/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jeevitha-300x200.jpg)
நாளை வழக்கம்போலமீண்டும் ஒரு உலகமகளிர் தினம்.எவ்வளவுதான் பெண்களும்,ஆண்களும் சமம் என்று கூறினாலும், நடைமுறையில் இந்த சமூகத்தில் சமநிலைஉள்ளது போல் ஒருவித மாயை மட்டுமேஇருக்கிறதே தவிர, உண்மையில் ஆணாதிக்கம் பெண்களை வன்புணர்வு செய்துகொண்டும், வரதட்சணை கொடுமை செய்துகொண்டும்தான் இருக்கிறது.அதன் வெளிப்பாடாக சென்னையை சேர்ந்த25 வயது ஜீவிதா, தன் கணவன்வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாலும், வேறு பெண்ணுடன் தகாத உறவில்இருந்ததாலும், கடந்த சனிக்கிழமை கடற்கரையிலிருந்துதாம்பரம் சென்றமின்சார ரயிலில் பயணம் செய்த பொழுது அடையாற்றில்குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் 25 வயதான ஜீவிதா. இவருக்கும்ரோஸ் முரளிஎன்ற ஐ.டி. ஊழியருக்கும்கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத்தம்பதிக்கு ஒருவயதில்வைஷாலி என்ற பெண்குழந்தை உள்ளது. திருமணம் நடந்ததிலிருந்தே வரதட்சணை கொடுமை செய்துவந்துள்ளனர்முரளியும் அவரது குடும்பத்தாரும்.ஜீவிதா,தன் குழந்தைக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு அவ்வப்போது தன் வீட்டிலிருந்து பணத்தை வாங்கிக்கொடுத்து சமாளித்து வந்துள்ளார். இந்த நிலையில் முரளி தான் பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை அறிந்த ஜீவிதா அதைப்பற்றி முரளியிடம் கேட்டபொழுது. ஜீவிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதன்பின்20 லட்சம் ரூபாய் வரதட்சணைகொண்டு வா இல்லை இறந்துவிடு என்று முரளி கூறியுள்ளார்.
இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளார் ஜீவிதா. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வேலைக்கு மின்சார ரயிலில் பயணித்தபொழுது ஓடும் ரயிலிலிருந்துஅடையாற்றில்குதித்து தற்கொலைசெய்துகொண்டார். அதன்பின்ஜீவிதாவின் அம்மாதன் மகளின் மரணத்திற்குமுரளி மற்றும் அவர் குடும்பத்தார்தான் காரணம் என்றும்,அவர்கள் என் மகளிடம்வரதட்சணைக் கேட்டுகொடுமை செய்தார்கள்என்றும்மாம்பலம் ரயில்வேபோலீசாரிடம்புகார் அளித்துள்ளார்.இதனை உறுதிப்படுத்த ஜீவிதாவின் கைபேசியை கைப்பற்றிய காவல்துறையினர் அதனை ஆராய்ந்து பார்த்தபொழுது அதில் முரளிஒருபெண்ணிடம் கணவரை விட்டு விலகுமாறு கூறிய ஆடியோ பதிவை கேட்ட போலீசார், முரளி வேறுபெண்ணுடன் தொடர்பிலிருந்ததைஉறுதி செய்தனர். தற்போது முரளிகைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் மற்றொருவருத்தமான செய்தி என்னவென்றால் 5ஆம் தேதி தன் குழந்தையின் முதல் பிறந்தநாளைக்கூட கொண்டாட முடியாமல்இறந்து விட்டார் ஜீவிதா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)