Skip to main content

தமிழக வளங்களைத் திருடி, வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பா.ஜ.க.தான்... எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு... 

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

bjp

 

தமிழக பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில பாரத தலைவர் ஜெ.பி.நட்டா சிறப்புரையாற்றினார். அப்போது, ''தேசிய மற்றும் தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க தடையாக இருக்கிறது. நாட்டின் நலனுக்காக உழைக்காதவர்களுக்கு, புகலிடமாக தி.மு.க உள்ளது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டார் ஜெ.பி.நட்டா.

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையத்தளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்ட தி.மு.க.வின் மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, ''தமிழக நலனுக்கும் வளர்ச்சிக்கும், நாட்டின்  நலனுக்கும் வளர்ச்சிக்கும் எதிராக தி.மு.க இருப்பதாக ஜெ.பி. நட்டா சொல்கிறார், அதே ஜெ.பி.நட்டா பொருளாதாரப் பட்டியலை எடுத்து, நாட்டின் வளர்ந்த மாநிலம் எது என்று அவர் பார்க்கட்டும். எந்த ஆட்சி இருந்த காலத்தில் தமிழ்நாடு வளர்ந்தது என்பதையும் அவர் பார்க்கட்டும். இதனைப் பார்த்தால் தமிழக வளர்ச்சிக்குக் காரணம் தி.மு.க என அவருக்குத் தெரிய வரும். 

 

dmk

 

இன்றைக்கு மிக அதிக அளவில் ஜி.எஸ்.டி கொடுக்கக்கூடிய மாநிலமாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடுதான் உள்ளது. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி வருவாய் அதிகம் கிடைக்கக்கூடிய மாநிலமும் தமிழகம்தான். 

 

இந்தியாவின் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் இருந்தால்கூட, மும்பை வணிக தலைநகரம் என்பதால் அந்தத் தொழிற்சாலைகளின் தலைமையகம் மும்பையில் இருக்கும். உதாரணமாக ரிலையன்ஸ் கம்பெனிகள் குஜராத்தில் இருக்கும், ஆனால் அவர்களுடைய தலைமையகம் மும்பையில் இருக்கும். அதனால் அவர்கள் காட்டும் பொருளாதார கணக்குகள் மகாராஷ்டிராவில் வரும். 

 

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்படியில்லை. இங்கேயே தொழிற்சாலை, இங்கேயே அந்த நிறுவனத்தின் அலுவலகமும் இருக்கும். அப்படிப் பார்த்தால் தமிழகம் இரண்டாவது இடத்தில் அல்ல, முதலிடத்தில்தான் உள்ளது. இந்த ஜி.எஸ்.டி. காசை மத்திய பா.ஜ.க அரசு வாங்கிக்கொண்டு திரும்பத் தருவதில்லை. நியாயமாக என்ன சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க அரசுதான். பா.ஜ.க.வை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவதுதான் சரியான வாதமாக இருக்கும். 

 

தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. வரவேண்டியது மட்டும் கிட்டதட்ட 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி உள்ளது. அது தமிழகத்தின் பங்கு. தமிழகத்தில் இருந்து வசூல் செய்ததில் இருந்து தர வேண்டிய பங்கு. பிச்சை கிடையாது. கேட்டால் கரோனாவில் செலவாகிவிட்டது என்கிறார்கள். 

 

http://onelink.to/nknapp

 

தமிழ்நாட்டின் வளங்களைத் திருட வந்தது பா.ஜ.க. தமிழ்நாட்டின் வளங்களைத் திருடி வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பா.ஜ.க.தான். தி.மு.க தமிழ்நாட்டையும் வளர்த்திருக்கிறது. இங்குள்ள வரி காசுகளைக் கொடுத்து இந்தியாவையும் வளர்த்திருக்கிறது. குறிப்பாக வட இந்தியா இயங்கிக் கொண்டிருப்பதே தமிழகத்தின் வரி காசில்தான் என்கிறார் உறுதியாக. 


 


 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.