Skip to main content

“கொடநாடு வழக்கு; ஓபிஎஸ்க்கு ஒரே ஒரு நோக்கம் தான்” -  'தமிழா தமிழா' பாண்டியன்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Journalist Pandian Interview

 

கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் மேற்கொண்ட போராட்டத்தின் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விவரிக்கிறார்.

 

கொடநாடு வழக்கில் முதல் குற்றவாளியே பன்னீர்செல்வம் தான். இது நடந்தது அண்ணா திமுக ஆட்சியில். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு நாட்கள் பன்னீர்செல்வத்துக்கும் தினகரனுக்கும் கொடநாடு வழக்கு குறித்து தெரியாதா? இதுதான் மக்களின் கேள்வி. 2016 தேர்தலில் செலவு செய்யச் சொல்லி பன்னீர்செல்வம், பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொடநாட்டில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களுடைய சொத்துக்கள் அடங்கிய டாக்குமென்ட்கள் அனைத்தும் ஜெயலலிதா, சசிகலாவால் கைப்பற்றப்பட்டன. 

 

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சசிகலா சிறை சென்றார். பன்னீர்செல்வத்தையும் மற்ற மூத்த அமைச்சர்களையும் தன் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் எடப்பாடியின் கார் ஓட்டுநர் கனகராஜ் மூலம் கொடநாட்டில் இருந்த டாக்குமென்ட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 2021 வரை துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏன் வாய் திறக்கவில்லை? மோடி இப்போது பன்னீர்செல்வத்தை கழற்றி விட்டுவிட்டார். எடப்பாடியை பக்கத்தில் சேர்த்துக்கொண்டார். இதனால் இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

 

அதிமுக தொண்டர்களுக்கு கோவில் போன்ற தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவருக்கு இப்போது அரசியல் எதிர்காலம் முடிந்ததால் கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளார். அதிமுகவின் மீது இப்போது பன்னீர்செல்வத்துக்கு எந்த பிடிப்பும் இல்லை. அவரோடு இருந்த அனைவரும் இப்போது எடப்பாடியிடம் சென்றுவிட்டனர். அதனால் அவர் எடப்பாடியை திமுகவிடம் காட்டிக் கொடுப்பதற்கு தயாராகிவிட்டார். இதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

இவர்களிடம் பெரிய அளவில் வாக்கு வங்கியும் இல்லை. இரட்டை இலை எங்கே இருக்கிறதோ அங்கே தான் அண்ணா திமுகவின் வாக்கு வாங்கி இருக்கும். தினகரனிடமும் பன்னீர்செல்வத்திடமும் முன்பு இருந்த தொண்டர்கள் இப்போது இல்லை. இருக்கும் தொண்டர்களையும் அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாது. எடப்பாடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தொண்டர்கள், பாஜக கூட்டணி, பணம் என்று அனைத்தும் இருக்கிறது. எனவே தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தால் எடப்பாடியுடன் மோதி வெற்றி பெற முடியாது. அண்ணா திமுகவினர் எங்கு அதிகாரம் இருக்கிறதோ அங்கு தான் இருப்பார்கள்.

 

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.