Skip to main content

"இந்தத் தீர்ப்பு எடப்பாடிக்கு மிகப்பெரிய பின்னடைவு; ஆனால் உச்சநீதிமன்றத்தில் வர இருக்கின்ற விசாரணையில் இதையும்..." - எஸ்.பி. லட்சுமணன்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

பரக


கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி நிகழ்ச்சி பசும்பொன்னில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் அங்கே சென்று தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார்கள். திமுகவில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சென்ற நிலையில் அதிமுகவில் பன்னீர்செல்வம் சென்று மரியாதை செய்தார். எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார் தலைமையில் ஒரு அணியும், பன்னீர் தரப்புக்கு ஆதரவாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அங்குச் சென்று மரியாதை செலுத்தினர். 

 

இது ஒருபுறம் இருக்க வருடந்தோறும் அதிமுக சார்பாகத் தேவர் சிலைக்குச் சாத்த தங்கத்திலான கவசத்தைச் சாத்தி மரியாதை செய்வார்கள். இந்த வருடம் யார் அதிமுக என்ற கோஷ்டி சண்டை எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தங்கக் கவசத்தை எங்களிடம் தர வேண்டும் என்று கூறி எடப்பாடி தரப்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் யார் அதிமுக என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் இருவரிடமும் வழங்காமல் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கவசத்தை வழங்குமாறு உத்தரவிட்டது. இது எடப்பாடி தரப்புக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் இதுதொடர்பாக பத்திரிகையாளர் லட்சுமணனிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம்.

 

நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பில் இரண்டு விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. அதில் அதிமுக உட்கட்சி விவரங்களையும் நீதிமன்றம் பேசியுள்ளது. யார் கையில் கொடுக்க வேண்டும், யார் கையில் கொடுக்கக் கூடாது, ஏன் கொடுக்கக் கூடாது என்று ஒரு தரப்பு கூறுகிறார்கள் என்று சகலத்தையும் நீதிமன்றம் அலசியுள்ளது. அதிமுக நிர்வாக ரீதியாக எடப்பாடி வசம் இருக்கிறது, இதைப் பொதுக்குழு நடைபெறுவதற்கு முன்பே கூட நான் கூறினேன். இதை மையப்படுத்தியே இரண்டு நீதிமன்ற தீர்ப்புகளைக் கூட எடப்பாடி வாங்கிவிட்டார். வங்கிக் கணக்குகளைப் பராமரிக்க அவர் தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. அதைப்போலப் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பையும் அவர்கள் வாங்கி விட்டார்கள். அப்படி இருக்கையில், நீதிமன்றம் உங்கள் பொருளாளரை அதிகாரப்பூர்வ நிர்வாகியாக ஏன் நினைக்கவில்லை. 

 

நீங்கள் தான் அதிமுக என்று நீதிமன்றம் கருதியிருந்தால் உங்களிடம் கவசத்தைத் தர உத்தரவிட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் அவர்கள் செய்யவில்லை, ஏனென்றால் இந்த வழக்கு தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அதையும் தாண்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முதல் கட்ட விசாரணை நடைபெற்ற போதே இந்த வழக்கை நாங்கள் முழுமையாக விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறி ஒரு புள்ளி வைத்துவிட்டார்கள். அப்படியென்றால் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு பொதுக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் விசாரிப்போம் என்று அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த விசாரணையை நவம்பரில் ஆரம்பிக்கிறோம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

 

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்தை உயர்நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். இறுதித் தீர்ப்பு வராத ஒரு நிலையில், அதில் சிவில் கோர்ட் தான் இறுதித் தீர்ப்பு கொடுக்கும் என்பதை, எடப்பாடி பழனிசாமிக்கு இதற்கு முன்பு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது. இதை எல்லாவற்றையும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆராய்ந்துள்ளார். அதனால் பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகளிடம் கவசத்தை வழங்க உத்தரவிட்டார். பன்னீர்செல்வம் கூட அவர் கவசத்தை எங்கள் தரப்புக்கு வேண்டும் என்று கேட்கவில்லை, அவருக்குக் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையைத்தான் ஓபிஎஸ் பிரதானமாக வைத்தார். என்னைப் பொறுத்த வரையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு. 

 

 

Next Story

“அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” - ஓ.பி.எஸ் உறுதி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 OPS assured We will compete on that Double leaf symbol

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பா.ஜ.க கூட்டணியில் த.மா.க, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கடந்த 10ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷண் ரெட்டி ஆகியோர் சென்னை வந்த போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று (12-03-24) நள்ளிரவு மீண்டும் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷண் ரெட்டி ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பையடுத்து. ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்ற தேர்தல் குறித்த பா.ஜ.க.வுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மிக சுமுகமாக முடிந்தது. பா.ஜ.க தலைமையில், அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதால் மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் பெறுவோம். அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” என்று பேசினார். 

Next Story

“பா.ஜ.க கூட்டணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் வெளியே வந்திருக்கிறார்” - ஓ.பி.எஸ்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
OPS says Only Edappadi Palaniswami has come out of the BJP alliance

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியில் அதிமுக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “இரட்டை இலை சின்னத்தை யாரும் முடக்க முடியாது. நிச்சயம் எங்களுக்கு தான் சின்னம் கிடைக்கும். வரும் தேர்தலில் அந்த சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெறுவோம். ஜெயக்குமார் பதவி வெறி பிடித்தவர். அதனால், அவரது கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையில்லை. பா.ஜ.க கூட்டணியில் அதிமுக தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மட்டும் பிரிந்து சென்றுள்ளார். தேர்தலுக்காக பல்வேறு கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விரைவில் ஆலோசிக்கப்பட்டு கூட்டணி அறிவிக்கப்படும்” என்று கூறினார்.