Skip to main content

"சிறையை காட்டி அஜித் பவாரின் கதையை முடித்துள்ளார்கள்.." - மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அதிரடி!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மராட்டிய தேர்தல் முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி அனைத்து கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் தனித்தே அபாரமான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக 105 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதன் கூட்டணியில் இருந்த சிவசேனா முதல்வர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்கவே, ஆட்சி அமைப்பதில் இருந்து பாஜக பின்வாங்கியது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், நடுஇரவில் என்சிபி-யின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அரசியல் அரங்கில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் பற்றி பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

sf




மராட்டியத்தில் என்.சி.பி-காங்கிரஸ்-சிவசேனா கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத வகையில், என்.சி.பி உடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிராக தற்போது இந்த கூட்டணியை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். எந்த அடிப்படையில் அவர் இந்த முடிவை எடுத்தார் என்ற கேள்வி தற்போது பெரிய அளவில் எழுந்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி இரண்டு வாரத்துக்கு மேல், பாஜகவுக்கு ஆட்சி அமைப்பதற்கு அவகாசத்தை ஆளுநர் வழங்கிய போது, பாஜக என்ன சொன்னது, எங்களால் போதிய பெரும்பான்மை நிரூபிக்க முடியாது என்று சொன்னார்களே?  தற்போது மட்டும் அவர்களால் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். சிவசேனா, என்.சி.பி உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு குறைவான நேரம் கொடுத்துவிட்டு தற்போது நடுஇரவில் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, அவசர கதியில் பதவியேற்புக்கு என்ன அவசியம் வந்தது. இது ஜனநாயகத்துக்கு உகந்ததா? கடந்த தேர்தலில் எதிராக நின்ற என்.சி.பி-யுடன் தற்போது எந்த அடிப்படையில் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டது.

ஊழலின் ஊற்றுக்கண் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய அமித்ஷா, எப்படி நள்ளிரவில் அவர்களுடன் கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்தார். தன்னோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா விலகி கொண்டதை அடுத்து, பாஜக-வை எதிர்த்து அரசியல் செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, என்.சி.பி-யின் தேந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தலைவரை மிரட்டி, இத்தகைய காரியத்தை பாஜக செய்துள்ளது என்றால், இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இது அனைத்தும் முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெற்று உள்ளது. எப்போது அஜித் பவாருடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக செய்தது. இவர்கள் ஜனநாயகத்தை ஏமாற்றியது மட்டுமல்லாது மராட்டிய மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.

நிலையான ஆட்சி அமைவதற்கே நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம் என்று என்சிபி சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகத்தானே இருக்கிறது? 

நிலையான ஆட்சியை தானே 2014ல் பட்னாவிஸ் கொடுத்தார். அப்போது கிட்டதட்ட 153 இடங்களில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றார்கள். தற்போது ஏன் குறைவான இடங்களில் வெற்றி பெற்றார்கள். மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் அவர்கள் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே?  ஆனால், கடந்த தேர்தலை விட காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் தற்போது அதிக தொகுதிகளில் எவ்வாறு வெற்றிபெற்றார்கள். தேர்தலில் மக்கள் வாக்களித்து தான் பாஜகவோ அல்லது மோடியோ வெற்றி பெறுகிறார்கள் என்பது எல்லாம் கற்பனை. இது ஈவிஎம் காலம். சரத் பவாரே இதை தேர்தலின் போது நேரடியாக சொன்னார். வாக்குப்பெட்டி இருக்கும் இடங்களை சுற்றிலும் இணையதள சேவையை முடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பட்னாவிஸ் ஆட்சி அங்கே ஒழுங்காக இருந்தது என்றால், ஏன் இத்தனை விவசாயிகள் உயிரிழக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பலபேர் உயிரிழந்துள்ளார்கள்.

இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது. பாஜக அரசு தான் அதற்கு முழுமுதல் காரணம். அப்புறம் என்ன நிலையான அரசு, நிலையில்லாத அரசு என்ற பேச்சு ஏன் எழுகிறது. இவர்கள் தான் எதுவுமே செய்வதில்லையே?  மோடி கூடத்தான் ஆறாவது ஆண்டாக பிரதமராக இருக்கிறார். என்ன நடந்துவிட்டது, நாட்டு பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதா? மக்கள் எல்லாம் மகிழ்ச்சி கடலில் இருக்கிறார்களா? நிலையான அரசு என்பது ஒரு பித்தலாட்டம். இவர்கள் எதை பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள் என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்கள். இதில் யார் பாதிக்கப்பட்டார்கள். அப்பாவி மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். எனவே, அஜித் பவாருக்கு சிறை கதவுகள் திறந்தே இருக்கிறது, அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் சிறைக்கு செல்லலாம் என்று அவரை மிரட்டியே அவரிடம் இருந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை திருட்டு தனமாக வாங்கி பாஜகவினர் ஆட்சி அமைத்துள்ளார்கள்.

 

 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வங்கி மோசடி புகார்; அஜித் பவார் மனைவி மீதான வழக்கு மூடிவைப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Closing the case against Ajitpawar's wife on Complaint of bank fraud

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதன்படி, மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே முதற்கட்டமாக மகாராஷ்டிராவில் 5 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 26ஆம் தேதி அன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாய் நடைபெற்ற வந்த நிலையில், இன்று (24-04-24) மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் எனவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே வேளையில், நடைபெறவிருக்கிற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, பாராமதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இதற்கிடையே, ரூ.25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை குற்றப்பிரிவு காவல்துறை நடத்தி வந்தது. இந்நிலையில், வங்கி மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சுனேத்ரா பவார் மீது எந்தவித ஆதாரம் இல்லை என்றும், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை எனவும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பித்து வழக்கை மூடியுள்ளது.