Skip to main content

இப்போ இட்லி பில் இவ்வளவு, அப்போ ஸ்வீட் பில் அவ்வளவு... - எதற்கு ஆவேசம் அமைச்சரே?

Published on 03/01/2019 | Edited on 04/01/2019

சென்ற வருடத்தின் இறுதி நாளன்று, விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் ஆவேசம் பொங்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை உருவாக்கியிருக்கின்றன. ஆதரித்தும் மறுத்தும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பரபரப்பில் அமைச்சர் சி. வி. சண்முகம் குறிப்பிட்ட ஒரு முக்கிய தகவல் மட்டும் ஏனோ அதற்குரிய அலசலைப் பெறத் தவறிவிட்டது.

 

c.v.shanmugam



78 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும் மரணமுற்ற முன்னாள் முதல்வர்   ஜெயலலிதா 1 கோடியே 17 லட்சம்  ரூபாய்க்கு இட்லி, தோசை, உப்புமா சாப்பிட்டார் என்று செலவுக் கணக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்தான் அந்த செய்தி.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆமோதித்திருக்கிறார். சசிகலா குடும்பத்தினர் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் அறை எடுத்து 5 நட்சத்திர ஓட்டல் போல சொகுசாக இருந்ததால்தான் அவ்வளவு செலவு ஆகியிருக்கிறது என்ற பொருள்பட பேசியிருக்கிறார். உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவேண்டியிருக்கிறது. என்ன ஆனாலும் அமைச்சர்களுக்கு வரலாறு முக்கியமல்லவா!

உச்சநீதிமன்றத்தால் “அக்யூஸ்ட் நம்பர் 1” என்று குறிப்பிடப்பட்ட முன்னாள் முதல்வர் “மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்” மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரது வரவு – செலவுக் கணக்குகளைப் பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், நீளமானதொரு செலவுக் கணக்குப் பட்டியலை பார்வையிட்டுத் தந்திருக்கிறது.

1.07.1991 முதல் 30.04.1996 வரையிலான அந்த செலவுக் கணக்கு, பிற்சேர்க்கை நான்காகத் தரப்பட்டுள்ளது. 570 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 30 பக்கங்களுக்கு நீளும் இந்த பிற்சேர்க்கையில் (பக்: 36 – 66) மொத்தம் 248 செலவினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

jeyalalitha in apollo



இவற்றில் எண் 86-லிருந்து 115 வரை, சற்று தள்ளித் தரப்பட்டுள்ள எண் 128-ம் சேர்த்து, 3 பக்கங்களுக்கு நீளும் மொத்தம் 31 செலவினங்கள் இனிப்புக் கடைகள், ஓட்டல்களுக்கு செய்யப்பட்ட செலவுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 1995 ஆம் ஆண்டு செய்யப்பட்ட எண் 86 செலவைத் தவிர மற்ற அனைத்தும் 1992 ஆம் ஆண்டு, பெரும்பாலும் மே மாதத்தில் செய்யப்பட்ட செலவுகள்.

அந்த செலவினங்கள் பின்வருமாறு:

