகவில் எந்த சலசலப்பும் வந்துவிடக்கூடாது என்பதால், கட்சியை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று விவாதிப்பார்கள். 

 

இப்போதுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புகிறார்கள். இதனை கட்சியினர் விரும்புவார்களா? அப்படியே போட்டியிட்டாலும் இதில் பாதி பேர் வெற்றி பெற முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். தேர்தல் செலவு பற்றியும் பேசுவார்கள். இப்போதுள்ள அமைச்சர்களில் ஐந்து அமைச்சர்கள்தான் தேர்தல் செலவை சமாளிப்பார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நிர்வாகிகள் எதிர்பார்ப்பார்கள். 

 

ஆனால், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை. அது அமைக்கப்பட வேண்டும். முறைப்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஒற்றை தலைமையில் அதிமுகவை கொண்டுவர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். ஆனால் இதுபோன்ற தொண்டர்களின் எண்ணங்களை இப்போதுள்ள தலைமைகள் கண்டுகொள்ளவில்லை'' என்றார்.  

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.