Skip to main content

அவர்கள் நலமாக இருப்பதாகச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், இன்னும் அதே பணியில் தானே இருக்கிறார் - அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் கேள்வி!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

fg

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு அருட்தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் பதிலளித்துள்ளார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

சாத்தான் குளத்தில் காவல்துறையினரால் தந்தை மகன் இருவரும் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நாடு முழுவதும் அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். பிரபலங்கள் முதல் பாமரன் வரை அனைவரும் இந்தக் கொடூரத்துக்கு எதிராகக் குரலெழுப்பி வருகிறார்கள். தற்போது குற்றத்தில் ஈடுபட்டவர்களின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

நீதி கிடைக்கின்ற மாதிரியான ஒரு சூழ்நிலையைத் தற்போது ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த மாதிரி பல வழக்குகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு நபர்களைக் கொலை செய்துவிட்டு, செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கி தராமல் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது என்பது இந்த ஜனநாயகத்தில் இருக்கும் மிகப்பெரிய குறையாகும். இந்தப் பிழையைச் செய்த யாரும் தப்பிவிடக் கூடாது என்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். மாறாக அவர்களைத் தப்ப விடுவதற்குறிய சூழ்நிலைகளை அரசாங்கமும், அதகாரிகளும் ஏற்படுத்தி தரக் கூடாது. 

 

அவர்கள் கைது செய்யப்பட்டு இறந்த பிறகு பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பத்தினர், இதுதொடர்பாக புகார் கொடுத்தும் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை உயர்நீதிமன்றம் கேட்ட பிறகுதான் அவர்கள் மீது மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு இந்த விஷயம் செல்லாமல் இருந்திருந்தால் இந்த வழக்கு அவர்கள் மீது பதிவு செய்யப்படாமல் கூட இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே குற்றம் செய்தவர்களுக்கு இந்த அதிகார வர்க்கம் துணை போவதாகவே சூழ்நிலைகள் உள்ளன.

 

இன்றைக்கு சாட்சியாக சிலர் வருகிறார்கள். இவர்கள் இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு பிறழ் சாட்சியாக மாறி இந்த வழக்கைச் சிதைக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது. முதல்முறையாக காவல்நிலையம் வருவாய்த்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்படுகிறது. அப்படி என்றால் மாவட்ட காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்ற பொருள் தானே பார்பவர்களுக்குக் கொடுக்கும். இந்த வழக்கில் தொடர்புடையவர்களையும், அதனை உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாத அதிகாரிகளையும் சில நாட்கள் காத்திருப்புப் பட்டியலில் வைத்துவிட்டு மீண்டும் நீலகிரிக்கு பணி வழங்கினால் என்ன அர்த்தம்.

 

http://onelink.to/nknapp

 

ஒரு அரசாங்கம் நேர்மையாக நடக்க வேண்டாமா, மக்கள் இதனை எப்படிப் புரிந்து கொள்வார்கள். மக்களைத் தெரிந்தே ஏமாற்றும் முயற்சியாகத்தானே இதனைப் பார்க்க வேண்டும். அதையும் தாண்டி அவர்களுக்கு உடல்நலச் சான்றிதழ் வழங்கி பெண் மருத்துவர் அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது, ஏதாவது பணி சார்பாக மாறுதல் செய்யப்பட்டாரா என்றால் அப்படி அதுவும் செய்யவில்லை. மேலும், அவர்களைச் சிறையில் அனுமதித்த காவலர் அவர்களை எந்த அடிப்படையில் அனுமதித்தார். உடலில் அரைஞாண் கயிற்றைக் கூட அவிழ்த்துவிட்டு உள்ளே அனுப்பும் அவர்கள் அதை எப்படிக் கோட்டை விட்டார்கள். இது அரசு அதிகாரிகள் நடத்திய கூட்டுக் கொலையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது" என்றார்.


 

 

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.