86) அடையார் கேட் ஹோட்டலுக்கு (19.09.95)           ரூ. 1,75,246.25

87) அகர்வால் ஸ்வீட்ஸ் (23.05.92)                      ரூ. 12,000.00

88) விஜயலட்சுமி ஸ்வீட்ஸ் (29.05.92)                  ரூ. 12,320.00

89) கேஃப்டீரியா (21.05.97) (92) (97 அச்சுப்பிழை)         ரூ. 19,600.00

90) எக்மோர் பவன் (15.05.92)                           ரூ. 19,300.00    

91) அரசன் ஸ்வீட்ஸ் (21.05.92)                         ரூ. 16,225.00

92) வசந்த பவன் (27.05.92)                             ரூ. 11,160.00

93) அர்ச்சனா ஸ்வீட்ஸ் (21.05.92)                      ரூ. 75,675.00

94) ஆரிய பவன் (22.05.92)                             ரூ. 77,580.00

95) வெல்கம் ஓட்டல் (09.05.92)                         ரூ. 22,000.00

96) அசோக் பவன் (03.06.92)                            ரூ. 21,250.00

97) பாம்பே மில்க் (25.5.92)                             ரூ. 7,500.00

98) பாம்பே ஸ்வீட் ஸ்டால் (25.09.92)                   ரூ. 15,000.00

99) சென்ட்ரல் கஃபே (30.05.92)                         ரூ. 48,645.00

100) காஃபி ஹவுஸ் (27.05.92)                          ரூ. 17,450.33

101) தேவநாதன் ஸ்வீட்ஸ் (23.05.97)/(2)                 ரூ. 18,042.00

102) கணபதி விலாஸ் (26.05.92)                        ரூ. 12,996.00

103) ஓட்டல் ஆகாஷ் (03.06.92)                         ரூ. 18,422.00 

104) ஜோதி ஆனந்த பவன் (04.06.92)                    ரூ. 8,840.00

105) லட்சுமி விலாஸ் (04.06.92)                        ரூ. 1,880.00

106) மாஸ்டர் பேக்கரி (27.05.92)                        ரூ. 9,091.50

107) ஜெயராம் ஸ்வீட்ஸ் (01.06.92)                      ரூ. 10,224.00

108) மயில் மார்க் மிட்டாய்க் கடை (01.06.92)           ரூ. 39,000.00

109) நந்தினி (ஸ்வீட்ஸ்?) (15.05.92)                      ரூ. 21,000.00

110) நியூ ரமா கஃபே (26.05.92)                         ரூ. 74,342.25

111) நியூ அகர்வால் (26.05.92)                          ரூ. 14,000.00

112) நியூ பாம்பே ஸ்வீட்ஸ் (21.05.92)                   ரூ. 15,150.00

113) ராமலட்சுமி ஸ்வீட்ஸ் (03.06.92)                   ரூ. 16,637.40

114) ரொலாண்ட் பேக்கரி (18.06.92)                     ரூ. 13,302.90

115) சேலம் கஃபே (21.05.92)                            ரூ. 13,520.00

128) தமிழக இனிப்பகம் (01.06.92)                       ரூ. 27,000.00

மொத்த செலவு 8,64,399 ரூபாய் 63 காசுகள். இதன் இன்றைய மதிப்பு ஏறத்தாழ ரூ. 51,46,722 அதாவது அரை கோடியாகும்.

இந்த 31 செலவினங்களை எத்தனை நாட்களில் எப்படி செலவு செய்திருக்கிறார் என்று பார்த்தால் பிரமிப்பு தட்டிவிடும். 1995 ஆம் ஆண்டு ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ. 1,75,246.25 செலவு செய்திருக்கிறார். 1992 மே மாதத்தில் மட்டும் 10 நாட்களில் ரூ. 5,17,597.08 செலவு செய்திருக்கிறார். 1992 ஜூன் மாதத்தில் 4 நாட்களில் ரூ. 1,56,556.30 – மும், செப்டெம்பர் மாதம் ஒரு நாள் ரூ. 15,000-மும் செலவு செய்திருக்கிறார்.

ஒரு மாதம் ஒரு நாள் (செப்டெம்பர் 1995) அதிகபட்சம் ரூ. 1,75,246.25 மும் ஒரு மாதம் ஒரு நாள் (செப்டெம்பர் 1992) குறைந்தபட்சம் ரூ. 15,000 மும், செலவு செய்திருக்கிறார் ஜெயலலிதா. 10 மடங்கு வித்தியாசம்.

 

jeyalalitha and sasikala



அதாவது இன்றைய மதிப்பில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஏறத்தாழ 10 லட்சமும், குறைந்தபட்சமாக ஏறத்தாழ 1 லட்சமும் செலவு செய்யக்கூடியவர் அவர். இரண்டிற்கும் சராசரியை பார்த்தால்கூட நாளொன்றுக்கு 5 ½ லட்சம் செலவு செய்யக்கூடியவர்.

இது ஒரு நாளுக்கான அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியதன்று. இனிப்புப் பண்டங்களுக்காகவும் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிடுவதற்காகவும் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இனிப்புப் பண்டங்களுக்காகவும் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிடுவதற்காகவும் உடல்நிலை நன்றாக இருந்த நிலையில், நாளொன்றுக்கு சராசரியாக 5 ½ லட்சம். இதன்படி, மாதமொன்றுக்கு ஏறத்தாழ ஒரு கோடியே 65 லட்சம் செலவு செய்யக்கூடியவர். 78 நாட்களுக்கு 4 கோடியே 29 லட்சம் செலவு செய்திருப்பார் என்று கூட்டல் – வகுத்தல் – சராசரிக் கணக்கு சொல்கிறது. உடல்நிலை பாழ்பட்டு, வாழ்விற்காக போராடிக் கொண்டிருந்த 78 நாட்களிலோ 1 கோடியே 17 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பதாகக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. இது அவருடைய சராசரி இனிப்புப் பண்ட, ஓட்டல் உணவு செலவை விட மூன்று மடங்கு குறைவு.

கணக்கு வழக்கு இப்படி இருக்க, சட்டத்துறை அமைச்சர் எதற்காக ஆவேசப்பட்டார் என்றுதான்  வியக்கவேண்டியிருக்கிறது. ஒரு பக்கம் உண்மைகள் வெளிவர வெளிவர, இன்னொரு பக்கம் அமைச்சர்கள் ஆளாளுக்கு வாய் திறக்க, அதிமுகவுக்கு இப்போது எதிமுக தான். 

எப்பக்கம் திரும்பினாலும் முட்டுக்கு கட்டைதான்.

(mathi2006@gmail.com)

 

 

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

பா.ஜ.க.வை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
the former minister CV shanmugam who slammed the BJP

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார். 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குக் கிட்டத்தட்ட ஆயிரம் எஞ்ஜினியர்கள் வேலைக்கு எடுத்தனர். இவர்களில் ஒரு தமிழருக்கு கூட இல்லை. அத்தனை பேரும் வட இந்தியர்கள். ஜிப்மர் மருத்துவமனையில் வேலை கொடுங்கள், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கொடுங்கள். அரசு நிறுவனங்கள் எல்லாம் விற்று விட்டனர். இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே வளர்ந்துள்ளனர். ஒருவர் அம்பானி மற்றொருவர் அதானி. பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் திருவள்ளுவர், தமிழ் என்று பேசுவார். ஆனால் மறுபுறம் இந்தி திணிப்பு.

மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடப் பார்க்கிறது. அமைதியாக உள்ள தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் சமம். வழிபாட்டு உரிமை என்பது என்னுடைய உரிமை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற பா.ஜ.க.வுக்கு உரிமை இல்லை” என்று ஆவேசமாக பேசினார்.